தரம் தாழ்த்தி கொள்ள விரும்பவில்லை-ஸ்டாலின்
சென்னை: தமிழகத்தில் புதிது புதிதாக கட்சிகள் உருவாகி அவை எல்லாம திமுகவை விமர்சிக்கின்றன. ஆனால் நாங்கள் பதிலுக்கு அவர்களை விமர்சித்து எங்களை தரம் தாழ்த்தி கொள்ள விரும்பவில்லை என உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னை தி.நகரில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின்,
தேர்தல் வாக்குறுதியில் சொன்ன அனைத்தையும் திமுக நிறைவேற்றி வருகிறது. கேட்காமலேயே பல நல்ல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார் முதல்வர் கருணாநிதி.
இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு சிறப்பான பட்ஜெட்டை பேராசிரியர் அன்பழகன் தாக்கல் செய்துள்ளார்.
அதிமுக ஆட்சியில் கல்விக்காக ரூ.4,110 கோடிதான் ஒதுக்கினார்கள். ஆனால் இன்று ரூ.8,000 ஆயிரம் கோடியை ஒதுக்கியுள்ளோம்.
இப்போது புதிது புதிதாக கட்சிகள் உருவாகி வருகின்றன. அவை எல்லாம திமுகவை விமர்சிக்கின்றன. ஆனால் நாங்கள் பதிலுக்கு அவர்களை விமர்சித்து எங்களை தரம் தாழ்த்தி கொள்ள விரும்பவில்லை. சொல்வதையும் செய்வோம், சொல்லாததையும் செய்வோம். அதுதான் திமுக.
போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண மேம்பாலங்களை கட்சியது திமுக அரசு தான். ஜெயலலிதா ஆட்சியில் எங்காவது பாலம் கட்ட முயற்சியாவது நடந்துண்டா?
சென்னையின் போக்குவரத்து நெரிசலை குறைக்க மெட்ரோ ரெயில் திட்டத்தை கொண்டு வரப் போகிறோம். சென்னையில் ஓடும் பல கால்வாய்கள் வழியாக பாலம் கட்டி போக்குவரத்து பிரச்சினைக்கு தீர்வு காண மாபெரும் திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது என்றார்.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications