ஏழைகளிடம் ரூ. 1.5 கோடி மோசடி - 2 தம்பதிகள் கைது
சென்னை: குறைந்த வட்டிக்குக் கடன் பெற்றுத் தருவதாக கூறி ஏழை எளிய பெண்களிடம் ரூ. 1.5 கோடி அளவுக்கு மோசடி செய்த 2 தம்பதிகளை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை டிபி சத்திரம் பகுதியை சேர்ந்தவர் சீதாலட்சுமி (35). இவர் தான் சமூகசேவகி என்றும் தனக்கு பல அறக்கட்டளைகள் தெரியமென்றும் அப்பகுதியில் இருந்தவர்களிடம் கூறி வந்துள்ளார்.
மேலும், அந்த அறக்கட்டளைகள் மூலம் நலத்திட்ட உதவிகளை வாங்கி வருவதாகவும் கூறியுள்ளார். இதுதவிர குறைந்த வட்டிக்குக் கடன் வாங்கித் தருவதாகவும் கூறியுள்ளார்.
இதில் மயங்கிய பல பெண்களிடம் ரூ. 5 ஆயிரம் முதல் ரூ. 15 ஆயிரம் வரை கமிஷனாக பெற்று கொண்டுள்ளார்.
அவர்களுக்கு நவயுகா அறக்கட்டளையிடம் இருந்து ரூ. 50 ஆயிரம் முதல் ரூ. 1.5 லட்சம் வரை வாங்கி தருவதாக கூறியுள்ளார். ஆனால், சொன்னபடி சீதாலட்சுமி பணம் வாங்கி தரவில்லை.
நவயுகா அறக்கட்டளையை சீதாலட்சுமியுடன் இணைந்து, அவரது கணவரான பால் வியாபாரி சிவசண்முகம், அதே பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார், அவரது மனைவி அனு, வேலு மற்றும் அவரது மனைவி சரளா ஆகியோர் நடத்தி வந்துள்ளனர்.
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுத் திட்டம் என்ற பெயரிலும் ஒரு அமைப்பை இந்தக் கும்பல் வைத்திருந்தது. சிவசண்முகத்தின் வீட்டில்தான் இந்த அலுவலகம் இயங்கி வந்தது.
இவர்களிடம் கிட்டத்தட்ட 900 பேர் பணம் கட்டியுள்ளனர்.
ஒரு மாதமாகியும் கடன் வராததால் சீதாலட்சுமியிடம் கேட்டனர். இதையடுத்து திருவிக பூங்காவில் அனைவரையும் கூட்டி வைத்து விளக்கம் கொடுத்துள்ளார்
சீதாலட்சுமி.
அப்போது கடன் தரும் நிறுவனத்தைச் சேர்ந்த உயர் அதிகாரி என்று ஒருவரை கூட்டத்தில் அறிமுகப்படுத்தியுள்ளனர். மேலும், சிலருக்கு கடன் பெறத் தகுதி இல்லை என்று கூறி அவர்கள் கொடுத்த ரூ. 5000 பணத்தையும் திருப்பிக் கொடுத்து விட்டனர்.
பரவாயில்லையே ரொம்ப நியாயமாக இருக்கிறார்களே என்று நினைத்த மேலும் பலரும் அந்த மோசடிக் கும்பலிடம் கடன் கோரி விண்ணப்பித்து பணத்தைக்க ட்டியுள்ளது.
இந்த நிலையில் விண்ணப்பித்துப் பணம் கட்டியவர்களுக்கு அதற்கான வட்டித் தொகை 2 நாட்களுக்கு முன்பு கிடைக்கும் எனக் கூறியிருந்தார் சீதாலட்சுமி.
இதையடுத்து வீட்டின் முன்பு மக்கள் குவிந்தனர். ஆனால் சீதாலட்சுமி ஏதோ காரணங்களைக் கூறி மழுப்பியுள்ளார். மேலும், அவர், சிவசண்முகம், செந்தில்குமார், அனு ஆகியோர் தப்ப முயன்றுள்ளனர்.
உஷாரான பொதுமக்கள் நால்வரையும் பிடித்து டிபி சத்திரம் போலீஸில் ஒப்படைத்தனர்.
போலீஸார் நான்கு பேரையும் கைது செய்தனர். தலைமறைவாகி விட்ட வேலு - சரளாவை தேடி வருகின்றனர்.
இந்த பலே ஜோடிகள் ஏழை எளிய மக்களிடம் பல கோடி அளவுக்கு மோசடி செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
இந்த வழக்கு தற்போது மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.
-
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications