ஒரு லட்சம் போட்ட வில்லிவாக்கம் தொழில் அதிபருக்கு ரூ.2 லட்சம் கிடைத்தது.. இறுதியில் 1.23 கோடி காலி
சென்னை: சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த தொழில் அதிபர் மகேந்திரன் என்பவருக்கு 'வாட்ஸ் அப்' எண்ணுக்கு ஒரு தகவல் வந்தது. 'ஆன்லைன்' வர்த்தகத்தில் முதலீடு செய்தால், இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என்று கூறியுள்ளார்கள். ஒரு லட்சம் முதலீடு செய்தவருக்கு 2 லட்சம் கிடைத்துள்ளது. அதனை நம்பி 'ஆன்லைன்' வர்த்தகத்தில் ரூ.1.23 கோடி வரை முதலீடு செய்துள்ளார். அவ்வளவு பணம் போய்விட்டது. இப்படி 'ஆன்லைன்' வர்த்தகத்தை நம்பி அதில் முதலீடு செய்து சென்னையில் தொழில் அதிபர்கள் பல கோடி ரூபாயை இழக்கிறார்கள் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சதுரங்க வேட்டை பட பாணியில் சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடிப்பது போல் இன்றைக்கு ஆன்லைன் முதலீடு என்ற பெயரில் மோசடிகள் நடக்கிறது. 10000 போடுபவர்களுக்கு 20000 கிடைக்கிறது. 20000 போடுபவர்களுக்கு 40000 கிடைக்கிறது. ஏன் ஒரு லட்சம் போடுபவர்களுக்கு கூட 2 லட்சம் கிடைக்கிறது. அப்படி வாங்கும் 2 லட்சம் பணத்தை பார்த்ததும், வழுக்கி விழுந்து விடுகிறார்கள். மொத்தமாக கோடிகளில் காலியாகி விடுகிறது.. வில்லிவாக்கம் தொழிலதிபருக்கு நடந்த சம்பவம் பற்றியும் போலீஸ் எச்சரிக்கை பற்றியும் பார்ப்போம்.

சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த தொழில் அதிபர் மகேந்திரன் என்பவருடைய செல்போன் 'வாட்ஸ் அப்' எண்ணுக்கு ஒரு தகவல் வந்திருக்கிறது. அந்த தகவலில், 'ஆன்லைன்' வர்த்தகத்தில் முதலீடு செய்தால், இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என்று கூறப்பட்டிருக்கிறது. இதை சோதித்து பார்க்க விரும்பிய மகேந்திரன் முதலில் ரூ.1 லட்சத்தை முதலீடு செய்தார். அதில் அவருக்கு இரட்டிப்பு லாபம் கிடைத்திருக்கிறது.
இதனால் அவருக்கு நம்பிக்கை ஏற்பட்டு தொடர்ந்து 'ஆன்லைன்' வர்த்தகத்தில் ரூ.1.23 கோடி வரை முதலீடு செய்திருக்கிறார். ஆனால் ஆசைகாட்டி மோசம் செய்தது போல், மோசடி கும்பல் இவர் முதலீடு செய்த ரூ.1.23 கோடியையும் அபகரித்துக்கொண்டார்கள். இதுதொடர்பாக மகேந்திரன் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.
இதன் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். ஆன்லைன் மோசடி கும்பலைச் சேர்ந்த 41 வயதாகும் செந்தில்குமார் என்பவரை கைது செய்தனர். ஈரோட்டை சேர்ந்த இவர், நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். இதேபோன்று பல தொழில் அதிபர்களிடம் மோசடி கும்பல் கைவரிசை காட்டி வந்துள்ளது. இதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
அண்மையில் 'ஆன்லைன்' வர்த்தகத்தில் ஓய்வு பெற்ற ஐ.எப்.எஸ். அதிகாரி கிருஷ்ணகுமார் என்பவர் ரூ.6.58 கோடியை இழந்தார். அவரிடம் மோசடி செய்த கும்பலை சேர்ந்த 9 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள். 10-வது குற்றவாளியாக ஈரோட்டை சேர்ந்த மாதேஷ்குமார் (41) என்பவரும் இப்போது கைது செய்யப்பட்டார். இந்த 2 வழக்குகளிலும் 11 பேர் கைதாகி உள்ளார்கள். 'ஆன்லைன்' வர்த்தகத்தை நம்பி தீர விசாரிக்காமல் பொதுமக்கள் கோடிகளையும், லட்சங்களையும் கொட்டி ஏமாற வேண்டாம் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.
-
வில்லிவாக்கத்தில் கொடி நாட்டுவாரா ஆதவ் அர்ஜுனா? சுத்துப் போட்ட திமுக! சூடு பிடிக்கும் களம் -
தவெக பெண் தொண்டர்கள் மீது மதுபாட்டில் வீச்சு.. ஆதவ் அர்ஜுனா பிரசாரத்தில் அதிர்ச்சி! -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
LPG கேஸ் சிலிண்டர் பதுக்கினால் குண்டர் சட்டம் பாயும் - தமிழ்நாடு அரசு அதிரடி எச்சரிக்கை! -
அதிகாலையில் ஷாக்! தாறுமாறாக உயர்ந்த விமான கட்டணம்! சென்னை-தூத்துக்குடிக்கு டிக்கெட் ரேட்டை பாருங்க -
கிளாம்பாக்கம் - மகேந்திரா வேர்ல்ட் சிட்டி.. சென்னையின் மிகப்பெரிய ப்ராஜெக்ட்.. எல்லாமே மாறப்போகுது -
சிவரஞ்சனியை போட்டு தள்ளிட்டேன், மகளையும் முடிச்சுட்டேன்!" காலங்காத்தாலேயே அம்மாவுக்கு போன் செய்த மகன் -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
எல்லா SP-க்களும் சென்னை நோக்கி.. தலைநகரில் 8 பேருக்கு புதுபொறுப்பு! வெயிட்டிங் லிஸ்ட்க்கு குட்பை -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை!












Click it and Unblock the Notifications