அடுத்தமுறை திமுகவை ஆட்சிக்கு வர விட மாட்டேன்-விஜயகாந்த்

காஞ்சிபுரத்தில் தேமுதிக சார்பில் நேற்று பக்ரீத் கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் கட்சித் தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டு முஸ்லீ்ம்களுக்கு உதவிப் பொருட்களை வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில்,
திமுக ஊழலில் ஊறியுள்ளது. மத்திய அமைச்சர் ராசாவின் ஊழலால் உலக அரங்கில் இந்தியாவுக்கு பெரும் தலைகுனிவு ஏற்பட்டுள்ளது. விலைவாசி உயர்ந்து கொண்டே செல்கிறது. ஆனால் தமிழக முதல்வர் மக்களுக்கு வாங்கும் சக்தி அதிகரித்துவிட்டது என்று சொல்கிறார். அவர்களுக்கு வேண்டுமானால் வாங்கும் சக்தி அதிகரித்திருக்கலாம், மக்கள் நிலை மோசமாக உள்ளது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே குடும்ப நல நிதியாக ரூ. 500 ஒவ்வொரு குடும்பத்துக்கும் வழங்க வேண்டும் என்றும் நான் கோரிக்கைவிடுத்தேன். ஆனால் தமிழக அரசு அதைச் செய்யவில்லை. உத்தரப்பிரதேசத்தில் மாயாவதி அதை அமல்படுத்துகிறார்.
விஜயகாந்துக்கு பதவி ஆசை வந்துவிட்டதாக கூறுகின்றனர். இவர்களுக்கு பதவி ஆசை இல்லாமலா தந்தை முதல்வர் பதவியிலும், மகன் துணை முதல்வர் பதவியிலும் இருக்கிறார்கள்? மூத்த அமைச்சர் அன்பழகனுக்கு துணை முதல்வர் பதவி கொடுக்க வேண்டியதுதானே; இல்லையென்றால் ஆற்காடு வீராசாமிக்கு கொடுக்க வேண்டியதுதானே?
காங்கிரஸை வளர விடமாட்டேன் என்று அண்ணா சபதம் எடுத்து பல்வேறு கூட்டங்களில் பேசி வந்தார். தமிழக முதல்வர் தனது பதவி ஆசையால்தான் காங்கிரஸ் பக்கம் சாய்ந்துள்ளார். மக்களை திசை திருப்ப விவசாயிகளுக்கு இலவச மோட்டார் வழங்கப்போவதாக கூறுகிறார். மின்சாரமே ஒழுங்காக வருவதில்லை, இலவச மோட்டாரை வைத்துக் கொண்டு என்ன செய்வது?
நான் திமுகவை விமர்சிப்பதால் அதிமுகவுடன் கூட்டணி வைக்க உள்ளதாக பத்திரிகையாளர்கள் கணக்கு போடுகின்றனர். நான் கூட்டணிக்கு அவசரப்பட மாட்டேன். அதை பிறகு பார்த்துக் கொள்வோம். ஆனால், அடுத்த முறை திமுகவை ஆட்சிக்கு வர விடமாட்டேன்.
மக்கள் வாக்களிக்கும்போது சிந்தித்து வாக்களிக்க வேண்டும். நான் பணத்துக்காக அரசியலுக்கு வரவில்லை. மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பதற்காக அரசியலுக்கு வந்துள்ளேன். நான் எந்தச் சாதியும், மதமும் பார்ப்பதில்லை. மக்கள் வாக்களிக்கும்போது ஊழல்வாதிகளை இனம் கண்டு அவர்களை புறந்தள்ள வேண்டும் என்றார் விஜயகாந்த்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications