மாரியப்பன் தங்கவேலுவுக்கு அரசு வேலை - குரூப் 1 பணியிடம் அளித்தது மகிழ்ச்சி... முதல்வருக்கு நன்றி
பாரலிம்பிக்கில் தங்கம், வெள்ளி வென்ற மாரியப்பன் தங்கவேலுவுக்கு அரசு வேலைக்கான பணி ஆணையை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கியுள்ளார்.
சென்னை: பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கம், வெள்ளி என இரண்டு முறை வென்று சாதனை படைத்த மாரியப்பன் தங்கவேலுவுக்கு குரூப்-1 பணிக்கான பணி நியமன ஆணையை முதல்வர் மு.க ஸ்டாலின் வழங்கினார். தமிழ்நாடு காகித ஆலையின் மார்க்கெட்டிங் பிரிவில் மாரியப்பன் தங்கவேலுக்கு துணைமேலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
Recommended Video
கடந்த 2016ம் ஆண்டு ரியோவில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியின் உயரம் தாண்டுதல் பிரிவில் 1.89 மீட்டர் உயரத்தை தாண்டி அசத்திய மாரியப்பன் அந்த தொடரில் தங்கம் வென்றார்.

இதனால் இந்த முறையும் மாரியப்பன் தங்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்த பாராலிம்பிக் போட்டியில் பங்கேற்ற மாரியப்பன் தங்கவேலு 1.86 மீட்டர் உயரம் தாண்டி மாரியப்பன் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார். இதையடுத்து இந்தியா வந்த மாரியப்பன் தங்கவேலுவிற்கு பெரிய அளவில் வரவேற்பு கொடுக்கப்பட்டது.
மாரியப்பன் தங்கவேலு கடந்த ரியோ பாராஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற போதே அவருக்கு அரசு வேலை கொடுக்கப்படும் என்று முந்தைய ஆட்சியில் தெரிவிக்கப்பட்டது. முக்கியமாக குரூப் 1 பிரிவில் அவருக்கு தமிழ்நாடு அரசில் வேலை வாய்ப்பு கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அவருக்கு நிதி உதவி மட்டுமே வழங்கப்பட்ட நிலையில் வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லை. வேலை கிடைக்காத நிலையிலும் மாரியப்பன் மிக தீவிரமாக அடுத்த பாரா ஒலிம்பிக் போட்டிக்கு தயார் ஆனார். அவருடன் பதக்கம் வென்ற மற்ற மாநில வீரர்களுக்கு வேலை கொடுக்கப்பட்டது. ஆனால் இவருக்கு வேலை கிடைக்கவில்லை.
தமிழ்நாட்டில் பல ஒலிம்பிக் வீரர்கள், தடகள வீரர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த செப்டம்பர் முதல்வர் ஸ்டாலினை சந்தித்த மாரியப்பன் தங்கவேலு தனக்கு வேலை கிடைக்கவில்லை என்று உருக்கமாக கோரிக்கை வைத்தார். அப்போது மாரியப்பன் கையை பிடித்து முதல்வர் ஸ்டாலின் உருக்கமாக பேசினார். உனக்கு கண்டிப்பாக வேலை கிடைக்கும். அரசு வேலையை உனக்கு கண்டிப்பாக கொடுப்பேன் என்று அப்போதே முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்தார்.
முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்தபடி இன்றைய தினம் மாரியப்பன் தங்கவேலுக்கு அரசு வேலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார். மாரியப்பன் தங்கவேலுக்கு குரூப்-1 பணிக்கான பணி நியமன ஆணை அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு காகித ஆலையின் மார்க்கெட்டிங் பிரிவில் மாரியப்பன் தங்கவேலுக்கு துணைமேலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இதனை பெற்றுக்கொண்ட மாரியப்பன் தங்கவேலு நெகிழ்ச்சியுடன் நன்றி கூறினார். குரூப் 1 பணியிடம் கொடுத்தது மகிழ்ச்சியளிப்பதாக கூறிய மாரியப்பன் அரசு வேலை கொடுத்த முதல்வருக்கு நன்றி என்று கூறினார்.
-
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
சென்னையில் வீடுகளுக்கு குழாய் மூலம் கேஸ்.. கட்டணம், பாதுகாப்பு எப்படி.. அதிகாரி விளக்கம் -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
சென்னையில் ஓஎம்ஆர், தி நகரில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி.. தேடி வந்து விதிக்கப்படும் அபராதம் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications