TVK Panaiyur: தவெகவினர் அராஜகம் பண்றாங்க.. இதுக்கு மேல சும்மா இருக்கமாட்டோம்.. கொந்தளித்த பனையூர் மக்கள்
சென்னை: வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்பும் தவெகவினர் சென்னை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் விருப்பமனு இன்று முதல் வாங்கலாம் என்று கட்சி தலைமை அறிவித்துள்ளது. இந்த விருப்பமனுவை பெற ஒரே நேரத்தில் ஏராளமானவர்கள் குவிந்ததால் அங்குள்ள மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தவெகவினர் அராஜகம் செய்கின்றனர். இதுக்கு மேல சும்மா இருக்கமாட்டோம் என்று வார்னிங் கொடுத்துள்ளனர்.
நடிகர் விஜயின் தவெக கட்சி வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட விரும்பும் தவெகவினர் கட்சியில் விருப்பமனு வழங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி தவெகவினர் இன்று முதல் வரும் 14ம் தேதி வரை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் விருப்பமனு பெற்று கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தினமும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை விருப்ப மனுக்களை பெறலாம் என்று கட்சி தலைமை அறிவித்தது.
விருப்ப மனு வாங்க கூட்டம்
முதல் நாளான இன்று காலை 12 மணிக்கு விருப்பமனு வழங்கும் பணி தொடங்கியது. இந்த விருப்பமனுவை பெற கட்சி நிர்வாகிகள் ஏராளமானவர்கள் காலை முதல் குவிந்தனர். ஒவ்வொருவரும் போட்டி போட்டு கொண்டு விருப்ப மனுவை வாங்கி சென்றனர். பலரும் தங்களின் தொகுதியில் விஜய் போட்டியிட வேண்டும் என்பதை தெரியப்படுத்தம் வகையில் விருப்பமனுவை பெற்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதனால் பனையூர் கட்சி அலுவலகம் மற்றும் அதன் முன்பு உள்ள சாலைகளில் தவெகவினர் நிறைந்து காணப்பட்டனர். இதனால் அந்த சாலையை மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
அலுவலகம் முன் மக்கள் கோபம்
இது அங்குள்ள மக்களை கோபப்படுத்தியது. இதனால் பொதுமக்கள் தவெக அலுவலகம் முன்பு வந்து எதிர்ப்பை பதிவு செய்தனர். அப்போது பெண் ஒருவர், ‛‛இந்த முழு ஏரியாவையும் அவர்கள் பிளாக் செய்துள்ளனர். யாரையும் வரவிடாமல் செய்கிறார்கள்.
நாங்கள் இங்கு வாழ்ந்து வருகிறோம். இப்படி இடையூறு செய்தால் நாங்கள் எப்படி சமாளிப்போம். கார்களை எல்லாம் இடையூறாக பார்க் செய்துள்ளனர். நாங்கள் எதையுமே வேண்டாம் என்று சொல்லவில்லை. மற்றவர்களுக்கு தொந்தரவாக இருக்க கூடாது'' என்று கூறினார்.
அராஜகம் பண்றாங்களாம்
இன்னொரு பெண் கூறுகையில், ‛‛தவெகவினர் அராஜகம் பண்றாங்க.. அராஜகத்தை தாங்கவே முடியவில்லை. இவங்க என்ன பண்ணிகிட்டு இருக்காங்க இங்க.. ரோட்டில் எப்படி நிற்கிறாங்க பாருங்க. இதுக்கு மேல நாங்க சும்மா இருக்க போறது இல்லை.
ECR-யில் அமைதியாக இருக்கலாம் என்று தான் செலவு செய்து இங்கு வந்து வாழ்கிறோம். மேடம் நாங்க உங்க காரை மட்டும் அனுமதிக்கிறோம் என்கிறார்கள். யாரு இவங்க எங்க காரை அனுமதிக்கிறதுக்கு.. நாங்க இங்கேயே குடியிருக்கிறவங்க.. இவங்க எங்க காருக்கு அனுமதி கொடுப்பாங்களாம்.. என்ன இதெல்லாம்?'' என்று கொந்தளித்தார்.
குப்பையை வீசிவிட்டு
மற்றொரு பெண் கூறுகையில், ‛‛வீட்டுக்கு முன்பு கார் பார்க் செய்கிறார்கள். சாப்பிட்டுவிட்டு குப்பையை தெரு முழுவதும் போட்டுவிட்டு செல்கின்றனர். இப்போது தான் 3 நாளுக்கு முன்பு மீட்டிங் நடந்தது. இன்று மீண்டும் தொடங்கிட்டாங்க'' என்று கோபத்தை வெளிப்படுத்தினார்.
-
கொங்கு மண்டல பிரச்சாரத்தின் போது செங்கோட்டையன் வீட்டில் தங்கும் விஜய்.. புலம்பும் ஆதவ் அர்ஜுனா! -
10 சீட்டுகளை வெல்லும் தவெக.. 23.9 சதவிகித வாக்குகளை கைப்பற்றும் விஜய்.. லோக்போல் கருத்துக்கணிப்பு -
விஜய்க்கு பாதுகாப்பு கொடுங்க.. மத்திய அரசுக்கு பதில் மணிப்பூர் ஆளுநருக்கு கடிதம் எழுதிய தவெக! -
முத்தம் கொடுத்து விஜய் சொன்ன வார்த்தை..விஜய் தான் பெரிய நம்பிக்கை! தவெக வேட்பாளர் ஸ்ரீநாத் ஓபன் டாக் -
திமுக, அதிமுக, தவெக தேர்தல் வாக்குறுதிகள்.. தமிழ்நாட்டின் வருமானம் என்ன.. நிறைவேற்ற முடியுமா? -
Vijay: உங்கள் விஜய்.. நா வரேன்.. விசிலடிக்க ரெடியா? தவெகவின் தேர்தல் பிரச்சார பாடல் வெளியீடு! -
திருச்சியில் விஜய் பேசிக்கொண்டிருக்கும்போதே சரிந்த பெண்கள்! பரப்புரை கூட்டத்தில் நடத்த சம்பவம்! -
TVK Vijay in Trichy LIVE: மகளிருக்கு மாதம் ரூ.2,500.. சொன்ன மாதிரி கொடுப்போம்.. விஜய் பேச்சு -
150 கட்சிகளுடன் கூட்டணி வைத்திருக்கும் விஜய்! அடித்து சொன்ன சீமான்! இதை கவனிச்சீங்களா! -
'ஜெ' வின் பூர்வீக பூமி ஸ்ரீரங்கம்..! 'ஜெயா'வுக்கு மறுவாழ்வு அளித்த திருச்சி- விஜய் கணக்குப் புரிகிறதா? -
Seeman: என்னாது 150 கட்சிகளுடன் விஜய் கூட்டணியா? சீமான் சொன்ன அந்த வார்த்தை! -
55% வாக்கு இலக்கு.. விஜய் குறைத்து மதிப்பிடுகிறார்! டேட்டாவுடன் சொல்லும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்












Click it and Unblock the Notifications