சசிகலா போடும் அந்த அறக்கட்டளை கணக்கு.. ஆகட்டும் பார்ப்போம் என மார்தட்டும் இபிஎஸ் கோஷ்டி!
சென்னை: அதிமுக விவகாரத்தில் பொதுக்குழு, தலைமை அலுவலகம் தாண்டி சசிகலாவுக்கு இன்னமும் நம்பிக்கையாக இருப்பது அறக்கட்டளைதானாம். ஆனால் அறக்கட்டளை விவகாரத்தில் சசிகலா என்ன முடிவெடுத்தாலும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம் என்கிறதாம் இபிஎஸ் கோஷ்டி.
அதிமுகவின் பொதுக்குழு விவகாரம் குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதிமுகவின் இபிஎஸ் கோஷ்டி கூட்டிய பொதுக்குழு செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. உச்சநீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் சாய் பெஞ்ச் விசாரித்தது. அதிமுக விதிப்படி, ஐந்தில் ஒரு பங்கு உறுப்பினர்களின் கோரிக்கை அடிப்படையில் பொதுக்குழு நடத்தப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதிடப்பட்டது. இதனை ஓபிஎஸ் தரப்பு நிராகரித்தது. இவ்வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற உள்ளது.

இந்நிலையில் சசிகலாவின் கனத்த மவுனம் தொடர்பாக நாம் அதிமுக வட்டாரங்களில் விசாரித்தோம். அதிமுகவுக்கு கொடி, பெயர் எப்படி முக்கியமோ அப்படித்தான் இருக்கிறது அறக்கட்டளையும்.. அதிமுக அறக்கட்டளை உறுப்பினர்களில் சசிகலாவும் ஒருவர். அவர் நினைத்தால் இதனை வைத்தே ஓபிஎஸ், ஈபிஎஸ்ஸை அடக்க முடியும். ஆனால் விளையாடிவிட்டுதான் வரட்டும் என வேடிக்கை பார்க்கிறார். காலம் சசிகலாவிடம் வந்து சேரத்தான் போகிறது என்கின்றனர்.
ஆனால் இபிஎஸ் தரப்போ, அறக்கட்டளை என்பது மிக முக்கியமானது. இப்போது அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களின் பேராதரவு அண்ணன் எடப்பாடி பழனிசாமிக்குதான் இருக்கிறது. அதனால்தான் இப்போது இடைக்கால பொதுச்செயலாளராகி இருக்கிறார். உச்சநீதிமன்ற வழக்கு முடியும் போது அதிமுக இபிஎஸ் வசமாகும். அதிமுகவின் பொதுச்செயலாளராவார் இபிஎஸ். அப்போது அறக்கட்டளை எங்கள் வசமாகும். சசிகலாவ்ன் கனவு தவிடு பொடியாகும் என்கின்றனர்.

இன்னொரு பக்கம், இபிஎஸ்-க்கு சாதகமாக தீர்ப்பு கிடைக்கும் நிலையில் அறக்கட்டளையை முன்வைத்து சசிகலா புதிய குடைச்சலைத் தர வாய்ப்புள்ளது. சசிகலாவும் அறக்கட்டளை உறுப்பினர் என்ற அடிப்படையில் இபிஎஸ்-க்கு எதிராக வாதங்களை முன்வைக்கக் கூடும். அதனால் இபிஎஸ்-ன் எதிர்பார்ப்புதான் பூஜ்ஜியமாகும் என பதிலடி தருகிறது சசிகலா தரப்பு. ஆக, அதிமுக அக்கப்போர் இப்போதைக்கு முடிவுக்கு வராது என்பது மட்டும் உறுதி என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவோம்.. பாஜக வாக்குறுதியை சொல்லி வாக்கு சேகரித்த ராஜன் செல்லப்பா! -
தொகுதி மறுவரையறை! சண்டை செய்யும் திமுக.. வேடிக்கை பார்க்கும் அதிமுக! என்னதான் பிரச்சனை? -
மீண்டும் திமுக தான்.. விஜய்யின் தவெகவால் ஸ்டாலினுக்கு ‘ஜாக்பாட்’.. அதிமுகவிற்கு ஷாக்! டேட்டா பாருங்க -
பழைய நியூஸ் பேப்பரை காட்டி பிரச்சாரம் செய்யும் எடப்பாடி பழனிசாமி.. உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலடி -
பச்சைத் துண்டு எடப்பாடி பழனிசாமி ஒரே போடு.. நிலமே இல்லாமல் விவாதமாகும் அசையா சொத்து விவரம் -
அசைக்க முடியாத அதிமுகவின் எஃகு கோட்டை..50 ஆண்டுகளாக திமுக வெல்லாத நிலக்கோட்டை! மல்லிகை ஊர் யாருக்கு? -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்!












Click it and Unblock the Notifications