நான் நிரபராதி! உயர்நீதிமன்ற விழாவில் பங்கேற்றதில் தவறில்லை! அண்ணாமலைக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி!
சென்னை: தன் மீது போடப்பட்ட வழக்குகளில் தாம் நிரபராதி என்பதால், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா கலந்துகொண்ட விழாவில் தாம் பங்கேற்றதில் தவறேதும் இல்லை என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ரகுபதி மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா கலந்துகொள்ளும் நிகழ்ச்சியில் அவரை அனுமதிக்கக் கூடாது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியிருந்தார்.
அந்தக் கடிதத்துக்கு விளக்கும் அளிக்கும் வகையில் புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைக் கூறினார். அதன் விவரம் வருமாறு;

நீதிமன்றம் நிராகரிப்பு
''என் மீது போடப்பட்டுள்ள வழக்குகள் புதுக்கோட்டை நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் ஆகியவற்றால் நிராகரிக்கப்பட்டுவிட்டது. வேண்டுமென்றே கடந்த அதிமுக ஆட்சியில் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது வரை என் மீது உள்ள வழக்குகளின் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை.''

தவறு இல்லை
''இரண்டு நீதிமன்றத்தால் நான் விடுதலை செய்யப்பட்டுள்ளேன். மேல்முறையீடு நிலுவையில் உள்ள நிலையில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் உச்சநீதிமன்ற நீதிபதி கலந்து கொண்ட விழாவில் நான் கலந்து கொண்டது தவறு இல்லை. கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் என்னை பழிவாங்க வேண்டும் என்பதற்காக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.''

வெளிப்படைத்தன்மை
''புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த ஆண்டு பொதுப்பணித் துறை சார்பாக 41 கிலோ மீட்டர் தூரத்திற்கு பாசன கால்வாய் தூர்வாரப்படுகிறது.
விவசாயிகளின் நலனுக்காக தற்போது மாவட்டத்தில் 55 வாய்க்கால்கள் ஒரு கோடியே 17 லட்சம் ரூபாய் மதிப்பில் இந்த ஆண்டு வெளிப்படையாகவும் எந்தவித முறைகேடுகளும் இல்லாமல் தூர்வாரும் பணி நடைபெற உள்ளது. எங்கேயாவது முறைகேடு நடக்கிறது என்று தெரிந்தால் உடனடியாக தகவல் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.''

உச்சநீதிமன்ற கிளை
''திமுக அரசை பொறுத்தவரை தமிழர்களுக்கும் தமிழுக்கும் தான் முன்னுரிமை கொடுக்கப்படும். உச்சநீதிமன்ற கிளை சென்னையில் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் தமிழக முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார் இதுகுறித்து உச்சநீதிமன்றம் தான் முடிவு எடுக்க வேண்டும்.''
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications