கடையம் பகுதியில் சிறுகிழங்கு விளைச்சல் அமோகம்: ஆந்திரா, கேரளாவுக்கு விற்பனை
பாவூர்சத்திரம்: கடையம் பகுதியில் இந்த ஆண்டு சிறுகிழங்கு விளைச்சல் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமாக உள்ளது. இதனால் கிழங்குகள் தமிழகத்தின் மற்ற பெரு நகரங்களுக்கும், ஆந்திரா, கேரளா மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது.
நெல்லை மாவட்டத்தில் கடனாநதி, ராமநதி மூலம் பாசனம் பெறும் கடையம், ஆழ்வார்குறிச்சி, ஆம்பூர், மந்தீயூர், தூப்பாக்குடி, பாப்பான்குளம் மற்றும் பல இடங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் சிறுகிழங்கு பயிரிடப்பட்டு வருகிறது. டிசம்பர், ஜனவரி மாதங்களில் மகசூல் எடுக்கப்படும்.
இந்த ஆண்டு கூடுதல் மகசூல் கிடைத்துள்ளதால் பாவூர்சத்திரம் சந்தைக்கு தினமும் 1500 முதல் 2 ஆயிரம் மூடைகள் வரை சிறுகிழங்கு வருகிறது. இங்கு இவை தரம் பிரிக்கப்பட்டு ஏலம் மூலம் விற்கப்படுகிறது. முதல் தரம் கிலோ ரூ.15 வரையிலும், சிறிய ரக கிழங்குகள் ரூ.5 முதல் ரூ.10 வரையிலும் விற்பனையாகிறது. கடந்த ஆண்டு மகசூல் குறைவால் கிலோ ரூ.20 வரை விற்பனையானது. முன்பு கடையம் பகுதியில் விளையும் சிறுகிழங்குகள் நெல்லை டவுன் நயினார்குளம் மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்படும்.
ஆனால் கடந்த 4 ஆண்டுகளாக பாவூர்சத்திரம் சந்தைக்கு கொண்டு வரப்படுகிறது. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்தாண்டு வரத்து அதிகரித்துள்ளதால் இங்கிருந்து சிறு கிழங்குகள் தூத்துக்குடி, நாகர்கோவில், ஒட்டன்சத்திரம், மதுரை, திருச்சி, கோவை போன்ற நகரங்களுக்கும், ஆந்திரா, கேரளா மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது.
குறிப்பாக கேரள வியாபாரிகள் இங்கு வந்து அதிகளவில் கொள்முதல் செய்கின்றனர். இதனால் பாவூர்சத்திரம் சந்தை தினமும் மாலையில் வியாபாரிகள், விவசாயிகள், தொழிலாளர்கள், வாடிக்கையாளர்களுடன் பரபரப்பாக காணப்படுகிறது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications