காங்கிரஸ் கட்சியே 2ஆக பிளக்கும்.. தவெக நோக்கி திரும்புதா மேலிட பார்வை? கட்சிக்குள்ளேயே கொதிப்பு!
சென்னை: திமுக - காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் எழுந்துள்ளது வெளிப்படையாகத் தெரியத் தொடங்கியுள்ளது. தொகுதிப் பங்கீட்டில் இரு தரப்புமே பிடிவாதமாக இருப்பதால் சீட் நம்பரை உறுதி செய்ய முடியாத நிலை உள்ளது. மேலிடத்தின் கவனம் விஜய் பக்கம் திரும்பி இருப்பதால் காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே பிளவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தியுள்ளது. டி.ஆர். பாலு தலைமையிலான 7 பேர் கொண்ட குழு, தொகுதி பங்கீடு தொடர்பாக கூட்டணி கட்சிகளை ஒவ்வொன்றாக அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

திமுக கூட்டணி தொகுதிப் பங்கீடு
தற்போது வரை 2 கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 2 தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இந்த தொகுதி பங்கீடு குறித்தான ஒப்பந்தம் கையெழுத்தானது. முஸ்லீம் லீக் ஏணி சின்னத்திலும், மமக உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிட உள்ளது.
காங்கிரஸ் கட்சி குழுவினர் கடந்த சனிக்கிழமை காலை அண்ணா அறிவாலயம் வந்து திமுக குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தக் குழு கடந்த டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினை திமுக தலைமையகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து பேசியது. அப்போது, ஆட்சியில் பங்கு தர வேண்டும் என்றும் அதிக தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என ஸ்டாலினிடம் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் வலியுறுத்தி இருந்தார்.
கூட்டணியில் காங்கிரஸ்
ஆனால், ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை முதல்வர் ஸ்டாலின் ஏற்கவில்லை. இதை வெளிப்படையாகவே தெரிவித்தார். இதற்கிடையே மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் திமுகவை சீண்டி வந்ததால் சலசலப்பு ஏற்பட்டது. திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி விலகி, விஜய்யின் தவெகவுடன் கூட்டணி அமைக்கக் கூடுமோ? என்ற சந்தேகங்களும் எழுந்தன.
எனினும், காங்கிரஸ் தலைமை, திமுக கூட்டணி என்பதில் உறுதியாக உள்ளதாக கூறப்பட்டது. திமுக எம்.பி கனிமொழி, ராகுல் காந்தியை சந்தித்தும் பேசி இருந்தார். திமுக- காங்கிரஸ் கூட்டணி குறித்து பொதுவெளியில் காங்கிரஸ் கட்சியினர் பேசக் கூடாது என அறிவுறுத்தப்பட்டது. இப்படியான சூஅலில் அண்மையில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினார்.
காங்கிரஸ் கேட்கும் சீட் எண்ணிக்கை
இந்நிலையில் தான் திமுக - காங்கிரஸ் இடையிலான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சனிக்கிழமை நடைபெற்றது. அப்போது காங்கிரஸ் கட்சி 39 தொகுதிகளைக் கேட்டதாகவும், திமுக தரப்பில் 23 தொகுதிகளை வழங்குகிறோம் எனச் சொன்னதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
காங்கிரஸ் கட்சி, முன்பு, முதல்வர் ஸ்டாலினை சந்தித்தபோது 41 சீட்+ ராஜ்யசபா சீட் வேண்டும் என வலியுறுத்தி இருந்தது. எனினும், தேமுதிக உள்ளிட்ட கட்சிகளின் வருகை காரணமாக தற்போது சீட் எண்ணிக்கையை குறைத்துக் கொள்ள முன்வந்துள்ளது. சனிக்கிழமை நடந்த பேச்சுவார்த்தையின்போது, 39 சட்டசபை தொகுதிகள் வேண்டும் + 2 ராஜ்யசபா சீட் வேண்டும் எனக் கேட்டுள்ளனர்.
திமுக முடிவு
ஆனால், திமுக தரப்பிலோ, கூட்டணி விரிவடைந்துள்ளதால் எல்லா கட்சியுமே கடந்த தேர்தலை விட குறைவான தொகுதிகளில் தான் போட்டியிடுகிறோம், கூட்டணி பெரிதாகி உள்ளதால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது, அதனை கருத்தில் கொண்டு சீட்களை கேட்க வேண்டும் என திமுக தரப்பில் கூறியுள்ளனர்.
அதற்கு காங்கிரஸ் குழுவினரோ, கடந்த முறையே, கூட்டணி நலன் கருதித்தான், கட்சியினரை சமாதானப்படுத்தி 25 தொகுதிகளுக்கு ஒப்புக்கொண்டோம், குறைவான தொகுதிகளில் போட்டியிட்டால் இங்கு கட்சியை வளர்க்க முடியாது எனக் கூறியுள்ளனர். இதையடுத்து பேச்சுவார்த்தைக்கு மீண்டும் அழைப்பதாக திமுக குழு கூறியுள்ளது.
இழுபறி சூழல்
காங்கிரஸ் கட்சி கேட்கும் சீட் எண்ணிக்கையை குறைக்காமல் பிடிவாதமாக இருப்பதால் எந்த முடிவுக்கும் தயார் நிலையில் ஸ்டாலின் இருப்பதாக கூறப்படுகிறது. முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளுக்கு ராகுல் காந்தி 'அண்ணன்' எனக் குறிப்பிடாமல் ட்வீட் செய்தது சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது.
வழக்கமாக நெருக்கமான விளிப்போடு அழைக்கும் ராகுல் தேர்தல் நேரத்தில் பட்டும் படாமல் ட்வீட் போட்டது திமுக தரப்புக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஸ்டாலினும் அதே பாணியில் சம்பிரதாய ரிப்ளை கொடுத்தார். இது அரசியல் அரங்கில் விவாதமாகி உள்ளது.
கிரிஷ் சோடங்கர் பேச்சால் சலசலப்பு
இதற்கிடையே, காங்கிரஸ் மேலிட பொறுப்பாளார் கிரிஷ் சோடங்கர், தவெகவுக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல ஆதரவு இருப்பதாக கூறியுள்ளார். இது திமுகவை சீண்டும் வகையில் அமைந்துள்ளது. இனி, கூட்டணியில் நீடிப்பதும் விலகுவதும் காங்கிரஸ் கட்சியின் கைகளில் தான் இருக்கிறது என்கிறார்கள்.
காங்கிரஸ் கட்சிக்குள் பிளவு
ஒருவேளை, காங்கிரஸ் மேலிடம், தவெக கூட்டணி என்ற முடிவை எடுத்தால், கட்சியைப் பிளக்க சிலர் தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. திமுக கூட்டணியை விரும்பும் காங்கிரஸ் தலைவர்கள், குறிப்பாக, சிட்டிங் எம்.எல்.ஏக்கள் தவெக கூட்டணியில் காங்கிரஸ் இணைந்தால் தமிழக காங்கிரஸ் கட்சியே இரண்டாக பிளக்கக்கூடும் என்ற நிலை இருப்பதாகவே தெரிகிறது.
-
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
திமுக கூட்டணிக்கு 172 முதல் 178 இடங்கள்.. அதிமுக சறுக்கல்.. அப்போ தவெக.. வெளியான பரபர சர்வே! -
சிங்காநல்லூரில் வசமாக சிக்கிய காங்கிரஸ்.. வேட்பாளர் பெயரை பாருங்க! அலப்பறை ஓவரா இருக்கே! -
27 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்.. மேலூர் தொகுதிக்கு மட்டும் நிறுத்திவைப்பு! -
கைவிட்டு போன அவிநாசி.. தவெகவுக்கு தாவிய மகன்! முன்னாள் சபாநாயகர் தனபால் கொடுத்த விளக்கம்! -
திருத்தணி தவெக நிர்வாகியின் அலப்பறை.. தனித்து விடப்பட்டதற்கு காரணம் இதுதான்! புலம்பும் நிர்வாகிகள் -
85% ஓவர்.. இன்னும் சில மணி நேரங்களில் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல்.. செல்வப்பெருந்தகை அப்டேட்! -
திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் சொத்து பறிமுதல் ரத்து.. அமலாக்கத்துறை வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி! -
அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார் முன்னாள் எம்எல்ஏ! தினகரன் அதிர்ச்சி -
அடம்பிடித்து ஈரோடு கிழக்கை கேட்டு வாங்கிய காங்கிரஸ்.. இப்போ எங்க போச்சு! நெட்டிசன்கள் சரமாரி கேள்வி! -
இன்னும் 2 நாட்கள்தான் இருக்கு! காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஏன் இழுபறி? -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி!












Click it and Unblock the Notifications