'நேரத்தை தாறுமாறாகச் செலவழிப்பவன் ஊசிப்பாறையில் பெய்த மழையை போன்றவன்'.. வைரமுத்து ட்வீட்
சென்னை: சொற்களையும், நேரத்தையும் தாறுமாறாகச் செலவழிப்பவன் ஊசிப் பாறையில் பெய்த
மழையைப் போலஓரிடத்தும் தங்காமல் ஒழுகிப் போவான் கவிஞர் வைரமுத்து டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளார்.

கவிஞர் வைரமுத்து டுவிட்டரில் மக்களுக்கு பயனுள்ள நல்ல கருத்துகளை கூறுவதை வழக்கமாக கொண்டுள்ளார். நெற்றித்தீ என்னும் தலைப்பில் தொடர்ந்து கருத்துக்களை கூறி வருகிறார் இந்த நிலையில் இன்று அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது:-

நெற்றித்தீ - 15
தண்ணீரையும் சொற்களையும்
நேரத்தையும் ஊதியத்தையும்
தாறுமாறாகச் செலவழிப்பவன் -
ஊசிப் பாறையில் பெய்த
மழையைப் போல
ஓரிடத்தும் தங்காமல்
ஒழுகிப் போவான்
கவிஞர் வைரமுத்துவின் இந்த கருத்துக்கு நெட்டிசன்கள் பல்வேறு கமெண்ட்கள் செய்து வருகின்றனர். ''முற்றிலும் உண்மை கவி பேரரசு அவர்களே!!! நேரத்தை தான் ஒழுக்கமற செலவழிக்க முயன்று வருகிறேன்.
நாம் நேரத்தை ஒழுக்கமாய் கடைபிடித்தால் நம்மை ஒருவிதமாய் பார்க்கிறார்கள்'' என்று ஒரு நெட்டிசன் கூறியுள்ளார்.
''இனிமையான வரிகள் சார்'' ''நெஞ்சினிலே ஊசியை போல தைத்தது உங்கள் வரிகள்'' என்றும் நெட்டிசன்கள் கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications