இறைவன் சொத்து இறைவனுக்கே... 2 நாட்களில் குயின்ஸ்லேண்ட் நிலம் மீட்கப்படும் -அமைச்சர் சேகர்பாபு
சென்னை: இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமான குயின்ஸ்லேண்ட் நிலம் இன்னும் 2 நாட்களில் மீட்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இறைவன் சொத்து இறைவனுக்கே என்றும் கோயில் நிலங்களை மீட்கும் நடவடிக்கைகளில் இருந்து அரசு ஒரு போதும் பின்வாங்காது எனவும் அவர் உறுதியளித்தார்.
திமுக அரசை பொறுத்தவரை நெருங்க முடியாத இடம் என்று ஒன்றுமே கிடையாது என்றும் அவர் தெரிவித்தார்.

குத்தகை நிலம்
சென்னை பூந்தமல்லியை அடுத்த பாப்பன்சத்திரத்தில் குயின்ஸ்லேண்ட் என்ற பொழுதுப்போக்கு பூங்கா இயங்கி வருகிறது. நீர்ச்சறுக்கு, ராட்சத ராட்டினம், நீச்சல் குளம் என கட்டமைக்கப்பட்டுள்ள இந்த பூங்காவுக்குள் நுழைய நுழைவுக்கட்டணமாக நபர் ஒருவருக்கு ரூ.400 வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. வேணுகோபால் சுவாமி கோயிலுக்கு சொந்தமான இந்த 21 ஏக்கர் நிலம் குத்தகை அடிப்படையில் ராஜம் ஹோட்டல்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

கோயில் நிலம்
குத்தகை காலம் முடிவுற்ற பின்னரும் நிலத்தை தொடர்ந்து ஆக்கிரமித்து வைத்துக்கொண்டு அதில் புதிது புதிதாக கட்டமைப்புகளை உருவாக்கி வந்தது குறிப்பிடத்தக்கது. இதனிடையே நீண்ட நாட்களாக இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், குயின்ஸ்லேண்ட் தரப்பு மனுவை நிராகரித்த நீதிமன்றம், கோயில் நிலத்தை மீட்குமாறு இந்துசமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டது.

குறுக்கீடுகள்
ஏற்கனவே தமிழகம் முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கோயில் நிலங்களை மீட்கும் பணியில் இந்துசமய அறநிலையத்துறை ஈடுபட்டு வரும் சூழலில், குயின்ஸ்லேண்ட் நிலத்தையும் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனிடையே அதன் உரிமையாளர் தேசியக் கட்சி ஒன்றில் முக்கியப் பொறுப்பில் இருப்பதால் அவர் மூலம் சில குறுக்கீடுகள் இருந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
Recommended Video

இறைவன் சொத்து
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, குயின்ஸ்லேண்ட் நிலம் மீட்கப்படுவது உறுதி அதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம் எனக் கூறியிருக்கிறார். இறைவன் சொத்து இறைவனுக்கே என்பதில் இந்து சமய அறநிலையத்துறை உறுதியாக இருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார். அமைச்சர் சேகர்பாபு கூறுவதை வைத்து பார்த்தால், ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்கும் நடவடிக்கை இன்னும் வேகமெடுக்கும் எனத் தெரிகிறது.

கலக்கம்
இதனிடையே காலம் காலமாக கோயில் சொத்தை ஆக்கிரமித்து வயிறு வளர்த்து வந்த சிலர், அமைச்சர் சேகர்பாபு காட்டும் வேகத்தை கண்டு கலக்கம் அடைந்துள்ளனர். இதனால் நீதிமன்றம் மூலம் தடை பெறுவது குறித்த நடவடிக்கையில் ஆக்கிரமிப்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications