இன்று ஆடிபெருக்கு- லாக்டவுனால் களையிழந்த காவிரி கரையோரங்கள்- கட்டுப்பாடுகளை மீறியும் வழிபாடு
சென்னை: தமிழகத்தில் இன்று ஆடிப்பெருக்கை முன்னிட்டு வீடுகளிலேயே வழிபாடுகள் நடத்தப்பட்டது. முழு லாக்டவுன் இன்று அமல்படுத்தப்பட்டதால் காவிரி கரையோரங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
தமிழகத்தில் ஆடிப்பெருக்கு (ஆடி 18) வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். ஆடி 18-ந் தேதியன்று நீர்நிலைகளுக்கு சென்று வழிபாடுகள் நடத்துவர். இதனால் ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் மக்கள் கூட்டம் எப்போதும் அலைமோதும்.
ஆனால் இன்று ஞாயிறு முழு லாக்டவுன் என்பதால் கட்டுப்பாடுகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டிருக்கின்றன. ஏற்கனவே நீர்நிலைகளுக்கு பொதுமக்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
இதனால் இன்றைய ஆடி பெருக்கு நாளில் ஆறுகளில் நீராடிவிட்டு மேற்கொள்ளும் தாலி கயிறு மாற்றுதல், முளைப்பாரி விடுதல் உள்ளிட்டவை நடைபெறவில்லை. பொதுமக்கள் தங்களது வீடுகளிலேயே வழிபாடுகளை நடத்தினர்.

தேனியில் போலீசுடன் மல்லுகட்டு
தேனி நகரில் விதியை மீறி வருகின்ற வாகன ஓட்டிகளை காவல்துறையினர் எச்சரித்தும் நோய்தொற்று குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியும் விதிமீறல் வழக்கு பதிவு செய்தும் வருகின்றனர். அதேநேரத்தில் பலரும் ஆடிப்பெருக்கு என்பதனால் குலதெய்வம் கோயிலுக்கு செல்ல வேண்டும் என்று காவல் துறையினரிடம் அனுமதி கேட்டனர். இதனால் சில இடங்களில் போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதமும் ஏற்பட்டது.

ஆடிபெருக்கில் உறங்கும் தூங்கா நகரம்
இன்று மதுரை மாநகரில் பெரியார் பேருந்து நிலையம், ஆரப்பாளையம் பேருந்து நிலையம், மாட்டுத்தாவணி பேருந்துநிலையம், கோரிப்பாளையம், கீழமாசி பகுதியில் அனைத்து கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தது. முழு லாக்டவுன் காரணமாக அனைத்துகள் கோவில்கள் அடைக்கப்பட்டுள்ளனர் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. மதுரையில் உள்ள அனைத்து முக்கிய சாலைகளில் போலீஸ் தடுப்பு அமைக்கப்பட்டு சோதனை செய்து வருகிறது முக்கியமான சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

வெறிச்சோடிய பேரூர் படித்துறை
இன்றைய லாக்டவுனால் ஆடி பெருக்கை முன்னிட்டு பேரூர் படித்துறை மற்றும் சுற்றுவட்டார பொது இடங்களில் இறந்தவர்களுக்கான தர்ப்பணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆடிப்பெருக்கை முன்னிட்டு இறந்த முன்னோர்களை வணங்குவது, படையலிடுவது, மற்றும் கோவை பேரூர் படித்துறை மற்றும் அருகே உள்ள தனியார் திருமணம் மண்டபங்களில் ஒவ்வொரு ஆண்டும் தர்ப்பணம் செய்யும் நிகழ்வு நடைபெறும், இந்த ஆண்டு கொரோனா லாக்டவுன் அமலில் உள்ளதால், பேரூர் படித்துறை மற்றும் தனியார் திருமணம் மண்டபங்களில் இறந்தவர்கள் தர்ப்பணம் செய்யவும், பொது இடங்களில் கூடவும் தடை விதிக்கப்பட்டதால் அப்பகுதி வெறிச்சோடியது.
Recommended Video

கல்லணையில் குவிந்த பெண்கள்
இருப்பினும் கல்லணை கால்வாயில் தடையை மீறி பொதுமக்கள் ஆடிப்பெருக்கை கொண்டாடினர். இந்த கொண்டாட்டங்களில் பெண்கள் பெருமளவு பங்கேற்றனர். பெண்கள் புத்தாடை உடுத்தி, தாலிக்கயிறு மாற்றி வணங்கி சென்றனர். ஆனால் தஞ்சை நகர வீதிகள் அனைத்தும் வெறிச்சோடி கிடந்தன.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications