திமுகவோடு ஐக்கியம் ஆகிட்டாரு ஓபிஎஸ்.. இப்போ மகன் நன்றிக்கடன் செலுத்துறாரு.. விளாசிய ஜெயக்குமார்!
சென்னை : திமுகவுடன் ஐக்கியமான ஓ.பன்னீர்செல்வத்தின் அருமை மைந்தன் ஓ.பி.ரவீந்திரநாத், அதிமுக திட்டத்தை மூடிய, திமுக அரசுக்கு மனப்பூர்வமாக பாராட்டு தெரிவிக்கிறார் என விமர்சித்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.
சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ் எல்லோரும் ஸ்டாலினோடு போய் சேர்ந்துவிடுங்கள். அங்கு போய் ஒற்றுமையாகச் செயல்படுங்கள் எனக் கூறியுள்ளார் ஜெயக்குமார்.
தனது அப்பாவுக்கு எல்லா வகையிலும் உறுதுணையாக இருக்கும் திமுகவுக்கு ஓபிஎஸ் மைந்தன் ஓ.பி.ரவீந்திரநாத் நன்றிக்கடன் செலுத்துகிறார் என ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

திமுக அரை பாராட்டிய ஓபி ரவீந்திரநாத்
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட 'தாலிக்குத் தங்கம்' திட்டத்தை மாற்றி 'புதுமைப்பெண்' திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். அதுகுறித்துப் பேசிய ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும் அதிமுக எம்.பியுமான ஓபி ரவீந்திரநாத், திமுக அரசு அறிவித்துள்ள மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூபாய் 1,000 வழங்கும் திட்டத்தை வரவேற்பதாகத் தெரிவித்தார்.

அதிமுக திட்டங்களுக்கு மூடுவிழா
இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ஈபிஎஸ் ஆதரவாளரும் முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார், "அதிமுக அரசின் திட்டங்கள் அனைத்திற்கும் மூடுவிழா நடத்துகிறது திமுக அரசு. புதுமைப் பெண் திட்டத்தை கொண்டு வந்திருக்கிறார்கள். அதற்கு, அதிமுக அரசு செயல்படுத்திய தாலிக்குத் தங்கம் திட்டத்தையே செயல்படுத்தலாமே? அதே டிகிரி படிக்கும் பெண்கள் தானே திருமணம் ஆகும்போது 50,000 மற்றும் தாலிக்குத் தங்கம் உதவியைப் பெறப்போகிறார்கள். அது பெரிதா, இப்போது 1000 ரூபாய் பெறுவது பெரிதா?

திமுகவோடு ஐக்கியமான ஓபிஎஸ்
அதிமுக திட்டம் என்பதால், அதை மாற்றுகிறார்கள். அதையும் ஒருவர் புகழ்கிறார். திமுகவுடன் ஐக்கியமான ஓ.பன்னீர்செல்வத்தின் அருமை மைந்தன் ஓ.பி.ரவீந்திரநாத் திமுக அரசுக்கு மனப்பூர்வமாக பாராட்டு தெரிவிக்கிறார். பேசாமல், நீங்கள் திமுகவோடே போய் சேர்ந்துவிடுங்கள். சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ் எல்லோரும் ஸ்டாலினோடு போய் சேர்ந்துவிடுங்கள். அங்கு போய் ஒற்றுமையாகச் செயல்படுங்கள்.

நன்றிக்கடன்
எப்படிப்பட்ட திட்டமிட்ட மூடிவிட்ட அரசை, இப்படி பாராட்டுகிறார்கள் என்றால் இதைவிட ஜெயலலிதாவுக்கு செய்கிற துரோகம் இருக்க முடியாது. தனது அப்பாவுக்கு எல்லா வகையிலும் உறுதுணையாக இருக்கும் திமுகவுக்கு ஓபிஎஸ் மைந்தன் நன்றிக்கடன் செலுத்துகிறார். அதற்காகத்தான் வாழ்த்துப்பா பாடும் நிலைக்கு ரவீந்திரநாத் வந்திருக்கிறார்.

திராவிட மாடல்
திராவிடம் என்கிற அருமையான பெயரை குட்டிச் சுவராக்கி வருகிறார்கள். திராவிட மாடல் ஆட்சி என்றால் சிறப்பாக இருக்க வேண்டும். ஆனால், ஒழுங்கீனமாக, சட்டம் ஒழுங்கு சீர்கேடு நடக்கிறது. எல்லா வகையிலும் மக்களுக்கு கஷ்டத்தை ஏற்படுத்தும் ஒரு ஆட்சியை நடத்தி விட்டு திராவிட ஆட்சி என கூறுகிறார்கள். திராவிடம் என்றாலே கேலி செய்யும் அளவுக்கு ஆக்கிவிட்டது இந்த திமுக அரசு." என விமர்சித்தார்.
-
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
“பாஜகவுக்கு ஒரு தொகுதியை விட்டுக் கொடுத்துட்டேன்”.. கூலாக சொன்ன புதிய நீதிக்கட்சி தலைவர் AC சண்முகம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
இலவச திட்டங்களுக்கு எத்தனை கோடி செலவாகும்? திமுக.. அதிமுக.. தவெக..? யார் டாப்? -
தவெக கட்சியினருக்கு ஷாக்! கரூர் வழக்கில் கைதாகி ஜாமீனில் இருந்த மாசி பவுன்ராஜ் அதிமுகவில் இணைந்தார்! -
ஏ.சி.சண்முகம் கட்சிக்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக தலைமை.. தாமரை சின்னத்தில் போட்டியிட சீட் இல்லை! -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு












Click it and Unblock the Notifications