அன்று ஜெயலலிதா எதிர்த்தார்.. எடப்பாடி கையெழுத்திட்டார்.. மின் கட்டண உயர்வு குறித்து காங். எம்எல்ஏ
சென்னை: தமிழகத்தில் மின் கட்டண உயர்வுக்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிதான் காரணம் என காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செல்வப்பெருந்தகை எம்எல்ஏ கூறுகையில் தமிழகத்தில் மின் கட்டண உயர்வுக்கு முக்கிய காரணம் எடப்பாடி பழனிச்சாமிதான். மத்திய அரசு கொண்டு வந்த உதய் மின் திட்டத்திற்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
இந்த திட்டத்தில் கையெழுத்திட்டால் தமிழக மாநில உரிமைககள் பறி போகும். கடன் பெற முடியாத சூழல் உருவாகும் என கூறி அந்த திட்டத்தில் கையெழுத்திட ஜெயலலிதா அப்போது மறுத்துவிட்டார்.

மறைவு
ஆனால் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு முதல்வரான எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோடியின் பேச்சை கேட்டு அந்த உதய் மின் திட்டத்தில் கையெழுத்திட்டுவிட்டார். இதனால் நம்மால் எங்கும் கடன் வாங்க முடியாத சூழல் எழுந்துள்ளது என்றார். தமிழகத்தில் 8 ஆண்டுகளுக்கு பிறகு மின் கட்டணம் உயர்த்தப்படுகிறது என மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

சென்னை
இது குறித்து அவர் சென்னையில் மின்வாரிய அலுவலகத்தில் அளித்த பேட்டியில், கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் மின்சாரத் துறைக்கு ரூ 12,647 கோடி கடன் உயர்ந்துள்ளது. மத்திய மின் துறை 7 முறையும், மேல்முறையீட்டு ஆணையம் ஒரு முறையும் ஆர் இ பி சி எஃப் சி 5 முறையும், ஒழுங்குமுறை ஆணையம் 18 முறையும் என ஒட்டுமொத்தமாக 28 முறை மின் கட்டணங்களை உயர்தத வேண்டும் என தமிழக மின்வாரியத்திற்கு கடிதங்கள் எழுதப்பட்டிருந்தன.

கட்டணம் உயர்த்த வேண்டிய நிலை
அதனால் வேறு வழியில்லாமல் கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். மின்சாரத் துறையை மீட்டெடுக்க வேண்டிய நிலையும் உள்ளது. தமிழகத்தில் வரக் கூடிய தொழிற்சாலைகளுக்கு உடனடியாக மின் தேவைகளுக்கு ஏற்க கூடுதல் மின் உற்பத்தி நிறுவுதிறனை நிறுவி நாம் அதை செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
Recommended Video

மின் கட்டண மாற்றம்
குறிப்பாக அதிமுக ஆட்சியில் சீரழிக்கப்பட்ட மின்துறையை பொதுமக்களுக்கு எந்த வித பாதிப்பும் இல்லாத வகையில் மேம்படுத்த வேண்டிய ஒரு கட்டாயத்திற்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். எனவே பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மின்கட்டணங்களில் மாற்றங்களை செய்கிறோம் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
-
அதிமுக தொகுதி பங்கீடு எல்லாம் ஓகேதான்! ஆனா.. ஜி.கே.வாசன் மிஸ்ஸிங்! கவனிச்சிங்களா! -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
விஜய்க்கு ஷாக்.. தமிழக வெற்றி கழகத்துக்கு செக்! 10 சதவீதத்துக்கும் கீழே ‘தவெக’ - சறுக்கிய வியூகம்? -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
வன்னியர் மட்டும் வாழக் கூடாதா? காங்கிரஸ் கட்சிக்குள் வெடித்த மோதல்! சீனியர் தலை போட்ட பரபர மீட்டிங்! -
திமுகவுக்கு ஷாக்.. வன்னியர் நிறைந்த 3 தொகுதி + தனி சின்னம்.. வேல்முருகனுக்கு அதிமுக ஆஃபரின் பின்னணி -
"100 தொகுதிகளில் போட்டியிட வேட்பாளர்கள் தயாராக உள்ளனர்".. பரபரப்பைக் கிளப்பிய கிருஷ்ணசாமி! -
தனிச்சின்னம் கிடையாது.. சிறிய கட்சிகளை விழுங்கும் திமுக - அதிமுக.. 2021 தேர்தலில் என்ன நடந்தது? -
கேரளா தலையெழுத்தை தீர்மானிக்கும் "அந்த" சில ஆயிரம் வாக்குகள்.. கரையேறுமா காங்கிரஸ்? -
தேர்தலுக்கு முன்பே.. முக்கியமான "வாரில்" தோற்ற விஜய்.. தவெக இப்பவும் சுதாரிக்கலைனா.. போச்சு! -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
கடைசி நேரத்தில் ‘ட்விஸ்ட்’.. கூட்டணி கட்சியான NR காங்கிரஸில் இணைந்த புதுச்சேரி அதிமுக மாநில நிர்வாகி












Click it and Unblock the Notifications