இனி உணவு மட்டுமல்ல.. மேரேஜ் ஹாலும் டெலிவரி பண்ணுவாங்களாம்! எங்கேயும் போக வேண்டாம்! அட புதுசா இருக்கே
சென்னை: நவீன தொழில்நுட்பங்கள் பரவலான பிறகு எல்லாமும் மனிதனின் கைக்குள் அடங்கி விட்டதாக தோன்றுகிறது. உணவு டெலிவரி, இதர பொருட்கள் டெலிவரி என்கிற வரிசையில் தற்போது திருமண மண்டபமும் டெலிவரி செய்யப்பட்டு வருகிறது.
இது நீங்கள் நினைப்பதை போல் அல்ல. மொபைல் ஏடிஎம் போல மொபைல் திருமண மண்டபங்கள் வந்திருப்பதைதான் டெலிவரி என சொல்கிறேன்.
நாம் நினைத்த இடத்திற்கு இதனை கொண்டு செல்ல முடியும். இதில் தோராயமாக 30-40 வரை அமர முடியும் என்பதால் மக்களின் கவனம் தற்போது இதன் பக்கம் திரும்பியுள்ளது.

மொபைல் திருமண மண்டபம்
அனேநகமாக மொபைல் போன் வந்த பின்னர் மேற்குறிப்பிட்டதைப்போல இந்த உலகமே நமது கையில் சுருங்கிவிட்டதை போல தோன்றுகிறது. இந்த மொபைல் போன் மூலம் பல விஷயங்களை நம்மால் ஒரே இடத்திலிருந்து செய்துவிட முடிகிறது. குறிப்பாக, பண பரிவர்த்தனைகள், தொடர்பு கொள்வது, தகவல்களை அனுப்புவது, அதை காட்சி/ஒலி வடிவிலும் அனுப்ப முடிகிறது. இது நேரத்தை சேமிக்க உதவுகிறது. அந்த வகையில் மொபைல் திருமண மண்டபங்கள் வந்துள்ளன.

கொரோனா கட்டுப்பாடுகள்
உண்மையில் இந்த மண்டபத்திற்கும் மொபைலுக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்றாலும் எங்க சென்றாலும் அதை நம்மால் உடன் கொண்டு செல்ல முடியும் என்பதால் இதற்கு மொபைல் மேரேஜ் ஹால் என பெயர் வந்துள்ளது. கொரோனா காலகட்டங்களில் திருமணம், காது குத்து உள்ளிட்ட நிகழ்ச்சிகளை மேற்கொள்வதற்கும், அதில் பங்கேற்பவர்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அப்போதுதான் இந்த மொபைல் திருமண மண்டபங்கள் அறிமுகமாகின.

சாமானிய மக்களுக்காக
மட்டுமல்லாது, கொரோனா தொற்று பல குடும்பங்களை பொருளாதார நெருக்கடிகளுக்கு உள்ளாக்கியது. இதன் காரணமாக குறைந்த செலவில் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தி முடிக்க வேண்டி நிலைக்கு சாமானிய மக்கள் தள்ளப்பட்டனர். இந்த நெருக்கடியும் இது போன்ற மொபைல் திருமண மண்டபங்கள் அதிகரிக்க காரணமாகியுள்ளன. இது குறைந்த விலையில் கிடைப்பதால் மக்களும் இதனை பயன்படுத்திக்கொள்கின்றனர்.

30-40 பேர் வரை
கொரோனா தொற்று இது போன்ற இன்னும் நிறைய மாற்றங்களை ஏற்படுத்த இருப்பதாக பலர் தெரிவிக்கின்றனர். இதுபோன்று மேலை நாடுகளில் ஏற்கெனவே பல அம்சங்கள் இருந்தாலும் இந்தியாவில் தற்போதுதான் இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு கண்டெயனரில் இது ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லப்படும் இந்த மொபைல் திருமண மண்டபத்தில் தோராயமாக 30-40 வரை அமர முடியும். பார்ப்பதற்கு 10X40 அளவில் இருக்கும் இது விரிவாகினால் 30X40 அளவில் இருக்கும் இந்த மொபைல் திருமண மண்டபம்.
-
“நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் அனுமதிக்க முடியாது.. அது இல்லாமலோயே கல்வி சிறப்பாக உள்ளது” - தமிழக அரசு -
28 நாட்கள் கழித்துதான் கேஸ் சிலிண்டர் வருமா? இதென்ன கணக்கு! இட்லி, தோசைக்கு தமிழகத்தில் டிமாண்டு? -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
எல்பிஜி கேஸ் சிலிண்டர் தமிழகத்தில் பதிய 25 நாள்களா? எரியாத ஸ்டவ்கள்.. மதுரை வெங்கடேசன் உடைத்த உண்மை -
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
தமிழகத்திலிருந்து ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்ட 6 பேரும்.. போட்டியின்றி தேர்வு! -
கொரோனா லாக்-டவுன் மாதிரி ஆயிடுச்சு.. இட்லியில் கை வைத்த இஸ்ரேல்! சிலிண்டர் சிக்கல் எப்போது தீரும்? -
செஸ் உலகில்.. மிகப்பெரிய சாதனை செய்த தமிழக சிறுவன்! 9 வயசுல இதை செய்யுறது பெரிய விஷயம்! -
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் எப்போது? பரபர களம்.. கோதாவில் குதிக்க ரெடியான கட்சிகள்! லீக்கான தேதி! -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான்












Click it and Unblock the Notifications