உடுமலைப்பேட்டை சங்கர்! இன்றுடன் 10 ஆண்டுகளாச்சு! நாங்கள் என்ன தவறு செய்தோம்? கவுசல்யா உருக்கம்
சென்னை: உடுமலைப்பேட்டை சங்கர் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 10 ஆண்டுகள் ஆகின்றன. எல்லாரையும் போல் நாங்களும் மகிழ்ச்சியாக வாழ்ந்திருக்க வேண்டும், நாங்கள் என்ன தவறு செய்தோம் என கவுசல்யா தனது பேஸ்புக்கில் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேஸ்புக்கில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது: சங்கர் ரத்த வெள்ளத்தில் கிடந்த போது நான் என்ன மனநிலையில் நின்றிருப்பேன். நானும் வெட்டப்பட்டேன். உயிர் இருந்தும் உயிரற்ற பிணம் போல அவன் உடல் பார்த்து நின்றேன்.

அந்தக் கெளசல்யா செத்துதான் போய்விட்டாள். இன்று போர்க்குணத்தோடு கருத்தியலோடு நிற்கிறேன். சங்கர்! காதலுக்காகத் தாஜ்மஹால் கட்டிய நாட்டில் நான் உனக்கான நீதியையாவது பெற்றுவிட மாட்டேனா! முடியும் என்னால் முடியும்.
இன்றோடு நாங்கள் வெட்டுப்பட்டு சங்கரை இழந்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டன. எல்லாரையும் போல நாங்கள் மகிழ்வாக வாழ்ந்திருக்க வேண்டும். நாங்கள் என்ன தவறு செய்தோம்? சாதிக்காக எங்கள் வாழ்வையே அழித்துவிட்டார்கள்.
அதிலிருந்து தப்பிப் பிழைத்தாலும் காலம் கடந்தாலும் ஏதோ ஒரு ஓரமாக என்பாட்டுக்கு என் வாழ்வை என்னால் நடத்த முடியவில்லை. சங்கரின் இரத்தம், அவன் குரல் , வலி இன்றும் என்னோடு பயணித்துக் கொண்டிருக்கிறது. ஏதோ ஒரு மூலையில் அமர்ந்து அழுது விட்டு மட்டும் செல்ல என்னால் இயலவில்லை.
சங்கர் நினைவை நான் ஏந்துவது சாதிக்கு எதிராய் அவனை உயிரோடு இங்கு உலவ விடுவதற்கே!
நாளை இன்னோர் சங்கர் கௌசல்யா உருவாகாமல் தடுப்பதற்கு அவனைக் கருவியாக்கிப் போராடுகிறேன். ஆனால் ஆணவக் குற்றங்கள் தொடர்ந்து கொண்டே உள்ளன.
தனிச்சட்டம் படைப்பதற்காக... சாதி ஒழிப்பிற்காக சங்கரை நெஞ்சிலேந்தி என் இறுதிவரை களத்தில் நிற்பேன். இது சங்கர் மேல் உறுதி! சங்கர்!!! என தெரிவித்தார்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications