2000 வருஷம் பின்னாடி! இந்து மதத்தை பிரிங்க.. ஆனா தமிழ்நாட்டையும் பிரிக்கனும்! திருமாவை விடாத பேரரசு!
சென்னை : இந்து சமய அறநிலையத்துறையை சைவம், வைணவம் என பிரிக்க வேண்டுமென விசிக தலைவர் திருமாவளவன் கூறிய நிலையில், திருமாவளவன் சொல்வது போல, ஹிந்து மதத்தை சைவம், வைணவம் என்று பிரித்து விட்டு, தமிழகத்தை, சேர, சோழ, பாண்டிய நாடுகள் என்று பிரித்து விடுங்கள் என இயக்குனரும் பாஜகவைச் சேர்ந்தவருமான பேரரசு கூறியுள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் விசிகவைச் சேர்ந்த மதுரை மாமன்ற உறுப்பினரும், தெற்கு மாவட்ட செயலாளர் இன்குலாப் இல்லத் திருமணத்தை கடந்த சில நாட்களுக்கு முன் நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய உரையின் காணொலியையும் தனது ட்விட்டர் பக்கத்தில் திருமாவளவன் வெளியிட்டிருந்தார். அதில்," திருமண விழாவில் அரசுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தேன் என கூறியிருந்தார்.

பிரிக்க வேண்டும்
அந்த பதிவில்," இந்து சமய அறநிலையத் துறையை சைவ சமய அறநிலையத் துறை என்றும், வைணவ சமய அறநிலையத் துறை என்றும் பிரித்திட வேண்டும் என உரையாற்றினேன். இவ்விரு சமயங்களையும் இந்து சமயம் என்று ஆக்கியதன் மூலம் அவற்றின் அடிப்படைக் கோட்பாடுகள் நீர்த்துப்போகின்றன. அதாவது, சிவனியம், மாலியம் ஆகியவற்றை வைதிக மத கோட்பாடான சனாதனம் விழுங்கிவிட்டு மேலாதிக்கம் செய்கிறது" என கூறினார்.

பேரரசு
இந்நிலையில் திருமாவளவன் சொல்வது போல, ஹிந்து மதத்தை சைவம், வைணவம் என்று பிரித்து விட்டு, தமிழகத்தை, சேர, சோழ, பாண்டிய நாடுகள் என்று பிரித்து விடுங்கள் என இயக்குனரும் பாஜகவைச் சேர்ந்தவருமான பேரரசு கூறியுள்ளார். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர்,"திருமாவளவன் சொல்வது போல, ஹிந்து மதத்தை சைவம், வைணவம் என்று பிரித்து விட்டு, தமிழகத்தை, சேர, சோழ, பாண்டிய நாடுகள் என்று பிரித்து விடுங்கள்.

மதங்களை அகற்றி விடுங்கள்
மீண்டும் தெரு பெயர்களோடு ஜாதிப் பெயரை இணையுங்கள். சைவ, வைணவ காலத்தில் கிறிஸ்துவம், இஸ்லாம் இல்லை. அதனால், அந்த மதங்களை இந்தியாவில் இருந்து அகற்றி விடுங்கள். முக்கியமாக, அப்போது திராவிடம் என்ற வார்த்தையே தமிழர்களிடையே இல்லை. அதனால், முதலில் அந்த வார்த்தையை எங்குமில்லாமல் செய்து விடுங்கள்.

சரியான பதிலடி
இந்தியாவையும், பாகிஸ்தானையும் இணைத்து விடுங்கள்.திருமாவளவன் சொல்வது போல் நாம், 2,000 ஆண்டுகளுக்கு முன் சென்று விடுவோம்." என அந்த அறிக்கையில் பேரரசு கூறியிருக்கிறார். இந்த அறிக்கையினை பாஜகவினர் பகிர்ந்து வரும் நிலையில், திருமாவளவன் இந்து மதத்தை பிரிக்க வேண்டுமென கூறவில்லை என, இந்து சமய அறநிலையத் துறையை தான் சொன்னார் என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications