காஞ்சிபுரத்தில் அதிமுக வேட்பாளர் தூக்கிட்டு தற்கொலை - தொண்டர்கள் போராட்டம்
அதிமுக வேட்பாளர் ஜானகிராமன் என்பவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: காஞ்சிபுரம் மாநகராட்சி 36-வது வார்டு அதிமுக வேட்பாளர் ஜானகிராமன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தேர்தலில் தோல்வியடைந்து விடுவோமோ என்ற அச்சத்தில் தற்கொலை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மிரட்டல் காரணமாகவே ஜானகிராமன் தற்கொலை செய்து கொண்டதாக அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19ஆம் தேதி மாநிலம் முழுவதும் நேரடித் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. 22ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
மேயர்கள், நகராட்சிக் தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள் கவுன்சிலர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். மறைமுகத்தேர்தல் மார்ச் 4ஆம் தேதி நடைபெற உள்ளது.

வேட்புமனு தாக்கல் முடிந்து விறுவிறுப்பாக தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் போட்டியிடும் நகராட்சி, பேரூராட்சி வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி நேற்று பிரசாரம் மேற்கொண்டார். அத்துடன் செங்கல்பட்டு மாவட்டத்துக்குட்பட்ட தாம்பரம் மாநகராட்சி வேட்பாளர்கள் 70 பேரை ஆதரித்து பேசினார்.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சி 36வது வார்டு அதிமுக வேட்பாளர் ஜானகிராமன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தேர்தலில் தோல்வியடைந்து விடுவோமோ என்ற அச்சத்தில் தற்கொலை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று காஞ்சியில் 51 வேட்பாளர்களை அறிமுகம் செய்து எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்தார். இந்த நிலையில் ஜானகிராமன் தற்போது தற்கொலை செய்துகொண்டுள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே மிரட்டல் காரணமாக தான் ஜானகிராமன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகவும்,அவரது தொலைபேசி என்னை ஆராய்ந்து குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி அதிமுகவினர் சின்ன காஞ்சிபுரம் விஷ்ணு காஞ்சி காவல் நிலையம் முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.
சாலை மறியலால் காஞ்சிபுரம்-செங்கல்பட்டு சாலையில் சற்று போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. காவல்துறையினரின் சுமூக பேச்சைவார்த்தையை தொடர்ந்து அதிமுகவினர் சாலை மறியலை கை விடுத்தனர்.












Click it and Unblock the Notifications