கடனை திருப்பி செலுத்தாத 100 'டாப்' தொழிலதிபர்களின் பட்டியலை வெளியிடுமா ரிசர்வ் வங்கி?

பெரிய நிறுவனங்களின் தொழிலதிபர்கள் பலர் பொதுத்துறை வங்கிகளில் பல கோடி ரூபாய் கடனை பெற்றுக்கொண்டு திருப்பி செலுத்தாமல் காலம் தாழ்த்துவதாகவும், இதனால் வாராக்கடன்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் மத்திய நிதிஅமைச்சகம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில்
ஹரியானாவைச் சேர்ந்த கபூர் என்பவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் தாக்கல் செய்த மனு ஒன்றை தாக்கல் செய்தார். பொதுத்துறை வங்கிகளில் கடன் பெற்றுவிட்டு திருப்பி செலுத்தாமல் உள்ளவர்களின் பெயர்களை தெரிவிக்க வேண்டும் என்று தமது மனுவில் கோரியிருந்தார்.
இதனை ஏற்றுக்கொண்ட மத்திய தகவல் ஆணையம் கடனை திருப்பி செலுத்தாதவர்களின் பெயர்களை இணையதளத்தில் வெளியிடுமாறு மத்திய ரிசர்வ் வங்கிக்கு உத்தரவிட்டது. ஆனால் அந்த விவரங்களை பகிரங்கமாக வெளியிட மத்திய ரிசர்வ் வங்கி ஆட்சேபம் தெரிவித்துள்ளது. நாட்டின் பொருளாதார நிலையில் இது பாதகமான விளைவுகளை ஏற்படுத்தி விடும் என்று தெரிவித்துள்ளது.
100 பேரின் பட்டியல் வெளியிட வேண்டும்
மத்திய தகவல் ஆணையத்தின் தலைவர் ஷைலேஸ் காந்தி இதனை ஏற்றுக் கொண்டபோதிலும், அதிக அளவு கடன் வாங்கியுள்ள பெரும் தொழிலதிபர்களில் முதல் 100 பேர் அடங்கிய பட்டியலை கண்டிப்பாக ரிசர்வ் வங்கி வெளியிட வேண்டுமென்று கூறியுள்ளார். அவர்கள் வாங்கியுள்ள கடன் அளவு, அதற்கான வட்டி, அவர்கள் செய்யும் தொழில், முகவரி உள்ளிட்ட விவரங்களை டிசம்பர் 31-ம் தேதிக்குள் ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில் வெளியிட வேண்டும். ஆண்டுதோறும் இந்த விவரங்களை சரியாகப் பராமரிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கிக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications