ரஜினிகாந்த் முதல் சரத்குமார் வரை! லோக்சபா தேர்தலில் காலையிலேயே வாக்களித்த நடிகர்களின் லிஸ்ட்
சென்னை: தமிழக லோக்சபா தேர்தலில் இதுவரை ஓட்டு போட்ட நடிகர், நடிகைகள் யார் யார் என்பது தெரியுமா?
தமிழகத்தில் லோக்சபா தேர்தல் முதல் கட்டமாக இன்று நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்காக காலை 7 மணிக்கு வாக்கு பதிவு தொடங்கியது. மாலை 6 மணி வரை வரிசையில் நிற்பவர்கள் அனைவரும் வாக்களிக்கலாம்.

தமிழகத்தில் மொத்தம் வாக்காளர்கள் 6.23 கோடி பேர் உள்ளனர். முதல் முறை வாக்காளர்கள் 10.92 லட்சம் பேர் உள்ளனர். அது போல் சிவிஜில் செயல் மூலம் 4,861 புகார்கள் வந்தன. அவற்றில் 22 புகார்கள் மட்டுமே நிலுவையில் உள்ளன. மற்றவை தீர்வு காணப்பட்டன.
தமிழகத்தில் இன்று நடைபெறும் மக்களவை தேர்தல் வாக்குப் பதிவு பாதுகாப்பு பணியில் 1.3 லட்சம் காவலர்கள் ஈடுபடுத்தப்படுவர். தமிழகத்தில் 68,321 வாக்குச் சாவடிகள் உள்ளன. இவற்றில் பதற்றமான வாக்குச் சாவடிகளாக 8050, மிகவும் பதற்றமான வாக்குச் சாவடிகளாக 183 கண்டறியப்பட்டுள்ளன.
இந்த தேர்தலுக்கு மொத்தம் 1.58 லட்சம் வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் இன்று வாக்குப் பதிவு தொடங்கியதுமே முதல் ஆளாக அஜித் தனியாக வந்து வாக்கை செலுத்தினார். அவர் திருவான்மியூரில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார்.
அஜித் வெள்ளை நிற சட்டை அணிந்து கொண்டு நீல நிற ஜீன்ஸ் பேண்டை அணிந்திருந்தார். கருப்பு நிற கூலிங் கிளாஸ் அணிந்து வந்தார். கருப்பு எஸ்யூவி காரில் வந்தார். அது போல் இதுவரை நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவி ஆர்த்தியுடன் வந்து வாக்களித்தார்.
அது போல் நடிகர் சரத்குமார், நடிகை ராதிகா ஆகியோர் கொட்டிவாக்கத்தில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தனர். மேலும் நடிகர் கார்த்திக், அவருடைய மகன் கவுதம் கார்த்திக் ஆகியோர் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தனர். தற்போது நடிகர் ரஜினிகாந்தும் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார்.












Click it and Unblock the Notifications