பெங்களூரு ஷாக்.. "தகாத உறவு" வைத்த பூனைகள்? வாசலில் வீசப்பட்ட 4 குட்டி! பிரியாவுக்கு வந்துச்சே கோபம்
பெங்களூர்: பெங்களூருவின் சேஷாத்ரிபுரம் பகுதியில் ஒரு பெண் பூனை நான்கு குட்டிகளைப் பெற்றெடுத்த விவகாரம், 2 குடும்பங்களுக்கு இடையே பெரும் கைகலப்பாக மாறியுள்ளது.. ஒரு சாதாரண சின்ன பிரச்சனை, இறுதியில் ஒரு குடும்பத்தின் மீது ஆசிட் வீசப்போவதாக மிரட்டல் விடுக்கும் அளவிற்கு சென்றுவிட்டது.. இதுதான் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. அதை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்.
சேஷாத்ரிபுரம் நேருபுரத்தில் வசிப்பவர் பிரியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது).. இவர் தனது வீட்டில் ஒரு பெண் பூனையை ஆசையாக வளர்த்து வருகிறார்.. இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் ஒரு ஆண் பூனையை வளர்த்து வருகிறார்.

இந்நிலையில், பிரியாவின் பெண் பூனை சமீபத்தில் நான்கு குட்டிகளைப் போட்டது.. பொதுவாக பூனைக்குட்டிகள் பிறந்தால் மகிழ்ச்சியடைய வேண்டிய நிலையில், இங்கே நிலைமை தலைகீழாக மாறியது..
பெங்களூரு பிரியா
கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, பிரியா மற்றும் அவரது மகள் இருவரும் அந்த 4 குட்டிகளையும் பக்கத்து வீட்டார் வீட்டு வாசலில் கொண்டு போய் வீசி விட்டார்கள்.. தூக்கத்திலிருந்து எழுந்து வந்த பக்கத்து வீட்டுக்காரர்கள், தங்கள் வீட்டு வாசலில் 4 குட்டிகள் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.. "ஏன் இப்படி செய்கிறீர்கள்? குட்டிகளை ஏன் இங்கே கொண்டு வந்து போடுகிறீர்கள்?" என்று அவர்கள் பிரியாவிடம் கேட்டுள்ளனர்..
அதற்குப் பிரியா, "உங்கள் வீட்டு ஆண் பூனையால்தான் என் பூனை குட்டிகளை போட்டது.. இதற்கு நீங்கள்தான் பொறுப்பு.. அதனால் இந்தக் குட்டிகளை நீங்கள்தான் வளர்க்க வேண்டும்.. எனக்கு இந்தக் குட்டிகள் தேவையில்லை" என்று கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.. இதைக்கேட்டதுமே, குட்டிகளைப் பராமரிக்க முடியாது பக்கத்து வீட்டினரும் திட்டவட்டமாக சொல்லிவிட்டார்கள். நேரம் செல்ல செல்ல 2 தரப்பினருக்கும் இடையே கடும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது..
4 பூனைக்குட்டிகள்
வாக்குவாதம் முற்றிய நிலையில், பிரியாவும் அவரது மகளும் பக்கத்து வீட்டாரைப் பார்த்து ஆபாசமான வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.. அதுமட்டுமின்றி, "உங்கள் குழந்தைகள் மீது ஆசிட் வீசி விடுவோம்" என்று கொலை மிரட்டல் விடுத்ததுதான் உச்சகட்ட அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. இதனால் உயிருக்கு அஞ்சிய அண்டை வீட்டார், உடனடியாக 112 என்ற அவசர உதவி எண்ணிற்கு அழைத்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்..
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு ஹோய்சாலா ரோந்துப் பிரிவு போலீசார் விரைந்து வந்தனர்.. இரு தரப்பினரிடமும் மாறி மாறி சமாதானம் பேசினார்கள்.. இறுதியாக போலீசார் ஒரு சமரச திட்டத்தை முன்வைத்தனர்.. "4 குட்டிகளில் இரண்டை பிரியா தரப்பும், மீதமுள்ள இரண்டை பக்கத்து வீட்டுக்காரர்களும் பிரித்து வளர்க்க வேண்டும்" என்று கூறினார்கள்..
ஆசீட் வீச்சு மிரட்டல் - போலீஸ் சமாதானம்
இருந்தாலும், ஆசிட் வீச்சு மிரட்டல் மற்றும் கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக பிரியா மற்றும் அவரது மகள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அண்டை வீட்டார் உறுதியாகப் புகார் அளித்துள்ளனர்.. இது தொடர்பாக சேஷாத்ரிபுரம் போலீசார் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.. பூனைக்குட்டி வளர்ப்பில் ஏற்பட்ட இந்த மோதல் பெங்களூருவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது..
இந்த களேபரமும், பேச்சுவார்த்தையும் நடந்து கொண்டிருக்கும்போதே, அந்த 4 பூனை குட்டிகளும் அங்குமிங்குமாக ஓடி மறைந்துவிட்டன.. தன் கண் முன்னே குட்டிகள் சிதறி ஓடியதால், தாய் பூனை பரிதாபமாக அவற்றைத் தேடி தேடி அலைந்த காட்சி அங்கிருந்தவர்களைக் கண்கலங்க வைத்து விட்டதாம்..!!!!
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள் -
ஜனநாயகன் லீக்.. இயக்குநர் அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆர்கே செல்வமணி விளக்கம்












Click it and Unblock the Notifications