உணவு பொருள் விலை உயர்வால் அக்டோபரில், பொது பணவீக்கம் 9.73 சதவீதமாக உயர்வு
டெல்லி: உணவு தானியங்கள் மற்றும் எரிபொருள்கள் விலை உயர்வால், நடப்பு 2011-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் பொது பணவீக்கம் 9.73 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதேபோல் உணவு பணவீக்கம் 11.06 சதவீதமாக உயர்ந்துள்ளது.
முந்தைய செப்டம்பர் மாதத்தில் 9.72 சதவீத இருந்த பொதுப்பணவீக்கம் 9.73 சதவிகித்தை எட்டியுள்ளது. இதே போன்று செப்டம்பர் மாதத்தில் 9.23 சதவீதமாக இருந்த உணவு பணவீக்கம், அக்டோபரில் இரட்டை இலக்கமான 11.06 சதவீதமாக உயர்ந்துள்ளது.
உணவுப்பொருள் பணவீக்க உயர்வு குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய நிதி அமைச்சர், பிரணாப் முகர்ஜி, காய்கறிகள் மற்றும் பருப்புகளின் விலை உயர்வு அதிகரித்துள்ளதே உணவுப்பணவீக்கம் 11.6 சதவிகிதமாக உயர்ந்துள்ளதற்கு காரணம் என்று தெரிவித்தார்.
உணவுப் பணவீக்கம் மீண்டும் இரட்டை இலக்கத்தில் உயர்ந்திருப்பது கவலையளிக்கிறது. இது மிகவும் மோசமான ஒரு நிலையாகும் என்று கூறியுள்ளார். அக்டோபர் மாதத்தில் திருவிழாக்காலங்கள் அதிகம் இருந்தத்தால் உணவுப்பொருட்களின் தேவை அதிகரித்து, விலையும் உயர்ந்தது. இதுவும் பணவீக்க உயர்வுக்கு ஒரு காரணம் என்றும் நிதி அமைச்சர் தெரிவித்தார்.
பருப்பு உற்பத்தி குறைவு
கடந்த மாதத்தில் பருவ மழை காரணமாக சந்தைக்கு காய்கறிகளின் வரத்து குறைந்தது. இதனால் விலை வாசி உயர்வு ஏற்பட்டது. தற்பொழுது பருவ மழை குறைந்துள்ளதால் விளைச்சல் அதிகரித்து உணவுப் பொருட்களில் பணவீக்கம் குறைய வாய்ப்புள்ளதாகவும் நிதி அமைச்சர் பிரணாப்முகர்ஜி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இருப்பினும் கரீப் பருவத்தில் பருப்பு உற்பத்தி 6.43 மில்லியன் அளவாக குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டைக்காட்டிலும் 10 சதவிகிதம் குறைவாகும்.
-
பெட்ரோல், டீசல் விலையை 2வது முறையாக உயர்த்திய ஷெல்.. தனியார் நிறுவனங்கள் அடித்தடுத்து அறிவிப்பு..!! -
ஈரான் போர் எதிரொலி.. மத்திய அரசின் அடுத்த வரி குறைப்பு.. பெட்ரோகெமிக்கல் பொருட்களுக்கு ஜீரோ வரி..! -
விமான எரிபொருள் விலை விண்ணை முட்டியது.. கட்டணம் பல மடங்கு உயர வாய்ப்பு! -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!!












Click it and Unblock the Notifications