காஷ்மீர் கலவரம்: நாடாளுமன்றத்தில், சிதம்பரம் பேச, பேச... சுகமாக உறங்கிய ஆந்திர காங்கிரஸ் எம்.பி
டெல்லி: 3 பேரை பலி வாங்கிய காஷ்மீர் கலவரம் குறித்து காரசாரமாக விவாதம் நடந்து கொண்டிருந்த வேளையில், அதை எதையும் கவனிக்காத ஆந்திர எம்.பி ஒருவர் சுகமாக படுத்து உறங்குவது போன்ற வீடியோ வெளியாகி பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
கடந்த வெள்ளியன்று ரம்ஜான் கொண்டாட்டத்தில் இரு தரப்பினருக்கு இடையே உண்டான பிரச்சினையைத் தொடர்ந்து வெடித்த கலவரத்தால் காஷ்மீரில் 3 பேர் பரிதாபமாகப் பலியானார்கள். இதனைத் தொடர்ந்து அங்கு சில மாவட்டங்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. கலவரத்தில் ஈடுபட்டதாகக் கூறி, இதுவரை 12 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.
காஷ்மீரில் நிலவும் இந்த கவலைக்கிடமான நிலை குறித்து சில தினங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் அறிக்கை ஒன்றை வாசித்தார் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம்...

எனது அனுபவங்கள்...
முதலில் பேசிய நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜெட்லி, ‘ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஸ்த்வார் மாவட்டத்தில் நடைபெற்ற கலவரம் குறித்தும், குறிப்பாக அங்கு சென்ற போது தான் தடுத்து நிறுத்தப்பட்டது குறித்தும்' பேசினார்.

காஷ்மீர் கலவர அறிக்கை...
உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் அவை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. இதனால், காஷ்மீர் மாநில கிஸ்த்வார் மாவட்டத்தில் நடைபெற்ற கலவரம் குறித்து மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அறிக்கை ஒன்று தாக்கல் செய்தார்.

தாலாட்டு...
தொடர்ந்து பரபரப்பாக அவை சென்ரு கொண்டிருந்த வேளையில் ப.சிதம்பரத்திற்கு பின்னால் அமர்ந்திருந்த ஆந்திர மாநில காங்கிரஸ் எம்.பி பால்வை கோவர்த்தன் ரெட்டி நன்கு உறங்கிக் கொண்டிருந்தாராம்.

என்னக் கொடுமை சார் இது...?
இது எதேச்சையாக் கேமரா கண்களுக்கு சிக்கி, பொதுமக்களின் பார்வைக்கு கிடைத்து விட, நாட்டின் நலன் குறித்து நாடாளுமன்றத்தில் உரிமைக்குரல் கொடுப்பார்கள் நமது தலைவர்கள் என நம்பியிருந்தவர்களுக்கு பெரும் ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் பரிசாக அளித்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல..பெட்டியை கட்டும் செல்வப் பெருந்தகை! பதவிக்கு போட்டி போடும் பெரும் தலைகள் -
தவெக - காங்கிரஸ் கூட்டணிக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. முத்தரசன் சொன்ன வார்த்தை! -
'அதிக பிரசங்கித்தனம்' சிபிஎம் கண்டனம் குறித்த கேள்விக்கு பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த ரியாக்சன்! -
“அதிகப் பிரசங்கித்தனம்”.. காங்கிரஸ் பிரவீன் சக்கரவர்த்தி பதிவால் டென்ஷன் ஆன சிபிஐஎம்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
ராகுல், விஜய்க்கு நெருக்கம்.. ராஜ்யசபா எம்பியாகும் பிரவீன் சக்கரவர்த்தி.. யார் இவர்? -
டிகே சிவக்குமாருக்கு அடுத்த ஷாக்.. ராமலிங்க ரெட்டியை தொடர்ந்து இன்னொரு அமைச்சர் ராஜினாமா? கர்நாடகாவில் குழப்பம் -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
விஜய் விரும்பிய வேட்பாளர்.. ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு!












Click it and Unblock the Notifications