நாகர்கோவிலில் ஆற்றில் குளிக்க சென்ற 4 என்ஜினியரிங் மாணவர்கள் மூழ்கி பலி
நாகர்கோவில்: நாகர்கோவிலில் ஆற்றில் குளிக்க சென்ற என்ஜினியரிங் மாணவர்கள் 4 பேர் ஆற்றில் மூழ்கி பலியாகினர்.
குமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த திருப்பதிசாரத்தை சேர்ந்த மாதவன்பிள்ளை. இவரது மகன் நிஷாந்த்(21). சென்னையில் உள்ள தனியார் என்ஜினியரிங் கல்லூரில் படித்து வருகிறார். கல்லூரி விடுமுறைக்காக நிஷாந்த் ஊருக்கு வந்த போது, தனது நண்பர்களை சந்தித்தார்.
நாகர்கோவில் கிறிஸ்டோபர் காலனியை சேர்ந்த முத்துக்குமார் மகன் சரவணன்(21). இவர் நாகர்கோவில் அரசு என்ஜினியரிங் கல்லூரியில் படித்து வந்தார். நாகர்கோவில் ராமன்புதூரைச் சேர்ந்த வில்பிரட் மகன் லெனாய் வின்சென்ட்(21) கோவையில் உள்ள ஒரு தனியார் என்ஜினியரிங் கல்லூரியில் படித்து வந்தார். இவருடன் சேலத்தைச் சேர்ந்த கந்தசாமி மகன் முல்லை அரசு(21) என்ற மாணவரும் படித்து வந்தார்.
பழைய நண்பர்களை சந்தித்த நிஷாந்த் அவர்களுடன், நாகர்கோவிலில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றார். நேற்று மாலை 4.30 மணி அளவில் ஆரல்வாய்மொழி வீரநாராயணமங்கலம் பாலம் அருகில் உள்ள பழையாறுக்கு சென்ற 4 பேரும் குளித்தனர்.
அங்குள்ள ஒரு பாறையின் பின்புறம் 4 பேரும் சேர்ந்து குளித்து கொண்டிருந்தனர். அப்போது அந்த பாறையின் மீது சிலர் அமர்ந்து கொண்டு மீன்பிடித்து கொண்டிருந்தனர். இந்த நிலையில் குளித்து கொண்டிருந்த 4 பேரும் திடீரென மாயமாகினர்.
ஆனால் 4 பேரின் உடைகள், அவர்கள் வந்த மோட்டார் சைக்கிள்கள் ஆகியவை அப்படியே இருந்தது. இதையடுத்து மீன்பிடித்து கொண்டிருந்தவர்கள், 4 பேரின் உடைகளில் இருந்த செல்போன் மூலம் அதில் இருந்த நம்பர்களுக்கு அழைத்து தகவல் தெரிவித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த உறவினர்கள், நாகர்கோவில் தீயணைப்பு படையினருக்கு தகவல் அளித்தனர். தீயணைப்பு துறையினர் மீட்பு வாகனத்தில் இருந்த விளக்குகளை பயன்படுத்தி சுமார் 2 மணிநேரம் போராடி, 4 பேரின் உடல்களையும் மீட்டனர். இறந்த 4 என்ஜினியர் மாணவர்களின் உடல்களை பார்த்த உறவினர் கதறி அழுதனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications