திருடனாக மாறிய என்ஜீனியர்!
சென்னை: பி.இ படித்து முடித்த வாலிபர் ஒருவர் திருட்டுத் தொழிலுக்கு மாறியுள்ளார். சென்னை கல்லூரிக்குள் கத்தியுடன் புகுந்து ரகளையில் ஈடுபட்ட அவரை அவரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னையின் பிரபலமான பிரசிடென்சி கல்லூரி வேதியியல் ஆய்வுக் கூடத்தில் நள்ளிரவில் ஒருவர் பூட்டை உடைத்து உள்ளே நுழைய முயன்றார்.
சத்தம் கேட்டு அங்கு விரைந்த கல்லூரிக் காவலாளி அந்த நபரைப் பிடிக்க முயற்சித்தார். அப்போது அந்த நபர் தனது பையில் வைத்திருந்த கத்தியைக் காட்டி காவலாளியை குத்தி விடுவேன் என மிரட்டினார்.
மேலும், காவலாளியிடம் அந்த நபர் ஆவேசமாக பேசியபோது, முதல் வகுப்பில் பி.இ முடித்தேன். ஆனால் வேலை கிடைக்கவில்லை. என்னை விட குறைந்த மார்க் வாங்கியவன் எல்லாம் 50 ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்கு வேலை பார்க்கிறான். ஆனால் எனக்குத்தான் வேலை இல்லை.
என்னை நிராகரித்த கம்பெனிகளை நான் சும்மா விட மாட்டேன். குண்டு வைக்கப் போகிறேன். அதற்குத் தேவையான ரசாயானப் பொருளைத் திருடவே இங்கு வந்தேன் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து காவலாளி காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்குப் போன் செய்தார். உடனடியாக போலீஸார் விரைந்து வந்தனர். அவர்கள் வருவதற்குள் அந்த நபர் ஓடி விட்டார்.
இருப்பினும் திருவல்லிக்கேணி பகுதயில் வைத்து அவரை போலீஸார் மடக்கிப் பிடித்தனர்.
அவரிடம் விசாரணை நடத்தியபோது அவரது சோகக் கதை தெரிய வந்தது.
அவரது பெயர் சந்திரசேகரன் (வயது 24). திருச்சி அருகே உள்ள சமயபுரத்தை அடுத்த நரசிம்மமங்கலம் என்ற ஊரைச் சேர்ந்தவர். எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங் படித்துள்ள இவர் கடந்த 4 ஆண்டுகளாக வேலை கிடைக்காமல் அலைந்துள்ளார்.
சென்னை பூந்தமல்லியில் நண்பருடன் அறை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தார். மன உளைச்சலின் உச்சத்துக்குப் போன அவர் நேற்று முன்தினம் மாலையில் சென்னை மெரினா கடற்கரைக்கு வந்துள்ளார். அங்கு காற்று வாங்கிவிட்டு திருவல்லிக்கேணி சென்று மது அருந்தி உள்ளார்.
போதை மயக்கத்தில் பிரசிடென்சி கல்லூரிக்குள் நுழைந்து ரசாயனத்தை திருட முயற்சித்து உள்ளார். தனது குடும்பச் சொத்தை தனது தந்தையை ஏமாற்றி, உறவினர்கள் அபகரித்து விட்டதாகவும், தந்தையை ஏமாற்றிய உறவினர்களை குளோராபாம் மயக்க மருந்து கொடுத்து கடத்த திட்டமிட்டதாகவும், குளோரோபாம் மயக்க மருந்து திருடவே, கல்லூரிக்குள் நுழைந்ததாகவும் கூறினார்.
மேலும் தனக்கு வேலை தராத நிறுவனங்களை தாக்க குண்டு தயாரிக்க தேவையான ரசாயனங்களை திருட வந்ததாகவும் கூறியுள்ளார்.
இதையடுத்து அவரது அறைக்குச் சென்று சோதனை நடத்திய போலீசார் அவரை கைது செய்தனர்.
சந்திரசேகரின் தந்தை வெங்கடாசலபதி சொந்த ஊரில் நெசவுத் தொழில் செய்து வருகிறார். இவருக்கு தாயார் இல்லை. ஒரு அண்ணனும், தங்கையும் மட்டும் உள்ளனர்.
கிட்டத்தட்ட கற்றது தமிழ் படத்தில் வரும் ஜீவா கேரக்டரைப் போவே சந்திரசேகரனும் நடந்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு












Click it and Unblock the Notifications