சென்னை சிறுமியிடம் செக்ஸ் சில்மிஷம்: 2 பேர் கைது
சென்னை: சென்னையில் சிறுமியிடம் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்ட இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை புளியந்தோப்பு நரசிம்மன் நகரைச் சேர்ந்த சாமுவேல் என்பவரின் மகள் அஜீதா (வயது 10- பெயர் மாற்றப்பட்டுள்ளது).
இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் சம்சுதீன் (17), டேவிட் (14) ஆகிய இருவரும் சிறுமியை ஏமாற்றி அழைத்துச் சென்று அருகில் உள்ள வீட்டில் வைத்து செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மகளைக் காணாமல் தேடிய சிறுமியின் தாயார் தேடிக் கொண்டு அந்த வீட்டுக்குள் நுழைந்தபோது இரு பாவிகளின் செயலைக் கண்டு அதிர்ந்து கூச்சலிட்டார்.
இதையடுத்து அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து இரு வாலிபர்களையும் பிடித்து அடித்து, உதைத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
பேசின்பிரிட்ஜ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். இருவரும் மைனர்கள் என்பதால் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.