"கொள்ளைக்கூடாரம்".. உண்டியலில் காசு போடாதீர்கள்..அறநிலையத்துறையை நீக்குங்கள் - மதுரை ஆதீனம் ஆவேசம்
இந்து சமய அறநிலையத்துறையை நீக்கிவிட்டு நீதிபதி தலைமையில் குழு அமைத்து கோவில்களை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று மதுரை ஆதீனம் பேசியுள்ளார்.
சென்னை: ஆதீனங்கள் அரசியல் பேசக்கூடாது என்கிறார்கள். அப்படி என்றால் அரசியல்வாதிகளுக்கு கோவிலுக்குள் என்ன வேலை? என்று மதுரை ஆதீனம் ஹரிஹர தேசிக ஞான சம்பந்த பரமாச்சார்ய சுவாமி கேள்வி எழுப்பியுள்ளார். அறநிலையத்துறையை நீக்கிவிட்டு நீதிபதி தலைமையில் குழு அமைத்து கோவில்களை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Recommended Video
துறவியர் மாநாடு விசுவ இந்து பரிஷத் அமைப்பின் அறவழிகாட்டும் ஆன்றோர் பேரவையின் சார்பில் மாநிலம் தழுவிய துறவியர் மாநாடு மதுரையில் நேற்று முன்தினம் தொடங்கியது. இரண்டாம் நாளான நேற்று மதுரை பழங்காநத்தம் பகுதியில் நிறைவு விழா பொதுக்கூட்டம் நடந்தது.
இந்து கோவில்களை அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்து ஆதீனங்கள், ஜீயர்கள், மடாதிபதிகள் அடங்கிய தனி வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று மதுரையில் நடந்த துறவியர் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

ஆதினங்கள் ஆலோசனை
துறவியர் மாநாட்டில் இந்து சமயத்தை வளர்ப்பது குறித்து கலந்துரையாடப்பட்டது. அது தொடர்பாக பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், மதுரையில் 2 நாட்கள் நடைபெற்ற துறவியர் மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து துறவிகள், ஆதீனங்கள், மடாதிபதிகள், ஜீயர்கள் பங்கேற்றனர். மாநாட்டில் இந்து சமூகத்துக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

துறவியர் மாநாட்டில் தீர்மானம்
இந்து கோவில்களை அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்து ஆதீனங்கள், ஜீயர்கள், மடாதிபதிகள் அடங்கிய தனி வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று மதுரையில் நடந்த துறவியர் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாலையில் பழங்காநத்தம் பகுதியில் பொதுக் கூட்டம் நடந்தது. பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் தலைமை தாங்கி தீர்மானங்களை வாசித்தார்.

பதிலடி தர வேண்டும்
விசுவ இந்து பரிஷத் அகில உலக பொதுச் செயலாளர் ஸ்ரீமிலிந்த் ப்ராண்டே பேசுகையில், இந்துக்கள் அனைவரும் இந்து மதத்தை காக்க ஒன்றுசேர வேண்டும் அதுமட்டுமின்றி இந்துக்களை காப்போம் என சபதம் ஏற்க வேண்டும் என்றார். அகில உலக இணை பொதுச் செயலாளர் ஸ்ரீகோ. ஸ்தாணு மாலயன் பேசுகையில், மக்கள் விழித்தெழ வேண்டும். இந்துக்களை தவறாக பேசுபவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்றார்.

கோவிலுக்குள் என்ன வேலை
இதனைத்தொடர்ந்து மதுரை ஆதீனம் ஹரிஹர தேசிக ஞான சம்பந்த பரமாச்சார்ய சுவாமி பேசுகையில், ஆதீனங்கள் அரசியல் பேசக்கூடாது என்கிறார்கள். அப்படி என்றால் அரசியல்வாதிகளுக்கு கோவிலுக்குள் என்ன வேலை? அறநிலையத்துறையை நீக்கிவிட்டு நீதிபதி தலைமையில் குழு அமைத்து கோவில்களை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றார்.

உண்டியலில் காசு போடாதீர்கள்
இந்துக்களை பாதுகாக்க அனைத்து ஆதீனங்களும் துறவியர்களும் ஒன்று சேர்ந்துள்ளனர். அரசியல்வாதிகள்தான் கோவில்களில் தக்கார்களாக உள்ளனர். இதனால் கோவில்களுக்குள்ளும் அரசியல் புகுந்து விட்டது. கோவில்கள் அரசியல்வாதிகளின் கொள்ளைக்கூடாராமாக மாறி வருவதாகவும் கூறிய அவர் கோவில் உண்டியல்களில் மக்கள் காசு போடாதீர்கள் என்றும் கேட்டுக்கொண்டார்.

ஜால்ரா போட முடியாது
அரசியல்வாதிகள் ரமலான் பண்டிகைக்கு குல்லா அணிகிறார்கள். நோன்பு கஞ்சி குடிக்கிறார்கள். அதே நேரத்தில் கோவில்களில் கொடுக்கும் விபூதியை கீழே கொட்டுகிறார்கள். 500 ஆண்டுகளாக நடைபெற்று வந்த தருமபுரம் ஆதினம் பட்டினப்பிரவேசத்தை தடுக்கப் பார்க்கிறார்கள். ஆதீனம் என்றால், பதுங்கி கிடக்க முடியாது. ஜால்ரா அடிக்க முடியாது. கடந்த காலங்களில் கோவில்களில் களவு போன சாமி சிலைகளை பிரதமர் மோடி மீட்டு வருகிறார் என்றும் மதுரை ஆதினம் தெரிவித்துள்ளார்.
-
த்ரிஷா பற்றி விஜய் பாதுகாவலர் போட்ட போஸ்ட்.. மொத்த பிரச்சனைக்கும் பதில்! குவியும் கமெண்ட்ஸ் -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
மக்களின் கண்ணோட்டமே உங்களை பிரபலமாக மாற்றுகிறது.. விஜய்க்கு கிருத்திகா உதயநிதி சூசக அட்வைஸ்! -
“ஒரு சாதாரண வக்கீல்” .. சீண்டிய ஜெயலலிதா.. ப.சிதம்பரம் செய்த சம்பவங்கள்! -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
"தமிழ்நாடு உங்களை மறக்காது" ஆளுநரிடம் சொல்லி ஸ்டாலின் தந்த பரிசு பாருங்க! உடனே RN ரவியின் பரவச பதில் -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
அரபு நாடுகள் மீது இனி தாக்குதல் கிடையாது.. மன்னிப்பு கேட்ட ஈரான் அதிபர்! முடிவுக்கு வரும் போர்? -
பக்கத்து நாட்டை தாக்க மாட்டோம்னு சொல்லி.. துபாய் விமான நிலையத்தை அட்டாக் செய்த ஈரான்! ஷாக் வீடியோ -
என்னடா இது அதிமுகவுக்கு வந்த சோதனை.. காலி நாற்காலிகளுடன் கூட்டம்.. நொந்துபோன கௌதமி












Click it and Unblock the Notifications