அடுத்தமுறை திமுகவை ஆட்சிக்கு வர விட மாட்டேன்-விஜயகாந்த்

காஞ்சிபுரத்தில் தேமுதிக சார்பில் நேற்று பக்ரீத் கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் கட்சித் தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டு முஸ்லீ்ம்களுக்கு உதவிப் பொருட்களை வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில்,
திமுக ஊழலில் ஊறியுள்ளது. மத்திய அமைச்சர் ராசாவின் ஊழலால் உலக அரங்கில் இந்தியாவுக்கு பெரும் தலைகுனிவு ஏற்பட்டுள்ளது. விலைவாசி உயர்ந்து கொண்டே செல்கிறது. ஆனால் தமிழக முதல்வர் மக்களுக்கு வாங்கும் சக்தி அதிகரித்துவிட்டது என்று சொல்கிறார். அவர்களுக்கு வேண்டுமானால் வாங்கும் சக்தி அதிகரித்திருக்கலாம், மக்கள் நிலை மோசமாக உள்ளது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே குடும்ப நல நிதியாக ரூ. 500 ஒவ்வொரு குடும்பத்துக்கும் வழங்க வேண்டும் என்றும் நான் கோரிக்கைவிடுத்தேன். ஆனால் தமிழக அரசு அதைச் செய்யவில்லை. உத்தரப்பிரதேசத்தில் மாயாவதி அதை அமல்படுத்துகிறார்.
விஜயகாந்துக்கு பதவி ஆசை வந்துவிட்டதாக கூறுகின்றனர். இவர்களுக்கு பதவி ஆசை இல்லாமலா தந்தை முதல்வர் பதவியிலும், மகன் துணை முதல்வர் பதவியிலும் இருக்கிறார்கள்? மூத்த அமைச்சர் அன்பழகனுக்கு துணை முதல்வர் பதவி கொடுக்க வேண்டியதுதானே; இல்லையென்றால் ஆற்காடு வீராசாமிக்கு கொடுக்க வேண்டியதுதானே?
காங்கிரஸை வளர விடமாட்டேன் என்று அண்ணா சபதம் எடுத்து பல்வேறு கூட்டங்களில் பேசி வந்தார். தமிழக முதல்வர் தனது பதவி ஆசையால்தான் காங்கிரஸ் பக்கம் சாய்ந்துள்ளார். மக்களை திசை திருப்ப விவசாயிகளுக்கு இலவச மோட்டார் வழங்கப்போவதாக கூறுகிறார். மின்சாரமே ஒழுங்காக வருவதில்லை, இலவச மோட்டாரை வைத்துக் கொண்டு என்ன செய்வது?
நான் திமுகவை விமர்சிப்பதால் அதிமுகவுடன் கூட்டணி வைக்க உள்ளதாக பத்திரிகையாளர்கள் கணக்கு போடுகின்றனர். நான் கூட்டணிக்கு அவசரப்பட மாட்டேன். அதை பிறகு பார்த்துக் கொள்வோம். ஆனால், அடுத்த முறை திமுகவை ஆட்சிக்கு வர விடமாட்டேன்.
மக்கள் வாக்களிக்கும்போது சிந்தித்து வாக்களிக்க வேண்டும். நான் பணத்துக்காக அரசியலுக்கு வரவில்லை. மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பதற்காக அரசியலுக்கு வந்துள்ளேன். நான் எந்தச் சாதியும், மதமும் பார்ப்பதில்லை. மக்கள் வாக்களிக்கும்போது ஊழல்வாதிகளை இனம் கண்டு அவர்களை புறந்தள்ள வேண்டும் என்றார் விஜயகாந்த்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications