அப்போ மாலத்தீவு.. இப்போ துபாய்.. எடியூரப்பா போட்ட திடீர் ட்ரிப்.. அப்படியே ஆடிப்போன பாஜக மேலிடம்!
பெங்களூர்: கர்நாடகா முன்னாள் முதல்வர் எடியூரப்பா திடீரென பெங்களூரில் இருந்து துபாய்க்கு சென்றது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் முதல்வர் துபாய்க்கு போனதில் என்ன இருக்கிறது என்று கேட்கிறீர்களா? அவர் இதற்காக தேர்வு செய்த நேரம்தான் பல கேள்விகளை எழுப்பி உள்ளது.
கர்நாடக முதல்வராக இருந்த எடியூரப்பா தேசிய மேலிடத்துடன் இருந்த கருத்து வேறுபாடு, எம்எல்ஏக்கள் எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். இதையடுத்து நடந்த முதல் கட்சி கூட்டத்தில் எடியூரப்பா கலந்து கொள்ளவில்லை.
அப்போதே இவரின் "ஆப்சென்ட்" பல கேள்விகளை எழுப்பியது. அப்போது இவர் மாலத்தீவிற்கு குடும்பத்தோடு பயணம் செய்தார்.

மாலத்தீவு
முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த சில நாட்களில் இப்படி திடீரென மாலத்தீவு சென்று எடியூரப்பா சுற்றுலா பயணம் மேற்கொண்டது பல கேள்விகளை எழுப்பியது. அதிருப்தியில் இருக்கிறாரோ எடியூரப்பா என்ற கேள்விகளை எழுப்பியது. இந்த நிலையில்தான் பாஜக கர்நாடக நிர்வாகிகள் கூட்டம் நேற்று தொடங்கியது. பெங்களூரில் கர்நாடக மாநில தேசிய பாஜக பொறுப்பாளர் அருண் சிங் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

கூட்டம்
இந்த கூட்டத்திற்கான அழைப்பு பாஜகவின் மூத்த கர்நாடக உறுப்பினர்கள், எம்எல்ஏக்கள், அமைச்சர்கள், எம்பிக்கள் ஆகியோருக்கு சென்று இருந்தது. எடியூரப்பாவிற்கும் அழைப்பு சென்று இருந்தது. ஆனால் இதில் எடியூரப்பா கலந்து கொள்ளவில்லை. மாறாக அவர் நேரம் பார்த்து துபாய்க்கு பறந்து சென்றுள்ளார். இவரின் மகன் பி ஒய் விஜயேந்திராவும் துபாய்க்கு சென்றுள்ளார்.

முதல் கூட்டம்
கர்நாடகாவில் முதல்வராக பசவராஜ் பொம்மை பதவி ஏற்றபின் முதல்முறை இந்த கூட்டம் நடக்கிறது. ஆனால் இந்த கூட்டத்தை புறக்கணித்து எடியூரப்பா துபாய்க்கு பறந்து சென்றுள்ளார். அதேபோல் மூத்த தலைவர், முன்னாள் துணை முதல்வர் சிஎன் அஸ்வத்நாராயனும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இதுதான் கர்நாடக பாஜக மற்றும் பாஜகவின் தேசிய மேலிடத்தை அதிர வைத்துள்ளது.

மேலிடம் அதிருப்தி
எடியூரப்பாவின் திடீர் டிரிப் காரணமாக டெல்லி பாஜக மேலிடமும், கர்நாடக பாஜகவும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆட்சிக்கு எதிராக எடியூரப்பா ஏதாவது திட்டம் போடுகிறாரா என்ற விவாதம் நிர்வாகிகள் இடையே எழுந்துள்ளது. ஏனென்றால் கர்நாடகாவில் எடியூரப்பா இன்றி பாஜக என்பதை நினைத்து கூட பார்க்க முடியாது.

எடியூரப்பா
எடியூரப்பா பாஜகவில் இல்லாமல் பாஜக எதிர்கொண்ட கடந்த சட்டசபை தேர்தலுக்கு முந்தைய தேர்தலில் கூட பாஜக படுதோல்வி அடைந்தது. அந்த அளவிற்கு எடியூரப்பா பாஜகவில் மிகவும் வலிமை பொருந்திய தலைவர். இந்த நிலையில் கட்சி கூட்டத்தில் எடியூரப்பா கலந்து கொள்ளாமல் துபாய்க்கு பறந்து சென்றது பல யுகங்களுக்கு வழி வகுத்து இருக்கிறது.

அருண் சிங்
கர்நாடக மாநில தேசிய பாஜக பொறுப்பாளர் அருண் சிங் இது தொடர்பாக அளித்த பேட்டியில், கர்நாடகாவில் முதல்வரை மாற்றும் எண்ணம் இல்லை. எடியூரப்பாவின் பயணம் திடீரென திட்டமிட்டது இல்லை. ஏற்கனவே அவர் திட்டமிட்ட பயணம் இது. அதனால் இதில் அவர் மாற்றம் செய்யவில்லை. மற்றபடி முதல்வர் பொம்மைக்கு எதிராக கட்சிக்குள் எந்த எதிர்ப்பும் இல்லை என்று அருண் சிங் தெரிவித்துள்ளார்.
-
ஷாக்கில் சரவணன்! எடப்பாடிக்காக விழுந்து விழுந்து வேலை பார்ப்பாரே அவரா? பாஜக விஐபிகள் மெகா ஸ்கெட்ச் -
18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம்? திமுகவிடம் கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி! தாமரைக்கு ‘செக்’ -
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல் -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா? -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்!












Click it and Unblock the Notifications