கள்ளழகர் ஆற்றில் இறங்க வைகை அணையில் 20ம் தேதி தண்ணீர் திறப்பு
ஆண்டிப்பட்டி: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்காக, வைகை அணையில் 20-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது,
மதுரையில் இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா நேற்று கொடி ஏற்றத்துடன் கோலாகமாக தொடங்கியது. வருகிற 23-ந் தேதி மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நடக்கிறது. வருகிற 25-ந் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குகிறார். இதற்காக ஆண்டு தோறும் வைகை அணையில் இருந்து ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம்.
கடந்தாண்டு தென் மேற்கு, வடகிழக்கு பருவமழை ஏமாற்றியதால் வைகை அணையில் நவம்பர் மாதம் 59 அடி தண்ணீரே இருந்தது. இதனால் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. குடிநீருக்கு தண்ணீர் தேவை என்பதால் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படவில்லை.
மதுரை, சேடப்பட்டி- ஆண்டிப்பட்டி குடிநீர் தேவைக்கு மட்டும் தினசரி 60 கனஅடி நீர் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதன்காரணமாக அணையில் நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து தற்போது 45.60 அடியாக உள்ளது. நீர் வரத்து இல்லை. அணையின் நீர் இருப்பை பொறுத்து மதுரை சித்திரை திருவிழாவுக்கு ஆண்டு தோறும் தண்ணீர் திறந்து விடப்படும். இந்த ஆண்டு வருகிற 20-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில் கள்ளழகர் 25-ந் தேதி வைகை ஆற்றில் இறங்குகிறார். எனவே அணையில் இருந்து 4 நாட்களுக்கு முன்பு தண்ணீர் திறந்தால்தான் 25-ந் தேதிக்குள் தண்ணீர் மதுரை சென்றடையும் என்றனர்.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications