O Panneerselvam: கூட்டணிக்கு வாங்க.. ஓ பன்னீர் செல்வத்துக்கு திமுக கொடுத்த ஆஃபர்.. பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது?
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. அந்த வகையில் திமுக தனது கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டு வருகிறது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு தனியாக செயல்பட்டு வரும் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வத்தை கூட்டணிக்குள் கொண்டு வர திமுக பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் அதன் பின்னணி குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வருகிறது. இந்த முறை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, சீமானின் நாம் தமிழர், விஜயின் தவெக என 4 முனை போட்டி நிலவ உள்ளது.
திமுகவும், அதிமுகவும் கூட்டணி அமைத்து களமிறங்கும் நிலையில் சீமானின் நாம் தமிழர் கட்சி வழக்கம்போல் தனித்து போட்டியிடுகிறது.

கூட்டணியை பலப்படுத்தும் திமுக
தவெக சார்பில் விஜய் கூட்டணிக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் தற்போது வரை எந்த கட்சியும் அவரது தலைமையை ஏற்கவில்லை. இதற்கிடையே தான் திமுகவும், அதிமுகவும் தங்களின் கூட்டணியை பலப்படுத்தும் பணியில் தீவிரமாக உள்ளன.
தற்போது வரை பாமக நிறுவனர் ராமதாஸ், பிரேமலதா விஜயகாந்தின் தேமுதிக, கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம், முன்னாள் முதல்வராக ஓ பன்னீர் செல்வத்தின் அதிமுதொஉமீக இன்னும் கூட்டணியை உறுதி செய்யவில்லை.
ஓ பன்னீர் செல்வத்துடன் பேச்சு
இந்நிலையில் தான் ஓ பன்னீர் செல்வத்தை திமுக கூட்டணிக்கு கொண்டு வருவது தொடர்பாக அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு திமுகவின் மூத்த தலைவர் ஒருவர், தொலைபேசியில் ஓ பன்னீர் செல்வத்தை தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது புதிய கட்சியை தொடங்கி திமுகவில் இணையுங்கள். இல்லாவிட்டால் திமுகவில் இணைந்து செயல்பட அவருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
அதுமட்டுமின்றி ஓ பன்னீர் செல்வத்தின் அரசியல் பலம் மற்றும் அவர் சார்ந்த முக்குலத்தோர் சமூகத்தில் அவரது செல்வாக்கு குறித்து தென்மாவட்ட அமைச்சர் ஒருவருடன் திமுக தலைமை ஆலோசனை மேற்கொண்டது.
அப்போது அந்த அமைச்சர், ‛‛ஓ பன்னீர் செல்வத்தால் கட்சிக்கு அதிகப்படியான வாக்குகளை பெற்று தர இயலாது. 2021 சட்டசபை தேர்தலில் 20 தொகுதிகளில் அதிமுகவின் வெற்றி வாய்ப்புகளை டிடிவி தினகரனின் அமமுக கட்சி பறித்தது. டிடிவி தினகரன் போல் ஓ பன்னீர் செல்வம் இல்லை'' என்று கூறியுள்ளார்.
கதவை திறந்து வைத்திருக்கும் திமுக
இருப்பினும், ஓ பன்னீர் செல்வம், திமுக கூட்டணிக்கு வந்தால் அது பலமாக இருக்கும் என்று திமுக நம்புகிறது. விஜயின் அரசியல் வருகை, அதிமுக கூட்டணி பலமாவது, பல முனை போட்டி நிலவுவதால் திமுக யாரையும் மிஸ் செய்ய வேண்டாம் என்று நினைக்கிறது.
இதனால் ஓ பன்னீர் செல்வத்துக்கான கதவை திமுக இன்னும் மூடவில்லை என்று சொல்லப்படுகிறது. இறுதி முடிவு ஓ பன்னீர் செல்வம் வசம் உள்ளது. இதனால் அவர் எத்தகைய நிலைப்பாட்டை எடுக்க உள்ளார்? என்பது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஓபிஎஸ் நிலைப்பாடு என்ன?
இதற்கு முக்கிய காரணம் பன்னீர் செல்வம் அதிமுகவில் இணைவதில் தான் விருப்பமாக உள்ளார். அவருக்கு அரசியலில் அடையாளம் கொடுத்து, முதல்வர் பதவியில் அமர வைத்தது அதிமுக தான். இதனால் அவர் அதிமுகவின் எதிரியாக உள்ள திமுகவில் இணைய தயங்குகிறார்.
அவரது விருப்பம் அதிமுகவாக தான் உள்ளது. இருப்பினும் ஓ பன்னீர் செல்வத்தை எந்த காரணம் கொண்டும் மீண்டும் அதிமுகவில் சேர்க்க முடியாது என்று அந்த கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக உள்ளார்.
தேமுதிகவுடன் பேச்சு
அதேபோல் தேமுதிகவுடனும் திமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. தேமுதிகவுக்கு 7 சட்டசபை தொகுதி, ஒரு ராஜ்யசபா எம்பி பதவியை வழங்க திமுக உறுதியளித்துள்ளதாகவும், விரைவில் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் கடந்த 2021 சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளில் 173 இடங்களில் திமுக களமிறங்கியது. இந்த முறை திமுக 170 தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
அடம்பிடித்து ஈரோடு கிழக்கை கேட்டு வாங்கிய காங்கிரஸ்.. இப்போ எங்க போச்சு! நெட்டிசன்கள் சரமாரி கேள்வி! -
அண்ணாமலை வாபஸ் வாங்க போகிறாரா? கோவை வடக்கு தொகுதியில் வானதி சீனிவாசன் ஷாக் கண்டிஷன்? விழிக்குது பாஜக -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்? -
181–189 தொகுதிகளில் வெற்றி.. மீண்டும் வெல்லும் திமுக கூட்டணி.. அதிமுக – தவெகவிற்கு ஷாக் தந்த சர்வே -
முடியவே முடியாது.. டெல்லியை எதிர்த்து நிற்கும் அண்ணாமலை! பாஜக பட்டியல் தாமதம்! இது தான் காரணம்! -
ஓஎஸ் மணியன் ஏமாற்றிவிட்டார்.. சீட் தராததால் அதிமுக சீர்காழி முன்னாள் எம்.எல்.ஏ கட்சி பதவி ராஜினாமா! -
தர்மபுரியில் மாறுது கணக்கு! சௌமியா அன்புமணியை அதிரவைத்த ராமதாஸின் அந்த ஒரு முடிவு! பலே -
திருமாவளவனுக்கு தெரியும்.. சீட் கொடுக்காதது பற்றி உடைத்து பேசிய ஆளூர் ஷாநவாஸ்! -
ராயபுரத்தை கேட்ட ஆளூர் ஷாநவாஸ்.. டீலில் விட்டது ஏன்? திருமாவளவன் சொன்ன பாயிண்ட்! இதுதான் காரணம் -
176 தொகுதிகளில் உதயசூரியன்! சீர்காழி தொகுதியிலும் தனிச் சின்னம் வேண்டாம்.. வைகோ எடுத்த அதிரடி முடிவு -
அண்ணாமலை போட்டியிடும் தொகுதி இதுவா? ஈரோட்டில் பாஜக செம ட்விஸ்டு.. மொத்த மொடக்குறிச்சியும் வெயிடிங்












Click it and Unblock the Notifications