Operation Lotus: 9+1 எம்எல்ஏக்கள் மிஸ்சிங்.. அதிர்ச்சியில் காங்கிரஸ்.. குமாரசாமி ஆட்சி கவிழ்கிறதா?
பெங்களூர்: கர்நாடகாவில் நடைபெற்று வரும் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சிக்கு மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பாஜகவின் 'ஆபரேஷன் லோட்டஸ்' அதிரடி காரணமாக ஆளும் கூட்டணிக்குள் பெரும் அமளி துமளி நடந்து வருகிறது.
கடந்த ஆண்டு கர்நாடக சட்டசபைக்கு நடந்த தேர்தலில், 104 தொகுதிகளை வென்று, தனிப்பெரும் கட்சியாக பாஜக உருவெடுத்த போதிலும், 224 தொகுதிகளை கொண்ட சட்டசபையில், அக்கட்சியால் தனிப்பெரும்பான்மை பெற முடியவில்லை.
இந்த நிலையில் திடீரென காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்தன. இதனால், பாஜகவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தும் கூட ஆட்சியில் தொடர முடியாத நிலை ஏற்பட்டது. பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க முடியவில்லை என தெரிந்ததும், முதல்வர் பதவியை ராஜினாமா செய்து விட்டு நடையை கட்டினார் எடியூரப்பா.

கோபத்தில் எடியூரப்பா
இதையடுத்து மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் குமாரசாமி தலைமையில் கர்நாடகாவில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இருப்பினும் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்ற கோபத்தில் உள்ள எடியூரப்பா, ஆபரேஷன் லோட்டஸ் மூலமாக, காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் சிலரை தங்கள் பக்கம் இழுத்து ஆட்சியை கலைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.

10 எம்எல்ஏக்கள் எஸ்கேப்
கடந்த மாதம் சுமார் 4 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் திடீரென மாயமாகி விட்டதாக பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ரிசார்ட்டுகளில் தங்க வைக்கப்பட்டனர். ஒருவழியாக சமாளித்து ஆட்சியை தொடர செய்தது காங்கிரஸ் தலைமை. இன்று கர்நாடக அரசின், பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், திடீரென ஆளும் கூட்டணியின், 10 எம்எல்ஏக்கள் மாயமாகி உள்ளனர்.

கொறடா உத்தரவு
அனைத்து எம்எல்ஏக்களும் பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் சட்டசபை குழு தலைவர் சித்தராமையா உத்தரவிட்டிருந்தார். தவறாமல் அனைவரும் ஆஜராக வேண்டும் என்று கொறடா கணேஷ் ஹுக்கேரியும், உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த நிலையிலும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 9 எம்எல்ஏக்கள் இன்று சட்டசபைக்கு வரவில்லை. மதசார்பற்ற ஜனதா தளத்தின் 1 எம்எல்ஏ வரவில்லை.

ஆட்சி கவிழ்கிறதா
காங்கிரஸ் மற்றும் மஜத கூட்டணிக்கு 117 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது. பெரும்பான்மைக்கு தேவை 113 எம்எல்ஏக்கள் ஆகும். ஆளும் கூட்டணியின் 10 எம்எல்ஏக்கள் மாயமாகியுள்ளதால், சட்டசபையில் 107 எம்எல்ஏக்கள் ஆதரவுதான் இருப்பதாக கணக்காகிறது. 10 பேருமே ஆட்சிக்கு எதிராக கலகம் செய்து எஸ்கேப் ஆகியுள்ளார்களா அல்லது, வேறு காரணங்கள் இருக்குமா என விசாரித்தபோது, சுமார் 9 எம்எல்ஏக்கள் மும்பை ஹோட்டலில் தங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே கர்நாடக அரசுக்கு ஆபத்து உறுதி என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
காமராஜருக்கு தலைவலியாக மாறிய தொற்று நோய்.. ‘இன்புளுயன்ஸா’ நகரமாக அறிவிக்கப்பட்ட சென்னை! -
அண்ணா ஆட்சி ஏன் சிறப்பு? என்ன சாதித்தார் அவர்? 1967க்கு பிறகான தரமான சம்பவங்கள் இதோ..! -
NDA கூட்ட பேனரில் எடப்பாடி பழனிசாமி படம் புறக்கணிப்பு.. அதிர்ச்சியில் அதிமுகவினர்! என்னங்க நடக்குது? -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட்












Click it and Unblock the Notifications