திமுக பெண் பிரமுகர் பால் மலர் கொலை வழக்கு என்னாச்சு??

சென்னை கே.கே.நகர் பகுதி மகளிர் அணி செயலாளராக இருந்தவர் பால்மலர் (28). இவருக்கு குமாரவேல் என்ற கணவரும் யோகேஸ்வரன் (ப்ளஸ் ஒன் படித்து வருகிறார்) என்ற மகனும், நிவேதா (பத்தாம் வகுப்பு) என்ற மகளும் உள்ளனர்.
திமுகவில் அடிமட்ட தொண்டராக வாழ்க்கையை தொடங்கிய பால்மலர் திமகு பொருளாளர் மு.க.ஸ்டாலினுடன் எந்நேரமும் போனில் பேசும் அளவுக்கு செல்வாக்குடன் வலம் வந்தாராம்.
திமுக கருணாநிதியின் குடும்பத்திற்குள் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் தவறாமல் பங்கேற்றார். ஸ்டாலினுடன் பால்மலர் நெருக்கமாக இருப்பது கட்சியில் பலருக்கும் பிடிக்கவில்லை. இந்நிலையில் கடந்த 2008ம் ஆண்டு ஜுலை மாதம் 3ம் தேதி கருணாநிதியின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்றவர் வீடு திரும்பவில்லை. அதன்பின் கை, கால்ல்கள் கட்டப்பட்ட நிலையில் சாக்கு மூட்டைக்குள் மணிமங்கலம் என்ற இடத்தில் பிணமாக கிடந்தார்.
காஞ்சிபுர மாவட்டம் மணிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து கணவர் குமாரவேலை அழைத்து உடலை காண்பித்த போலீசாரிடம் கொலுசு, சேலை ஆகியவற்றை வைத்து தனது மனைவி பால்மலர்தான் என உறுதி செய்தார். அதன்பின் வழக்கு விசாரணையில் பால்மலர் எதற்காக கொலை செய்யப்பட்டார், காரணம் என்ன என்ற எந்த கேள்விக்கும் விடை தெரியவில்லை.
கொலைச்சம்பவத்தில் திமுக பிரமுகர்கள் கவுன்சிலர் தனசேகரன், அன்பகம் கலை ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக பரபரப்பான பேச்சுகள் எழுந்த நிலையில் திமுக ஆட்சியில் கொலைக்கான காரணம், கொலையாளி குறித்த எந்த விபரமும் கிடைக்கவில்லை. கடைசியாக பால்மலரை கவுன்சிலர் தனசேகரன் தான் போனில் பேசினார் என்றும் அவர் அழைத்ததின் பேரில் காரில் ஏறிச்சென்றார் என்றும் அவரது கணவர் சார்பில் குற்றம் சாட்டப்பட்டது.
சிபிசிஐடிக்கு வழக்கு மாற்றப்பட்டு எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில் சென்னையில் ஏற்பட்ட பல்வேறு நெருக்கடி காரணமாக சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்திற்கு குழந்தைகளுடன் இடம் மாறினார் குமாரவேல்.
அங்கு, செய்தியாளர்களிடம் பேசிய குமாரவேல் கடந்த 5ஆண்டுகளாக எனது மனைவி எதற்காக கொலை செய்யப்பட்டார், கொலைக்கான காரணம் என்ன என்று தெரியாமல் தினம்தோறும் தூக்கமின்றி தவித்து வருகிறேன். கொலையில் திமுக பிரமுகர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர் என பலமுறை கூறியும் அரசாங்கம் மாறியும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
இதுவரை எனது மனைவி கொலைச்சம்பவத்தில் யாரையும் கைது செய்யவில்லை. எனவே எனது மனைவி கொலைச்சம்பவத்தை சிபிஐ போலீசார் விசாரிக்க வேண்டும்என வழக்கு தொடர உள்ளேன் என்றார்.
தனது மகளை மட்டும் உடன் வைத்து கொண்டு படிக்க வைத்து கொண்டுள்ளார். மகனை விடுதியில் சேர்த்துள்ளார்.
திமுக பிரமுகர் தனசேகரனை குற்றம் சாட்டும் குமரவேல், தனது வீட்டில், திமுக தலைவர் கருணாநிதி, மு.க.ஸ்டாலின் ஆகியோரது படங்களோடு இந்த தனசேகரன் படத்தையும் சேர்த்து மாட்டி வைத்துள்ளார். இது ஏன் என்று தெரியவில்லை.
-
சென்னை உட்பட.. 30 மாவட்டங்களுக்கு பறந்த மஞ்சள் அலர்ட்! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
தமிழக தேர்தல்.. எந்த கட்சிக்கு அரியணை ஏறும் வாய்ப்பு.. இதுவரை வந்த கருத்து கணிப்புகள்.. சொல்வது என்ன? -
சட்டசபை தேர்தல் களத்தில் உதயநிதியின் தளபதி.. எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கும் அண்ணா நகர் தொகுதி! -
விஜய் தேர்தலில் தோல்வி அடைந்த பின்.. அந்த விஷயம் நடக்கும் பாருங்க.. அடித்து சொல்லும் பியூஷ் கோயல்! -
திருமாவளவனிடம் போனில் பேசிய ஸ்டாலின்.. காட்டுமன்னார்கோவில் வேட்பாளர் மாற்றத்துக்குப் பின்னணி என்ன? -
“எடப்பாடி பழனிசாமி இரட்டை விரலை காட்டுவது ஏன் தெரியுமா?” - உதயநிதி ஸ்டாலின் சொன்ன மேட்டர்! -
தாம்பரம் ட்விஸ்ட்.. ஸ்டாலின் போட்ட ‘மாஸ்டர் பிளான்’.. எதிர்ப்பை ஆதரவாக்கிய திமுகவின் தேர்தல் வித்தை! -
“நான் பேசியதாக பரப்பப்பட்ட ஆடியோ AI மூலம் பொய்யாக உருவாக்கப்பட்டது” - ஆ.ராசா விளக்கம்! -
கொத்தாக காலியாகும் டெபாசிட்.. தவெக விஜய்க்கு பெரிய சிக்கல்.. 3 பெரிய சர்வேவில் இருக்கும் வார்னிங்! -
மேட்டுப்பாளையம் திமுக வேட்பாளர் மீது அதிருப்தி.. சுயேச்சையாக போட்டியிடும் முக்கிய நிர்வாகி -
உதயநிதி ஸ்டாலின் பரப்புரை வாகனத்தை நெருங்கி வந்த போலீசார்.. திடீரென ரெய்டு! ராமநாதபுரத்தில் சலசலப்பு -
2 முறை எம்எல்ஏவா இருந்தாச்சி.. இனி தம்பிக்கு விட்டு கொடு! திமுக வேட்பாளரிடம் கெஞ்சும் அதிமுக வேட்பாளர்!












Click it and Unblock the Notifications