பிள்ளையார் சுழி போட்ட அதிமுக.. பின்னாடியே அடுத்தடுத்து ஓடி வந்த கட்சிகள்.. செம தமாஷ்!
அதிமுக, திமுகவில் விருப்ப மனுக்கள் தேதி அறிவிக்கப்பட்டுள்ளன
சென்னை: ஜெயலலிதா இருந்தபோது இப்படித்தான் நடக்கும். தேர்தல் என்று வந்தாலே ஜெயலலிதாதான் எதிலுமே முதலில் இருப்பார். விருப்ப மனு வாங்குவது, நேர்காணல் நடத்துவது, வேட்பாளர்கள் அறிவிப்பு, பிரச்சாரம் தொடங்குவது என எல்லாமே அவர்தான் நம்பர் ஒன் (ஊழல் வழக்கிலும் கூட அவர்தான் நம்பர் ஒன்.. அது வேற கதை).
இப்போது அதே கதை திரும்பியுள்ளது. இந்த முறை சட்டசபைத் தேர்தல் ரொம்பவே வித்தியாசமாக இருக்கிறது. இதுவரை இல்லாத காட்சிகளை தமிழ்நாடு காணப் போகிறது.
அதிமுக பலமிழந்து விட்டதாக கூறவே முடியாத அளவுக்கு எடப்பாடி பழனிச்சாமி கட்சியை தூக்கி நிறுத்திக் கொண்டிருக்கிறார்.

பாமக
மறுபக்கம் பாஜக, பாமக என ஏகப்பட்ட கட்சிகள்தங்களது செல்வாக்கை நிரூபிக்க துடியாத் துடித்துக் கொண்டுள்ளன. இன்னொரு பக்கம் கமல்ஹாசன், சீமான் ஆகியோர் இந்த முறை என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று ஸ்கெட்ச் போட்டுக் கொண்டுள்ளனர்.

ஸ்டாலின்
இதற்கு மத்தியில்தான் திமுக காலம் தள்ளிக் கொண்டுள்ளது. அது போகும் பாதையே ரொம்ப வித்தியாசமாக இருக்கிறது. ஆளுக்கு முதலாக மு.க.ஸ்டாலின் தான் பிரச்சாரக் களத்தில் முதலில் நிற்கிறார். அவர் தான் அதிரடியாக அடுத்தடுத்து பிரச்சாரத்தை தொடங்கி விறுவிறுப்பாக போய்க் கொண்டிருக்கிறார். அவரைத் தொடர்ந்துதான் எடப்பாடியார் கிளம்பினார். சீமான் போனார், கமல்ஹாசன் வந்தார்.. ராகுல் காந்தி கூட வந்து விட்டுப் போனார்.

பிரதமர் மோடி
இந்த நிலையில் ஆளுக்கு முதல் நபராக அதிமுக விருப்ப மனுக்களை வாங்கப் போவதாக நேற்று அறிவிப்பு வெளியிட்டு அனைவரையும் அதிர வைத்தது. முந்தாநாள்தான் முதல்வரை பிரதமர் மோடி தனித்து சந்தித்துப் பேசினார். இந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் விருப்ப மனுக்களை வாங்கப் போவதாக நேற்று அதிமுக அறிவிக்கிறது. எனவே அதிமுகவுக்கு தேர்தல் தொடர்பாக பிரதமரிடமிருந்து உறுதியான தகவல் ஏதேனும் கிடைத்திருக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

வாக்குக்கு குறி
ஆனால் பாருங்க.. அதிமுக அறிவித்த சில மணி நேரங்களிலேயே மக்கள் நீதி மய்யமும் விருப்ப மனு வாங்கப் போவதாக அறிவிக்கிறது. தொடர்ந்து திமுக அறிவித்தது. ஆக, மொத்தம் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் குறித்த உறுதியான தகவல் ஏதோ தெரிந்திருக்க வேண்டும். அதனால்தான் ஒன்று சேர்ந்தாற் போல அதிமுகவைத் தொடர்ந்து அத்தனை கட்சிகளும் அடுத்தடுத்து விருப்ப மனுக்களைப் பெறும்அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக மக்கள் பேசிக் கொள்கிறார்கள்.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா












Click it and Unblock the Notifications