தூங்கப் போன விமானி: சென்னை-டெல்லி விமானம் ரத்து
சென்னை: சென்னையில் இருந்து டெல்லிக்கு செல்ல இருந்த இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் விமானி, தனக்கு பணி நேரம் முடிந்துவிட்டதாகக் கூறி தூங்கப் போய்விட்டதால் ரத்து செய்யப்பட்டது. இதனால் அதில் பயணிக்க இருந்த 116 பேர் அவதிக்குள்ளாயினர்.
நேற்று முன் தினம் இரவு இச் சம்பவம் நடந்தது.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு டெல்லி கிளம்ப வேண்டிய இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் காலதாமதமாக இரவு 9.50 மணிக்கு தான் சென்னை வந்து சேர்ந்தது.
இதையடுத்து அந்த விமானம் இரவு 10.40 மணிக்கு டெல்லி புறப்படும் என அறிவிக்கப்பட்டது. அதில் பயணிக்க 116 பேர் காத்திருந்தனர்.
இந் நிலையில் விமானி 'எனக்கு பணி நேரம் முடிந்து விட்டது. இனி நான் விமானத்தை இயக்க மாட்டேன்' என்று கூறிவிட்டு ஓய்வறைக்கு போய் படுத்துவிட்டார்.
விமானத்தை இயக்க வேறு விமானி இல்லாததால் டெல்லி விமானம் ரத்து செய்யப்பட்டது. இதனால் பயணிகள் ஆத்திரம் அடைந்து கோஷமிட்டனர். இதையடுத்து அதிகாரிகள் விரைந்து வந்து பயணிகளை சமாதானம் செய்தனர்.
விமானம் ரத்து செய்யப்பட்டதால் பெரும்பாலான பயணிகள் வீடுகளுக்குத் திரும்பினர். சில பயணிகளை மட்டும் இந்தியன் ஏர்லைன்ஸ் நிர்வாகம் ஹோட்டலில் தங்க வைத்தது.
பின்னர் நேற்று காலை 6.40 மணிக்குத்தான் அந்த விமானம் வேறு ஒரு விமானி மூலம் டெல்லி புறப்பட்டு சென்றது.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications