கடனை திருப்பி செலுத்தாத 100 'டாப்' தொழிலதிபர்களின் பட்டியலை வெளியிடுமா ரிசர்வ் வங்கி?

பெரிய நிறுவனங்களின் தொழிலதிபர்கள் பலர் பொதுத்துறை வங்கிகளில் பல கோடி ரூபாய் கடனை பெற்றுக்கொண்டு திருப்பி செலுத்தாமல் காலம் தாழ்த்துவதாகவும், இதனால் வாராக்கடன்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் மத்திய நிதிஅமைச்சகம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில்
ஹரியானாவைச் சேர்ந்த கபூர் என்பவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் தாக்கல் செய்த மனு ஒன்றை தாக்கல் செய்தார். பொதுத்துறை வங்கிகளில் கடன் பெற்றுவிட்டு திருப்பி செலுத்தாமல் உள்ளவர்களின் பெயர்களை தெரிவிக்க வேண்டும் என்று தமது மனுவில் கோரியிருந்தார்.
இதனை ஏற்றுக்கொண்ட மத்திய தகவல் ஆணையம் கடனை திருப்பி செலுத்தாதவர்களின் பெயர்களை இணையதளத்தில் வெளியிடுமாறு மத்திய ரிசர்வ் வங்கிக்கு உத்தரவிட்டது. ஆனால் அந்த விவரங்களை பகிரங்கமாக வெளியிட மத்திய ரிசர்வ் வங்கி ஆட்சேபம் தெரிவித்துள்ளது. நாட்டின் பொருளாதார நிலையில் இது பாதகமான விளைவுகளை ஏற்படுத்தி விடும் என்று தெரிவித்துள்ளது.
100 பேரின் பட்டியல் வெளியிட வேண்டும்
மத்திய தகவல் ஆணையத்தின் தலைவர் ஷைலேஸ் காந்தி இதனை ஏற்றுக் கொண்டபோதிலும், அதிக அளவு கடன் வாங்கியுள்ள பெரும் தொழிலதிபர்களில் முதல் 100 பேர் அடங்கிய பட்டியலை கண்டிப்பாக ரிசர்வ் வங்கி வெளியிட வேண்டுமென்று கூறியுள்ளார். அவர்கள் வாங்கியுள்ள கடன் அளவு, அதற்கான வட்டி, அவர்கள் செய்யும் தொழில், முகவரி உள்ளிட்ட விவரங்களை டிசம்பர் 31-ம் தேதிக்குள் ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில் வெளியிட வேண்டும். ஆண்டுதோறும் இந்த விவரங்களை சரியாகப் பராமரிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கிக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
-
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications