2023ல் இந்தியா 2வது பெரிய விமான போக்குவரத்து சந்தையாகும்- அஜித் சிங்
நாக்பூர்: சர்வதேச அளவில் அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியா 2-வது பெரிய விமான போக்குவரத்து சந்தையாக உருவாகும் என்று விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் அஜித் சிங் கூறியுள்ளார்.
நாக்பூர் சர்வதேச விமான நிலையத்தில், அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி அவரது உருவ சிலைக்கு முதல்வர் பிரிதிவிராஜ் சவான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் நடைபெற்ற அம்பேத்கர் பிறந்த நாள்விழாவில் கலந்து கொண்ட மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் அஜித் சிங் பேசியதாவது, ‘இந்தியாவில் உள்நாட்டு விமான பயணிகளின் எண்ணிக்கை கடந்த 2010-11-ம் ஆண்டில் 143 மில்லியனாக இருந்தது. அது 2011-12-ம் ஆண்டில் 162 மில்லியனாக உயர்ந்து உள்ளது.
அரசு வரவேற்பு...
விமான துறையில் தனியார் முதலீட்டை அரசு வரவேற்கிறது. குறிப்பாக கொல்கத்தா, சென்னை விமான நிலையங்களின் இயக்கம் மற்றும் நிர்வாகத்தை தனியாரிடம் ஒப்படைக்க வாய்ப்பு உள்ளது.
விரைவில் இரண்டாவது சந்தை...
சர்வதேச விமான போக்குவரத்து சங்கத்தின் புள்ளிவிவரப்படி, சர்வதேச அளவில் இன்னும் 10 ஆண்டுகளில் இந்தியா 2-வது பெரிய விமான பயணிகள் போக்குவரத்து சந்தையாக உருவாகும்.
பயணிகள் எண்ணிக்கை உயரும்...
இந்த காலக்கட்டத்தில் இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கை 84 மில்லியனாகவும், உள்நாட்டு பயணிகளின் எண்ணிக்கை 336 மில்லியனாகவும் உயரும்.
விமான போக்குவரத்து அதிகரிப்பு...
நாக்பூரில் இருந்து சர்வதேச விமான போக்குவரத்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. சார்ஜா போன்ற மேலும் சில சர்வதேச நகரங்களுடன் விமான போக்குவரத்தில் நாக்பூர் இணைக்கப்படும் என அஜித் சிங் கூறினார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications