2000 வருஷம் பின்னாடி! இந்து மதத்தை பிரிங்க.. ஆனா தமிழ்நாட்டையும் பிரிக்கனும்! திருமாவை விடாத பேரரசு!
சென்னை : இந்து சமய அறநிலையத்துறையை சைவம், வைணவம் என பிரிக்க வேண்டுமென விசிக தலைவர் திருமாவளவன் கூறிய நிலையில், திருமாவளவன் சொல்வது போல, ஹிந்து மதத்தை சைவம், வைணவம் என்று பிரித்து விட்டு, தமிழகத்தை, சேர, சோழ, பாண்டிய நாடுகள் என்று பிரித்து விடுங்கள் என இயக்குனரும் பாஜகவைச் சேர்ந்தவருமான பேரரசு கூறியுள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் விசிகவைச் சேர்ந்த மதுரை மாமன்ற உறுப்பினரும், தெற்கு மாவட்ட செயலாளர் இன்குலாப் இல்லத் திருமணத்தை கடந்த சில நாட்களுக்கு முன் நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய உரையின் காணொலியையும் தனது ட்விட்டர் பக்கத்தில் திருமாவளவன் வெளியிட்டிருந்தார். அதில்," திருமண விழாவில் அரசுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தேன் என கூறியிருந்தார்.

பிரிக்க வேண்டும்
அந்த பதிவில்," இந்து சமய அறநிலையத் துறையை சைவ சமய அறநிலையத் துறை என்றும், வைணவ சமய அறநிலையத் துறை என்றும் பிரித்திட வேண்டும் என உரையாற்றினேன். இவ்விரு சமயங்களையும் இந்து சமயம் என்று ஆக்கியதன் மூலம் அவற்றின் அடிப்படைக் கோட்பாடுகள் நீர்த்துப்போகின்றன. அதாவது, சிவனியம், மாலியம் ஆகியவற்றை வைதிக மத கோட்பாடான சனாதனம் விழுங்கிவிட்டு மேலாதிக்கம் செய்கிறது" என கூறினார்.

பேரரசு
இந்நிலையில் திருமாவளவன் சொல்வது போல, ஹிந்து மதத்தை சைவம், வைணவம் என்று பிரித்து விட்டு, தமிழகத்தை, சேர, சோழ, பாண்டிய நாடுகள் என்று பிரித்து விடுங்கள் என இயக்குனரும் பாஜகவைச் சேர்ந்தவருமான பேரரசு கூறியுள்ளார். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர்,"திருமாவளவன் சொல்வது போல, ஹிந்து மதத்தை சைவம், வைணவம் என்று பிரித்து விட்டு, தமிழகத்தை, சேர, சோழ, பாண்டிய நாடுகள் என்று பிரித்து விடுங்கள்.

மதங்களை அகற்றி விடுங்கள்
மீண்டும் தெரு பெயர்களோடு ஜாதிப் பெயரை இணையுங்கள். சைவ, வைணவ காலத்தில் கிறிஸ்துவம், இஸ்லாம் இல்லை. அதனால், அந்த மதங்களை இந்தியாவில் இருந்து அகற்றி விடுங்கள். முக்கியமாக, அப்போது திராவிடம் என்ற வார்த்தையே தமிழர்களிடையே இல்லை. அதனால், முதலில் அந்த வார்த்தையை எங்குமில்லாமல் செய்து விடுங்கள்.

சரியான பதிலடி
இந்தியாவையும், பாகிஸ்தானையும் இணைத்து விடுங்கள்.திருமாவளவன் சொல்வது போல் நாம், 2,000 ஆண்டுகளுக்கு முன் சென்று விடுவோம்." என அந்த அறிக்கையில் பேரரசு கூறியிருக்கிறார். இந்த அறிக்கையினை பாஜகவினர் பகிர்ந்து வரும் நிலையில், திருமாவளவன் இந்து மதத்தை பிரிக்க வேண்டுமென கூறவில்லை என, இந்து சமய அறநிலையத் துறையை தான் சொன்னார் என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
-
15 out of 16: சென்னை மாவட்டத்தில் எத்தனை தொகுதிகளில் திமுக போட்டி? சத்யராஜ் மகளுக்கு சீட் இல்லை! -
சமாதானமாகும் அண்ணாமலை?.. பேட்மிண்டன் மைதானத்துக்கே தேடிப்போன மத்திய அமைச்சர்! பின்னணி -
18 தொகுதிகளில் திமுக VS பாஜக மோதல்.. 5 இடங்களில் அமைச்சர்களுடன் மல்லுகட்டும் ‘தாமரை'.. லிஸ்ட் இதோ -
"காங்- பாஜக கதை ஓவர்".. தொகுதி ஒதுக்கீட்டில் ஸ்டாலின்- எடப்பாடி செய்த சம்பவம்! இதை கவனிச்சீங்களா? -
காங்கிரஸ் VS பாஜக.. தமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் ‘கை' - ‘தாமரை' நேரடி மோதல்.. வெல்வது யாரு? -
Election Exclusive: சிரிச்சுக்கிட்டே சமாளித்த எடப்பாடி..டஃப் தொகுதிகளை தள்ளி விட்டுட்டாரே! கொங்கில் போட்ட மெகா ஸ்கெட்ச்! -
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
தமிழகத்தில் யார் சிறந்த அமைச்சர்கள்? வானதி சீனிவாசன் சொன்ன அந்த இருவர்! பாஜகவை கிண்டல் செய்தாங்களே! -
அதிமுக கூட்டணியில் தாமரையின் '32'.. 2021 புள்ளி விவரம் என்ன.. பாஜகவினர் அறிய வேண்டியவை -
போட்டியிடட்டுமே.. செந்தில் பாலாஜி குறித்த கேள்வியால் சட்டென கடுப்பான நயினார் நாகேந்திரன் -
கோவையில் இருந்து கொண்டே மோடியை வரவேற்க செல்லாத அண்ணாமலை.. லிஸ்டில் இருந்தும் புறக்கணித்து எதிர்ப்பு -
"தமிழகத்தில் பாஜக வளரவில்லை".. அதிமுக தான் எங்கள் பலம்.. மேடையிலேயே தோல்வியை ஒப்புக்கொண்ட அமித்ஷா!












Click it and Unblock the Notifications