பொள்ளாச்சி கொடூரத்தை கண்டித்து ஒரு வார்த்தை கூட பேசாமல் திரும்பிப் போன ராகுல்!
தமிழகம் வந்திருக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மூலம் பொள்ளாச்சி பாலியல் குற்ற வழக்கு இந்திய அளவில் பெரிதாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Recommended Video
சென்னை: தமிழகம் வந்திருந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பொள்ளாச்சி பாலியல் குற்ற வழக்கு குறித்து எதுவும் பேசாமல் அமைதி காத்து இருக்கிறார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று தமிழகம் வந்தார். நாகர்கோவில் கிறிஸ்தவ கல்லூரி மைதானத்தில் இன்று மாலை காங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டம் நடந்தது.
அதில் கலந்து கொண்டு பேசினார். காலையில் சென்னையில் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி மாணவிகள் முன்னிலையில் பேசினார்.
லெஸ்பியனா இருக்கலாமா.. சென்னை பெண் டாக்டரை பேசியே மடக்கிய திருநாவுக்கரசு.. பகீர் தகவல்கள்!
பொள்ளாச்சி விவகாரம்
பொள்ளாச்சி பாலியல் வழக்கு தமிழகத்தில் பெரிய பிரச்சனையாகி இருக்கிறது. இதில் சரியான விசாரணை நடத்த வேண்டும் என்று திமுக நேற்றுதான் பெரிய போராட்டம் நடத்தியது. கனிமொழி எம்.பி தலைமையில் நடந்த இந்த போராட்டத்திற்கு மக்கள் பொள்ளாச்சியில் பெரிய ஆதரவு அளித்தனர்.
ஆனால் இல்லை
ஆனாலும் கூட இன்னும் இந்த பிரச்சனை குறித்து தேசிய ஊடகங்கள் குரல் எழுப்பவில்லை. தமிழகம் தாண்டி இந்த பிரச்சனை வெளியில் எங்குமே கேட்கவில்லை என்றுதான் கூற வேண்டும். முக்கியமாக வடஇந்திய ஊடகங்கள் இதுகுறித்து இதுவரை பெரிய எந்த ஒரு செய்தியும் வெளியிடவில்லை.
கேள்வி மேல்
இது பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. இந்த நிலையில்தான் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் தமிழக வருகை பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. சென்னையில் செய்தியாளர்களை சந்திக்கும் ராகுல் காந்தி இந்த பிரச்சனை குறித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
பேசினால் என்ன ஆகு
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரண்டு வருடங்களுக்கு பின் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். கடைசியாக அவர் 2016ல் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். ஆனால் இன்று அவர் பொள்ளாச்சி குறித்து எதுவும் பேசவில்லை. பொள்ளாச்சி பிரச்சனை குறித்து சிறிய வார்த்தை கூட அவர் பேசவில்லை.
பெண்கள் பாதுகாப்பு
காலையில் சென்னையில் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி மாணவிகள் முன்னிலையில் பேசினார்.அப்போது பெண் பாதுகாப்பு, பெண்கள் முனேற்றம்ம் குறித்து பேசினார். ஆனால் அப்போதும் கூட பெண்களின் வாழ்க்கையை நாசமாக்கிய, தமிழகத்தின் மிக முக்கிய பிரச்சனையான பொள்ளாச்சி பிரச்சனை குறித்து ராகுல் காந்தி பேசவில்லை.