ஆண்டிப்பட்டிக்கு ஜெ.டாட்டா-கவுண்டம்பாளையம் அல்லது ஸ்ரீரங்கத்தில் போட்டி?
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, இந்த முறை ஆண்டிப்பட்டியில் போட்டியிட மாட்டார் என்று அதிமுக வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன. ஸ்ரீரங்கம் அல்லது கோவை மாவட்டம் கவுண்டம்பாளையத்தில் அவர் போட்டியிடக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சாதகமான தொகுதி என்பதை பாதுகாப்பான தொகுதி எது என்பதில் இப்போது தலைவர்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். முதல்வர் கருணாநிதி சென்னையில் போட்டியிட மாட்டார், திருவாரூரில் நிற்கப் போகிறார், தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று பலவிதமாக தகவல்கள் வருகின்றனர்.
இந்த நிலையில் ஜெயலலிததா குறித்தும் செய்திகள் வரத் தொடங்கியுள்ளன. அவர் சமீப காலமாக ஆண்டிப்பட்டியில் போட்டியிட்டு வருகிறார். ஆனால் இந்த முறை அங்கு போட்டியிட அவர் விரும்பவில்லை என்று தெரிகிறது. மாறாக, கோவை மாவட்டம் கவுண்டம் பாளையம் அல்லது திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் போட்டியிடலாம் என்று தெரிகிறது. அல்லது இரு தொகுதிகளிலும் கூட அவர் போட்டியிடலாமாம்.
கவுண்டம்பாளையம் அதிமுக கோட்டையான கொங்கு மண்டலத்தில் அமைந்துள்ள தொகுதி. மாநிலத்தின் பிற பகுதிகளில் எந்த அலை அடித்தாலும் கொங்கு மண்டலத்தில் மட்டும் அதிமுக அலை பலமாகவே வீசும். கடந்த தேர்தலில் கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் 9 தொகுதிகளில் அதிமுக வென்றது. ஒரு தொகுதியில் மட்டுமே திமுக வெற்றி பெற்றது நினைவிருக்கலாம். லோக்சபா தேர்தலிலும் கூட இங்கு அதிமுக ஆதரவு அலைதான் பலமாக வீசியது.
எனவே கோவை பக்கம் ஜெயலலிதா போட்டியிடுவது பாதுகாப்பானதாக அதிமுகவினர் கருதுகின்றனர். அதேசமயம், அம்மாவின் மனதில், ஸ்ரீரங்கம் இருப்பதாக கூறப்படுகிறது. அதிமுகவினரின் விருப்பம் கோவை பக்கம் இருப்பதாலும், அம்மாவின் மனது ஸ்ரீரங்கம் இருப்பதாலும், இந்த முறை ஆண்டிப்பட்டியில் ஜெயலலிதா போட்டியிட மாட்டார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
இருப்பினும் ஜெயலலிதா என்ன முடிவை இறுதியாக எடுப்பார் என்பது உறுதியாகத் தெரியவில்லை.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications