தொகுதி மறுசீரமைப்பு கூட்டம் LIVE: 25 ஆண்டுகளுக்கு தொகுதி மறுவரையறை முடிவை ஒத்திவைக்க கோரி தீர்மானம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தொகுதி மறுசீரமைப்பை அடுத்த 25 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக கனிமொழி எம்பி கூறினார். மக்கள் தொகை கட்டுப்பாட்டை சிறப்பாக செயல்படுத்திய மாநிலங்கள் தண்டிக்கப்பட்டுவிட கூடாது என்பதே இந்த கூட்டத்தின் நோக்கம். தொகுதி மறுவரையறையை மத்திய அரசு முறையாக தெளிவுபடுத்த வேண்டும் என்றும் கனிமொழி எம்பி கூறினார்.

நாடாளுமன்ற தொகுதி மறுவரையறைக்கு எதிராக திமுக தலைவரும், முதல்வருமான மு.க ஸ்டாலின் தலைமையில், கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் இன்று சென்னையில் நடந்து வருகிறது. நாடு முழுவதும் உன்னிப்பாக கவனிக்கப்படும் இந்த கூட்டு நடவடிக்கை குழு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் குறித்த முக்கிய தகவல்களை உடனுக்கு உடன் இங்கே பார்க்கலாம்..

Delimitation Meeting  MK Stalin  Chennai

Mar 22, 2025, 2:34 pm IST

ஜனநாயகம் ஒரு போதும் நீர்த்துப்போவதை அனுமதிக்க மாட்டோம் என்று கே. டி ராமராவ் பேச்சு
Mar 22, 2025, 2:34 pm IST

தொகுதி மறுசீரமைப்பு செய்வதன் மூலம் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையும் - கே.டி ராமராவ்
Mar 22, 2025, 2:34 pm IST

மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு என்பது தென் மாநிலங்களின் வளர்ச்சியை பாதிக்கும்.
Mar 22, 2025, 2:34 pm IST

தென் மாநிலங்களுக்கான அநீதி என்பது புதிது இல்லை. தொடர்ந்துகொண்டே இருக்கிறது - கே.டி ராமராவ்
Mar 22, 2025, 2:34 pm IST

இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 36 சதவிகிதம் தென் மாநிலங்களை சார்ந்தது
Mar 22, 2025, 2:34 pm IST

மக்கள் தொகையை மட்டும் கணக்கில் எடுக்கும் நிலையில், பொருளாதார வளர்ச்சியை ஏன் கணக்கில் எடுப்பதில்லை என்று கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்திற்கு பின் கே.டி ராமராவ் பேட்டி
Mar 22, 2025, 1:59 pm IST

தொகுதி மறுசீரமைப்பை 25 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்க தீர்மானம் நிறைவேற்றம் - கனிமொழி
Mar 22, 2025, 1:59 pm IST

மக்கள் தொகை கட்டுப்பாட்டை சிறப்பாக செயல்படுத்திய மாநிலங்கள் தண்டிக்கப்பட்டுவிட கூடாது என்பதே நோக்கம்
Mar 22, 2025, 1:59 pm IST

தொகுதி மறுவரையறையை மத்திய அரசு முறையாக தெளிவுபடுத்த வேண்டும் - கனிமொழி
Mar 22, 2025, 1:59 pm IST

முதல்வர் ஸ்டாலின் முயற்சிக்கு அனைவரும் உறுதுணையாக இருப்பார்கள் - கனிமொழி
Mar 22, 2025, 1:59 pm IST

பிற மாநில கட்சிகளின் தலைவர்கள் ஒத்துழைப்பு வழங்குவதாக தெரிவித்துள்ளனர் - கனிமொழி
Mar 22, 2025, 1:59 pm IST

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியால் கூட்டத்தில் பங்கேற்க இயலவில்லை - கனிமொழி
Mar 22, 2025, 1:37 pm IST

தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் நடந்த கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் நிறைவடைந்தது. அடுத்த கூட்டம் ஐதராபாத்தில் நடைபெறும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மூன்றரை மணி நேரம் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், தொகுதி மறுவரையறையை அடுத்த 30 ஆண்டுகளுக்கு ஒத்தி வைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Mar 22, 2025, 1:34 pm IST

தொகுதி மறுவரையறை குறித்த கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் நிறைவடைந்தது
Mar 22, 2025, 1:34 pm IST

அடுத்த கூட்டம் ஐதராபாத்தில் நடைபெறும் - முதல்வர் ஸ்டாலின்
Mar 22, 2025, 1:34 pm IST

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மூன்றரை மணி நேரம் ஆலோசனை கூட்டம் நடந்தது
Mar 22, 2025, 1:34 pm IST

தொகுதி மறுவரையறையை அடுத்த 30 ஆண்டுகளுக்கு ஒத்தி வைக்க வேண்டும் என தீர்மானம் என்று தகவல்
Mar 22, 2025, 1:23 pm IST

தொகுதி மறுவரையறை மக்களவை தொகுதி எண்ணிக்கை பற்றியது மட்டும் கிடையாது - டிகே சிவக்குமார்
Mar 22, 2025, 1:23 pm IST

கூட்டாட்சியின் எதிர்காலம் சம்மந்தப்பட்டது - கர்நாடக துணை முதல்வர் டிகே சிவக்குமார்
Mar 22, 2025, 1:23 pm IST

தெற்கு வடக்கு இடையேயான போர் கிடையாது - டிகே சிவக்குமார்
Mar 22, 2025, 1:23 pm IST

மாநிலங்களின் ஒன்றியம் இந்தியா என்ற தத்துவத்தை மீட்டு எடுப்பதற்கான போராட்டம் - சிவக்குமார்
Mar 22, 2025, 12:44 pm IST

