4 மாநிலங்களை தூக்கும் பாஜக.. உ.பி, கோவா, மணிப்பூர், உத்தரகாண்டில் மீண்டும் ஆட்சி: ஏபிபி - சி வோட்டர்
சென்னை: அடுத்த வருடம் நடக்க உள்ள பல்வேறு மாநில சட்டசபை தேர்தல்களில் 4 மாநிலங்களில் பாஜக வெற்றிபெற அதிக வாய்ப்பு உள்ளதாக ஏபிபி - சி வோட்டர் சர்வே தெரிவித்துள்ளது. உத்தர பிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் என்று ஏபிபி - சி வோட்டர் சர்வே தெரிவித்துள்ளது.
அடுத்த வருடம் உத்தர பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதில் பஞ்சாப்பில் காங்கிரஸ் ஆட்சி தவிர மற்ற மாநிலங்களில் பாஜகதான் ஆட்சியில் இருக்கிறது. இந்த நிலையில் 5 மாநில சட்டசபை தேர்தல் குறித்து ஏபிபி - சி வோட்டர் சர்வே வெளியிட்டுள்ளது.
இதில் உத்தர பிரதேசம் , கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய 4 மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசம்
ஏபிபி - சி வோட்டர் சர்வேபடி, உத்தர பிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும். அதன்படி பாஜக கூட்டணி 212-224 இடங்களில் வெல்லும் வாய்ப்பு உள்ளது. அங்கு மொத்தம் 403 இடங்கள் உள்ளன. இதில் 40.4 சதவிகித வாக்குகள் பாஜகவிற்கு செல்லும். கடந்த முறை இங்கு பாஜக 325 இடங்களை வென்றது. இங்கு அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி 151-163 இடங்களை பெற்று இரண்டாம் இடம் பிடிக்கும். மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி 12-24 இடங்களையும், காங்கிரஸ் 2-10 இடங்களையும் பெற வாய்ப்பு உள்ளதாக ஏபிபி - சி வோட்டர் சர்வே தெரிவித்துள்ளது.

உத்தர காண்ட்
உத்தரகாண்டில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலிலும் பாஜகதான் வெல்ல அதிக வாய்ப்பு உள்ளதாக ஏபிபி - சி வோட்டர் சர்வே தெரிவித்துள்ளது. இங்கு 39.8% வாக்குகள் அதாவது 33-39 இடங்களை வென்று பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும். இங்கு 70 இடங்கள் உள்ளன. காங்கிரஸ் 29-35 இடங்களை 35.7 % வாக்குகள் பெற்று பிடிக்கும் வாய்ப்புகள் உள்ளன. அதேபோல் ஆம் ஆத்மி 12.6 சதவீத வாக்குகள் பெற்று 1-3 இடங்களை பிடிக்கும் வாய்ப்புகள் உள்ளன என்று ஏபிபி - சி வோட்டர் சர்வே தெரிவிக்கிறது.

கோவா
கோவாவில் பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்கும் வாய்ப்புகள் உள்ளதாக ஏபிபி - சி வோட்டர் சர்வே தெரிவிக்கிறது. அதன்படி கோவாவில் பாஜக 17-21 இடங்களை பிடிக்கும். அங்கு 40 இடங்கள் உள்ளன. காங்கிரஸ் 4-8 இடங்களை பிடிக்கும். ஆம் ஆத்மி 5-9 இடங்களை பிடிக்கும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு ஆம் ஆத்மி இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுக்க வாய்ப்புகள் உள்ளன என்று ஏபிபி - சி வோட்டர் சர்வே தெரிவிக்கிறது.

மணிப்பூர்
மணிப்பூரில் ஏபிபி - சி வோட்டர் சர்வேயின்படி பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இங்கு பாஜக 29 -33 இடங்களை பிடிக்கும். காங்கிரஸ் 23-27 இடங்களை பிடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கணிப்புப்படி இங்கு நாகா மக்கள் முன்னேற்ற அமைப்பு 2-6 இடங்களை பிடிக்கும். இங்கு மொத்தம் 60 இடங்கள் உள்ளது குறிப்பித்தக்கது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications