2-ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு: விவாதம் நடத்த அதிமுக கோரிக்கை
டெல்லி: 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்துள்ளதாகவும், அது குறித்து விரிவான விவாதம் நடத்த வேண்டும் என்றும் நாடாளுமன்றத்தில் அதிமுக கோரிக்கை விடுத்தது.
மக்களவையில் கேள்வி நேரத்தின்போது பேசிய அதிமுக எம்பி தம்பிதுரை, இப்போது 3-ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் மூலம் அரசுக்கு ரூ. 70,000 கோடி வருமானம் கிடைத்துள்ளது.
ஆனால், 2008ம் ஆண்டில் 2-ஜி ஸ்பெக்ட்ரம் மிகக் குறைந்த விலைக்கு விற்கப்பட்டது. இதனால் அரசுக்கு ரூ. 1 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விரிவான விவாதம் நடத்தப்பட வேண்டும் என்றார்.
இதற்கு பதிலளித்த தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா, 2-ஜி ஒதுக்கீட்டில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. அதிமுக கூறும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் அர்த்தமற்றவை. குற்றம் சுமத்துவதும் அதற்கு பதிலளிப்பதும் அரசியலில் சகஜம்.
முந்தைய பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஏற்படுத்திய விதிமுறைகளின்படிதான் அந்த 2-ஜி ஸ்பெக்டரம் விற்கப்பட்டது.
லைசென்ஸ் வழங்குவதற்கான விதிமுறைகளை தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் (டிராய்) வகுத்து அளித்திருந்தது. இந்த விதிகள்படிதான் தான் ஒதுக்கீடும் நடந்தது.
3-ஜி ஒதுக்கீடு தொடர்பான வழிகாட்டுதல் முடிவடைந்து ஏல விற்பனை மே 19, 2010ல் தான் முடிவடைந்தது. ஏலம் மூலம் ஒதுக்கீடு பெற்ற அனைத்து நிறுவனங்களுக்கும் ஸ்பெக்டரம் செப்டம்பர் 1ம் தேதிக்குள் ஒதுக்கப்படும்.
அதே நேரத்தில் பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் ஆகிய நிறுவனங்களுக்கு தனியார் துறைக்கு ஒதுக்கீடு செய்யும் முன்பே 3-ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு விட்டது.
எம்டிஎன்எல் நிறுவனம் டெல்லி, மும்பையிலும் பிஎஸ்என்எல் நிறுவனம் 463 நகரங்களிலும் 3-ஜி சேவையைத் தொடங்கியுள்ளன. அனைத்து நிறுவனங்களும் 3-ஜி சேவைகளைத் தொடங்கும்போது கட்டணமும் குறையும் என்றார் ராசா.
செல்போன் கோபுரங்கள் கதிர்வீச்சு விவகாரம்:
இந் நிலையில் செல்போன் டவர்களில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சுகளால் கடுமையான பாதிப்புகள் ஏற்படுமென்று மருத்துவர்கள் எச்சரித்து வருகின்றனர்.
இது குறித்து அமைச்சர் ராசா கூறுகையில், செல்போன் கோபுரங்கள் தொலைத் தொடர்பு துறையின் உரிய அனுமதியை பெற்றபின்தான் அமைக்கப்பட்டு வருகின்றன. அதுதொடர்பான விதிமுறைகளை மீறியதாக இதுவரை எந்த ஒரு புகாரும் வரவில்லை.
இந்த கோபுரங்கள் அமைக்கப்படுவதற்கு முன்பாக, சம்பந்தப்பட்ட நகரசபை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதியை அந்த நிறுவனங்கள் பெற வேண்டும்.
சில உள்ளாட்சி அமைப்புகளிடம் இருந்து சேவை நிறுவனங்கள் விதிமுறைகளை சரிவர பின்பற்றவில்லை என்று புகார்கள் வந்துள்ளன.
இந்த கோபுரங்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சினால் சுகாதாரக்கேடு ஏற்படுவதாகவும் அரசுக்கு புகார்கள் வந்துள்ளன. அதைத் தடுப்பதற்காக, சர்வதேச விதிமுறைகளின்படி கோபுரங்களை அமைக்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications