சென்னை பஸ்களில் டிக்கெட் மெஷினில் திடீர் கோளாறு.. பயணிகள் இதை பண்ணாதீங்க.. பறந்த முக்கிய அட்வைஸ்
சென்னை: சென்னை மாநகர பேருந்துகளில் டிக்கெட் இயந்திரங்களில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது என்றும், இதனால் யுபிஐ, சென்னை ஓன் செயலி வழியாக தற்காலிகமாக டிக்கெட் எடுக்க முடியாது எனவும் எம்.டி.சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் தொழில் நுட்ப கோளாறு சீர் செய்யப்படும் வரை அச்சிடப்பட்ட டிக்கெட் வழங்கப்படும் எனவும் சென்னை எம்.டி.சி அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.
சென்னை மாநகர பேருந்துகளில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணம் செய்கிறார்கள். அலுவலகங்கள் செல்பவர்கள், தொழிலாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் பயன்படுத்தும் முக்கிய போக்குவரத்து அமைப்பாக நகர பேருந்துகளே உள்ளன.

சென்னையை பொறுத்தவரை மின்சார ரயில், மெட்ரோ ரயில் என இல்லாத இடங்களுக்கும் சரி இருக்கும் இடங்களுக்கும் சரி.. அனைத்து பகுதிகளுக்கும் பேருந்துகள் மூலமே செல்ல முடியும் என்பதால் நகர பேருந்துகளில் பயணிகள் கூட்டம் எப்போதும் அலைமோதும். சென்னை நகர பேருந்துகளில் தற்போது டிஜிட்டல் முறையில் டிக்கெட் எடுக்கும் வசதி உள்ளது.
நடத்துநர்களிடம் உள்ள டிக்கெட் இயந்திரத்தில் உள்ள கியு ஆர் கோடை ஸ்கேன் செய்து யுபிஐ வழியாக டிக்கெட் எடுக்கலாம். அதேபோல சென்னை ஒன் செயலி வழியாகவும் டிக்கெட் முடியும். இது பயணிகளுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருந்து வருகிறது. இந்த நிலையில் இன்று சென்னை மாநகர போக்குவரத்து கழகம் பயணிகளுக்கு இன்று முக்கிய அறிவுறுத்தலை விடுத்துள்ளது.
அதாவது, டிக்கெட் இயந்திரங்களில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதால் மீண்டும் பழையபடி காகிதங்களில் டிக்கெட் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகர போக்குவரத்து கழகம் கூறியிருப்பதாவது:-
சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பயன்படுத்தப்படும் மின்னணு பயணச்சீட்டு இயந்திரங்களில் (ETM) எதிர்பாராத தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதால், தற்போது மின்னணு பயணச்சீட்டுகளை வழங்குவதில் தற்காலிகத் தடை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக, தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்படும் வரை நடத்துனர்கள் மூலமாக காகிதத்திலான கைமுறை (Manual) பயணச்சீட்டுகள் மட்டுமே வழங்குவார்கள் என்பதைப் பயணிகள் கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இக்காலக்கட்டத்தில் UPI, NCMC கார்டுகள், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலமான பணப்பரிமாற்றங்களை ஏற்க இயலாது என்பதையும்,
'சென்னை ஒன்' (Chennai One App) செயலி தற்காலிகமாகச் செயல்படாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள இந்தச் சிரமத்திற்கு வருந்துவதுடன், தொழில்நுட்பக் குழுவினர் இப்பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பயணிகளின் மேலான ஒத்துழைப்பை நாடுகிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
அதிகாலையில் ஷாக்! தாறுமாறாக உயர்ந்த விமான கட்டணம்! சென்னை-தூத்துக்குடிக்கு டிக்கெட் ரேட்டை பாருங்க -
“தேவையில்லாம பேசின.. அவ்ளோதான்”.. விஜய்யை விமர்சித்த இளைஞரை விரட்டிச் சென்று மிரட்டிய ரசிகை! -
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் டிரான்ஸ்பரான சந்தீப் ராய் ரத்தோர் டிஜிபியானது எப்படி? இரவில் நடந்தது என்ன? -
சென்னைவாசிகளுக்கு மிக பெரிய நிம்மதி.. சீரானது புறநகர் ரயில் சேவை.. வழக்கமான அட்டவணையில் இயக்கம்! -
சென்னையின் மெகா மேக் ஓவர்.. நகரின் மையத்தில்.. வரப்போகும் 3 மேஜர் திட்டங்கள்.. இன்ஜினியரிங் அதிசயம்! -
LPG கேஸ் சிலிண்டர் பதுக்கினால் குண்டர் சட்டம் பாயும் - தமிழ்நாடு அரசு அதிரடி எச்சரிக்கை! -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது












Click it and Unblock the Notifications