ஆள்கடத்தல், நில அபகரிப்பு வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி பெயரை சேர்க்கக் கோரி வழக்கு

கரூர் பெரியகுளத்துப்பாளையத்தைச் சேர்ந்த ராமலிங்கம், தெய்வானை தம்பதியரின் வளர்ப்பு மகன் கோகுல்(25). அவர் கோவையில் உள்ள ஒரு கால் சென்டரில் வேலை செய்து வருகின்றார். அவரது குடும்பத்தினருக்கு கரூர்-சேலம் பைபாஸ் சாலையில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள 3.5 ஏக்கர் பூர்வீக நிலம் உள்ளது.
இந்த நிலையில் கடந்த 2011ம் ஆண்டு செப்டம்பர் 19ம் தேதி கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் கோகுல் ஒரு புகார் கொடுத்தார்.
அதில், 2011ம் ஆண்டு ஜூன் 3 ம் தேதி கோவையில் இருந்து நான் எனது பைக்கில் புறப்பட்டபோது நடராஜன் உள்ளிட்ட சிலர் என்னை கடத்திச் சென்று கரூரில் உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைத்து, சொத்துகளை அவர்களுடைய பெயர்களுக்கு மாற்றிக் கொண்டனர். இதற்கு போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜியும், அவரது தம்பி அசோக்கும் உடந்தையாக இருந்தனர்.
மேலும், என்னிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஸிட் ஊற்றி கொலை செய்து விடுவதாக மிரட்டினார் என்று அவர் தெரிவித்திருந்தார்.
இந்த சம்பவம் குறித்து ஜனவரி 5ம் தேதி கரூர் ஜே.எம் 1 மாஜிஸ்திரேட் முன்னிலையில் மூடிய நீதிமன்றத்தில், கோகுல் ரகசிய வாக்குமூலமும் அளித்தார். இந்த நிலையில் இந்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக் ஆகியோரையும் சேர்த்து விசாரிக்க உத்தரவிடக் கோரி கரூர் ஜே.எம். 2 நீதிமன்றத்தில் கடந்த 5ம் தேதி கோகுல் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் ராமநாதன் வழக்கு விசாரணையை டிசம்பர் 6ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். இந்த வழக்கு விசாரணையை முன்னிட்டு கரூர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் நேற்று நீதிமன்றத்தில் குவிந்திருந்தனர்.
-
கரூர் டூ கோவை தெற்கு.. செந்தில் பாலாஜிக்கு தொகுதியை மாற்றியது ஏன்? ஸ்டாலின் கொடுத்த விளக்கம்! -
வானதி vs அண்ணாமலை.. எடப்பாடி பழனிசாமி பாஜகவிற்கு வைத்த செக்.. நடுவில் செந்தில் பாலாஜி வேறு -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்?












Click it and Unblock the Notifications