For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் ஜஸ்வந்த்சிங் போட்டி: அத்வானி அறிவிப்பு

By Mathi
Google Oneindia Tamil News

Jaswant Singh
டெல்லி: குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக முன்னாள் அமைச்சர் ஜஸ்வந்த்சிங் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் இன்று தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கூட்டணியில் இடம்பெற்றுள்ள அனைத்துக் கட்சிகளும் கலந்து கொண்டன. இக்கூட்டத்தில் ஜஸ்வந்த்சிங் அல்லது நஜ்மாஹெப்துல்லாவை வேட்பாளராக நிறுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. பின்னர் ஒருமனதாக ஜஸ்வந்த்சிங்கை நிறுத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எல்.கே.அத்வானி, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் துணை ஜனாதிபதி தேர்தலில் ஜஸ்வந்த்சிங் போட்டியிடுவார் என்று கூறினார்.

இதைத் தொடர்ந்து குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஹமீத் அன்சாரியை எதிர்த்து களம் இறங்குகிறார் ஜஸ்வந்த்சிங்.

English summary
The NDA has decided to field senior BJP leader Jaswant Singh for the post of Vice-President.The name of Jaswant Singh was finalised and announced after a meeting of the coalition here on Monday morning. Jaswant Singh will challenge UPA's nominee Hamid Ansari, who has been nominated by the UPA for a second term in office.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X