மதுரை சித்திரை திருவிழாவுக்கு தடை... ஹரித்வார் கும்பமேளாவுக்கு அனுமதியா? கொதிக்கும் பக்தர்கள்
சென்னை: கொரோனா பரவலை முன்னிட்டு தமிழகத்தின் பண்பாட்டு அடையாளங்களில் ஒன்றான மதுரை சித்திரை திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா கோரத்தாண்டவமாடும் சூழ்நிலையில் பல லட்சம் பேர் ஒன்று திரளும் ஹரித்வார் கும்பமேளாவுக்கு மட்டும் அனுமதி கொடுக்கப்பட்டிருப்பது எந்த வகையில் நியாயம்? என்பது மதுரை பக்தர்களின் கேள்வி.
மதுரை சித்திரை திருவிழா, அழகர் ஆற்றில் இறங்குதல் தென்தமிழகத்தின் பிரதான பண்பாட்டு பெருவிழா. ஜாதி, மத மாச்சரியங்களுக்கு கிஞ்சித்தும் இடம்தராமல் தமிழர்களாய் ஒன்றுபட்டு பங்கேற்கும் பெருந்திருவிழா.
சித்திரை திருவிழா என்பது தென்தமிழகத்தின் ஆகப் பெரும் கொண்டாட்டங்களின் உச்சம். இத்தனை நூறாண்டுகளாக நடைபெறும் இந்த சித்திரை திருவிழாவில் எந்தவிதமான சர்ச்சைகளும் நிகழ்ந்தது இல்லை. அத்தனை லட்சக்கணக்கான பொதுமக்கள் வைகை ஆற்றில் ஒருசேர இறங்கினாலும் நெரிசலில் சிக்காமல் வீடு திரும்புவர்.

பக்தர்கள் பங்கேற்க முடியாது
இத்தகைய பண்பாட்டு திருவிழாவுக்கு கொரோனா பரவலை முன்வைத்து பக்தர்கள் பங்கேற்க முடியாத நிலை உருவாகிவிட்டது. ஒருவகையில் கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டும் என்கிற போது இத்தகைய கட்டுப்பாடுகளை நாமாக பின்பற்றத்தான் வேண்டும். இதில் அரசுக்கு எப்போதும் ஒத்துழைப்பு கொடுக்கத்தான் வேண்டும். இதில் இருவேறு கருத்துகளுக்கும் இடமில்லை.

ஹரித்வார் கும்பமேளா
ஆனால் தமிழகத்தின் சித்திரை திருவிழாவில் பங்கேற்க கூட்டாது என்கிற போது வட இந்தியாவில் ஹரித்வார் நகரில் நடைபெறும் கும்பமேளாவுக்கு மட்டும் எப்படி அனுமதி கொடுக்கப்படுகிறது? மூர்க்க குணம் கொண்ட நிர்வாண சாதுக்களின் கூத்தடிப்புகளுடன் இந்த கும்பமேளா புனித நீராடலுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அதுவும் ஒரே நேரத்தில் பல லட்சம் பேர் கங்கை நதியில் நீராடுகிறார்கள்.

கொரோனா கவலையே இல்லை
ஹரித்வார் தெருக்களில் நடமாடும் எவருக்கும் கொரோனா பற்றி கிஞ்சித்தும் கவலை இல்லை. இத்தனை ஆயிரம் நிர்வாண சாதுக்கள் எப்படி ஒருசேர ஹரித்வாரில் கூடுகிறார்கள்? இதற்கு காரணமே சாதுக்களின் அகாடாக்கள்தான்.

அகாடாக்களை மூட வேண்டும்
ஹரித்வார் நகரம முழுவதும் இந்த அகாடாக்கள் என்ற சாதுக்களின் அமைப்புகளுக்கான ஏராளமான மடங்கள் கட்டிவிடப்பட்டுள்ளது. வெளியில் சாதுக்களாகளாக இருந்தாலும் இந்த அகாடாக்கள் சொகுசு வசதிகளைக் கொண்டவை. அதனால் ஹரித்வார் கும்பமேளாவுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும் எனில் இந்த அகாடாக்களை இழுத்து மூட வேண்டும்.

ஏன் இந்த பாகுபாடு?
சித்திரை திருவிழாவில் பல லட்சம் பேர் ஒன்று திரண்டால் கொரோனா கொத்தாக தாக்கும் என்கிற நியாயப்பாடு ஏன் ஹரித்வார் கும்பமேளாவுக்கு பொருந்தாது என்பதுதான் புரியாத புதிர். ஆனால் நிச்சயமாக இது மாற்றாந்தாய் மனப்பான்மை என்பதாக மதுரை பக்தர்கள் வேதனையை வெளிப்படுத்துகின்றனர்.
-
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு! -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்?












Click it and Unblock the Notifications