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு, ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கடிதம்

நாடாளுமன்றத்தில் எந்த மாநிலமும் அதன் பிரதிநிதித்துவத்தை குறைக்காமல் எல்லை நிர்ணய பயிற்சி நடத்தப்பட வேண்டும். மாநிலங்களின் பிரதிநிதித்துவம் பாதிக்காதவாறு தொகுதி மறுசீரமைப்பு தேவை என்று ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
Mar 22, 2025, 12:24 pm IST

தமிழகம், பஞ்சாப் மக்கள் மட்டுமல்ல, மக்கள்தொகையை கட்டுப்படுத்திய அனைத்து மாநிலங்களும் பாதிக்கும் - பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உரை
Mar 22, 2025, 12:20 pm IST

தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் அடுத்த கூட்டம் ஐதராபாத்தில் நடைபெறும் - தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி

தொகுதி மறுசீரமைப்பால் தென் இந்தியா அரசியல் சூழலை இழக்கும். பாஜக நம்மை பேசவே அனுமதிப்பது இல்லை, நினைப்பதை முடிவாக எடுக்கிறார்கள். தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் அடுத்த கூட்டம் ஐதராபாத்தில் நடைபெறும். இந்திரா காந்தி ஆட்சி காலத்திலும் தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டது. ஆனால் தொகுதிகளின் எண்ணிக்கையில் மாற்றம் செய்யப்படவில்லை.

எனது முதல் கருத்து மக்களவை தொகுதியை அதிகரிக்க வேண்டாம். தொகுதி மறுசீரமைப்பால் இந்தியா அரசியல் குரலை இழக்கும். மக்கள் தொகை அடிப்படையிலான வரம்பை நாங்கள் ஏற்க மாட்டோம் - தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி
Mar 22, 2025, 11:57 am IST

நாட்டின் முன்னேற்றத்திற்காகவே மக்கள் தொகை கட்டுப்பாடு - உதயநிதி ஸ்டாலின்

தொகுதி மறுசீரமைப்பை எதிர்த்து ஓரணியில் திரள்வது மகிழ்ச்சி - உதயநிதி ஸ்டாலின்

தொகுதி மறுசீரமைப்பு செய்தால் தொகுதிகளை இழக்க நேரிடும் - உதயநிதி ஸ்டாலின்
Mar 22, 2025, 11:52 am IST

ஜனநாயகத்தை காக்கும் முக்கிய கூட்டம் இது - காணொலி காட்சி மூலமாக ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் உரை

மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளை தீர்மானிக்க கூடாது. மாநில உரிமைகளை பறிக்கும் செயல்களிலையே மத்திய பாஜக அரசு ஈடுபட்டு வருகிறது. தென் மாநிலங்கள் மக்கள்தொகையை கட்டுப்படுத்தாமல் இருந்திருந்தால் பெரும் பிரச்சினை ஏற்பட்டிருக்கும். மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களை ஒன்றிய அரசு தண்டிக்கிறது. இந்த கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தை ஏற்பாடு செய்த தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி என்று நவீன் பட்நாயக் கூறினார்.
Mar 22, 2025, 11:34 am IST

பாஜக நம்மை பேசவே அனுமதிப்பதில்லை. நினைத்ததை முடிவாக எடுக்கிறார்கள் - தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி

சிறப்பாக செயல்பட்டதற்கான தண்டனையே தொகுதி மறுவரையறை. கட்சி வேறுபாடுகளை களைந்து போராடுவோம். டெல்லியில் நடவடிக்கை மேற்கொள்ளும்படி முதல்வர் ஸ்டாலினுக்கு ரேவந்த் ரெட்டி கோரிக்கை
Mar 22, 2025, 11:23 am IST

பன்முகத்தன்மையே இந்தியாவின் பலம் - கேரள முதல்வர் பினராயி விஜயன்

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக மாநிலங்களுடன் ஒன்றிய அரசு ஆலோசனை செய்ய வேண்டும் - பினராயி விஜயன்

மாநில அரசுகளுடன் மத்திய அரசு அர்த்தமுள்ள உரையாடல்களை நடத்த வேண்டும், தொகுதி மறுசீரமைப்பு எண்ணிக்கை மட்டுமல்ல, இது இந்தியாவின் ஆன்மா சம்பந்தப்பட்டது என்று பினராயி விஜயன் பேச்சு
Mar 22, 2025, 11:04 am IST

தொகுதி மறுவரையறை விவகாரம்: அனைத்து மாநிலங்களும் ஒன்றிணைந்து போராட முதல்வர் ஸ்டாலின் அழைப்பு

ஒற்றுமை உணர்வோடு அனைவரும் ஒன்றுபட்டு போராடினால்தான் வெற்றி பெற முடியும் - ஸ்டாலின்

எந்த சூழ்நிலையிலும் நமது பிரதிநிதித்துவம் குறையக் கூடாது, குறையவும் விடக்கூடாது - ஸ்டாலின்

தொகுதி மறுவரையறை தொடர்பாக அரசியல் மற்றும் சட்ட வல்லுனர்கள் குழு அமைக்க தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர் ஸ்டாலின்
Mar 22, 2025, 10:49 am IST

உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் விளக்கம் தெளிவாக இல்லை, குழப்பமாக இருக்கிறது. முன் எப்போதும் இல்லாத ஒற்றுமையுடன் தமிழ்நாடு செயல்படுகிறது. இதே ஒற்றுமையுடன் இந்த அரங்கில் கூடியுள்ள அனைவரும் செயல்பட வேண்டும் - முதல்வர் ஸ்டாலின்
READ MORE

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+