"காந்தி ஒரு போர் வீரர்.. வழிபடுவது சுலபம்; வழிநடப்பதே வீரம்" கமல்ஹாசன் ட்வீட்!
சென்னை: மாற்றத்தை விரும்பினால் அதை உன்னில் இருந்து தொடங்கு என சொன்ன காந்தி ஒரு போர் வீரர் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
நாட்டின் விடுதலைக்காக போராடிய தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பிறந்தநாள் ஒவ்வொரு ஆண்டும் காந்தி ஜெயந்தியாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இன்று மகாத்மா காந்தியின் 154வது பிறந்தநாள் நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவின் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட தேசிய விடுமுறை நாட்களில் காந்தி ஜெயந்தியும் ஒன்றாகும்.

பிரதமர் மோடி மரியாதை
இவரது பிறந்த நாள் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில், அவரது பிறந்தநாளையொட்டி டெல்லி ராஜ்கோட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், நாடாளுமன்ற சபாநாயகர் ஓம்பிர்லா, காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

முதல்வர் ஸ்டாலின் மரியாதை
இதேபோல் காந்தி ஜெயந்தியையொட்டி சென்னை, எழும்பூர் அருங்காட்சியகத்தில் உள்ள காந்தி சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த காந்தியின் படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என். ரவி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதனை தொடர்ந்து அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர் பாபு, மேயர் பிரியா உள்ளிட்டோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

காந்தி பற்றி கமல்ஹாசன்
இதனைத்தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் உள்ள காந்தி சிலைக்கும் அரசியல் கட்சித் தலைவர்கள், அமைப்புகள் சார்பாக மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், மகாத்மா காந்தி பற்றி குறிப்பிட்டுள்ளார்.

கமல்ஹாசன் ட்வீட்
அந்த பதிவில், மாற்றவேண்டுமென முடிவெடுத்து களமிறங்கிய மறுநிமிடமே நீங்கள் வாரியர். போர் வீரர். மாற்றத்தை விரும்பினால் அதை உன்னிலிருந்து தொடங்கு என சொன்ன காந்தி ஒரு போர் வீரர். இந்த உலகை மாற்றும் வல்லமை எல்லாருக்கும் இருக்கிறது என்பதுதான் காந்தியின் வாழ்வு சொல்லும் செய்தி. அவரை வழிபடுவது சுலபம். அவர் வழிநடப்பதே வீரம் என்று பதிவிட்டுள்ளார்.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications