Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாற்றமில்லை.. 178 வது நாளாக ஒரே விலையில் விற்பனையாகும் பெட்ரோல், டீசல்.. வாகன ஓட்டிகள் நிம்மதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் இன்று 178வது நாளாக பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி நீடித்து வருகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்துக்கு மத்தியில் பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் காணாததால் வாகன ஓட்டிகள் நிம்மதியடைந்துள்ளனர்.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், விலை மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன. அதன்படி கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் பெட்ரோல், டீசலின் விவை 24 மணிநேரத்துக்கு ஒருமுறை மாற்றப்பட்டு வருகிறது.

தொடர்ந்து உயர்வு

தொடர்ந்து உயர்வு

இந்தியாவில் சமீபகாலமாக பெட்ரோல், டீசல் விலை கிடுகிடுவென உயர்ந்து ஒரு லிட்டரின் விலை ரூ.110யை தொட்டது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். மேலும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதையடுத்து மத்திய, மாநில அரசுகள் விலை குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டன.

100யை கடந்து விற்பனை

100யை கடந்து விற்பனை

அதாவது தமிழக பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பால் பெட்ரோல் விலையில் 3 ரூபாய் குறைக்கப்பட்டது. மே 21ல் ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் மத்திய அரசு பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 9 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 7.50 ரூபாயும் குறைக்கப்படும் என அறிவித்தார். இதனையடுத்து கடந்த மே 22ம் தேதி முதல் பெட்ரோல் டீசல் விலை குறைந்தது. இதையடுத்து ஓரளவு எரிபொருட்களின் விலை குறைந்தது. இருப்பினும் தற்போதும் ஒரு லிட்டர் பெட்ரோல், டீசலின் விலை ரூ.100யை கடந்து விற்பனையாகிறது.

மாற்றம் இல்லை

மாற்றம் இல்லை

கடந்த 2 மாதமாக தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. இன்று (நவம்பர் 15) தமிழகத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனையானது. சென்னையிலும் இதே விலை நீடிக்கிறது. இதன்மூலம் பெட்ரோல், டீசல் தொடர்ந்து மாற்றமின்றி 178வது நாளாக ஒரே விலையில் விற்பனையாகி வருகிறது.

வாகன ஓட்டிகள் நிம்மதி

வாகன ஓட்டிகள் நிம்மதி

தற்போது பால் உள்பட பல அத்தியாவசிய பொருட்களின் விலை என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனால் பெட்ரோல், டீசல் விலை என்பது அதிர்ஷ்டவசமாக உயரவில்லை. தொடர்ந்து 178 வது நாளாக ஒரே விலையில் நீடித்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் நிம்மதியடைந்துள்ளனர். ஆயினும் கூட தற்போதைய விலைவாசி உயர்வுக்கு மத்தியில் பெட்ரோல், டீசல் விலையை இன்னும் குறைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+