கர்நாடகாவில் 3-வது நாளாக பல மாவட்டங்களில் லேசான நில அதிர்வு- மக்கள் கடும் அச்சம்
பெங்களூர்: கர்நாடகா மாநிலத்தில் 3-வது நாளாக இன்றும் பல மாவட்டங்களில் லேசான நில அதிர்வு உணரப்பட்டதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Recommended Video
கர்நாடகா மாநிலத்தின் குடகு உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு உணரப்பட்டது. வீடுகளில் பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்கள் உருண்டன. இதனையடுத்து அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளுக்கு வந்தனர்.

கர்நாடகாவில் இன்று காலை 7.45 மணிக்கு பதிவான இந்த நில அதிர்வானது ரிக்டரில் 3.5 அலகுகளாகப் பதிவாகி இருந்தது. இதேபோல் தக்ஷிண கன்னடா மாவட்டத்திலும் நில அதிர்வு உணரப்பட்டது. இதேபோல் மற்றொரு நில அதிர்வு காலை 9.45 மணி அளவிலும் உணரப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக குடகு உள்ளிட்ட பகுதிகளில் லேசான நில அதிர்வுகள் தொடர்ந்து ஏற்படுவதாகவும் பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். கடந்த சனிக்கிழமையன்று ஏற்பட்ட நில அதிர்வு ரிக்டரில் 2.3 அலகுகளாகப் பதிவாகி இருந்தது.
கடந்த வாரம் கர்நாடகாவின் ஹாசன், மாண்டியா மாவட்டங்களில் நில அதிர்வு உணரப்பட்டது. அது ரிக்டரில் 3.4 அலகுகளாகப் பதிவாகி இருந்தது. இருந்த போதும் கடும் நிலநடுக்கத்துக்கு தற்போது வாய்ப்புகள் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கையால் மக்கள் அச்சம்! -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம்












Click it and Unblock the Notifications