மலேசியாவில் சித்ரவதை: வாலிபருக்கு மதுரையில் சிகிச்சை
மதுரை: மலேசியாவில் வேலைக்குச் சென்று சித்ரவதைக்கு ஆளான தமிழக வாலிபர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சிவகங்கை மாவட்டம், கல்லல் அருகே உள்ள கொடுங்குளத்தைச் சேர்ந்த சின்னக்கருப்பன் - செல்லம்மாள் தம்பதியின் மகன் பிரபு (21). எட்டாம் வகுப்பு வரை படித்துள்ளார்.
ரூ.85,000 செலவு செய்து ஏஜென்ட் காளைலிங்கம் என்பவர் மூலம் பிரபு மலேசியாவுக்கு சென்றார். அங்கு கார்களை கழுவி சுத்தப்படுத்தும் ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். முதலில் ரூ.8,000 சம்பளம் தரப்படும் என்று கூறப்பட்டது.
ஆனால் பேசியபடி சம்பளம் தரவில்லை. தங்கும் இடமும், சாப்பாடும் மட்டுமே கொடுக்கப்பட்டது. சம்பளம் பற்றி கேட்டபோதெல்லாம் பிரபுவை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் பிரபுவுக்கு உடல் முழுவதும் காயம் ஏற்பட்டு அவதியடைந்து வந்தார்.
அப்போது மற்றொரு நிறுவனத்தில் வேலை பார்க்கும் தேவகோட்டை அருகே உள்ள கோட்டூரை சேர்ந்த ரவி என்பவருடன், பிரபுவுக்கு பழக்கம் ஏற்பட்டது. அவர் மூலம் தன்னுடைய பெற்றோரை தொடர்பு கொண்ட பிரபு, தன்னுடையை நிலை குறித்து தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து அவருத பெற்றோர் பிரபுவுக்கு ரூ.12,000 அனுப்பி வைத்தனர். பிரபு, அந்த பணத்தை வைத்து கடந்த ஜூலை 21ம் தேதி கல்லல் வந்து சேர்ந்தார். உடல் முழுவதும் பலத்த காயங்களுடன் அவதிப்பட்டு வந்தார்.
பின்னர் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பிரபுவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பிரபு கூறுகையில், மலேசியா சென்றால் நிறைய சம்பாதிக்கலாம் என்று சென்றேன். ஆனால் கூறியபடி சம்பளம் கொடுக்காமல் கொடுமை செய்தனர்.
என்னைப் போல இன்னும் ஏராளமானோர் மலேசியாவில் சிரமப்பட்டு வருகின்றனர். என்னுடன் வேலை பார்த்த நத்தத்தைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவரும் கொத்தடிமை போல் இருக்கிறார். அவரையும் மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications