சட்டசபையில் மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு

சட்டசபையில் இன்று மார்க்சிஸ்ட் உறுப்பினர் பாலபாரதி ஒரு சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தைக் கொண்டு வந்தார். அப்போது, மே தினத்தையொட்டி ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஹூண்டாய் கார் ஆலை முன்பு சங்கக் கொடியை ஏற்ற முயன்ற சிஐடியூ தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியுள்ளனர்.
இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. தொழிற்சங்கத்தினர் மீது போலீஸார் தடியடி நடத்துவது இது நான்காவது முறையாகும்.
தொழிற்சங்கத்தினர் ஏற்றிய கொடியை அகற்றிய போலீஸார், 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்களையும், தொழிற்சங்கத்தினரையும், கைது செய்துள்ளனர்.
இது உழைக்கும் வர்க்கத்தினரின் உரிமைகளை நசுக்கும் முயற்சியாகும். உழைக்கும் மக்களின் உரிமைகளை காக்க அரசு முன்வர வேண்டும். கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும்.
மறைந்த முதல்வர் அண்ணா, உழைக்கும் வர்க்கத்தினருக்கு ஆதரவாக திகழ்ந்தார். உழைக்கும் வர்க்கத்தினரின் உரிமைகள் குறித்து ஒரு நூலையும் எழுதியுள்ளார் என்றார்.
இதற்குப் பதிலளித்த மின்சாரத் துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி, திமுக அரசு எப்போதுமே உழைக்கும் வர்க்கத்தினரின் உரிமைகளைக் காக்கத் தவறியதில்லை.
ஹூண்டாய் ஆலை அருகே நடந்த பிரச்சினை என்னவென்றால் அரசுக்குச் சொந்தமான சிப்காட் வளாகத்தில் கொடியேற்ற தொழிலாளர்கள் முயன்றுள்ளனர். எனவேதான் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்ளை விடுவிப்பது குறித்து அரசு பரிசீலிக்கும் என்றார்.
ஆனால் அமைச்சரின் பதில் திருப்தி அளிக்கவில்லை என்று கூறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications